Skip to main content

தைவானை சுற்றிவளைக்கத் தயாராகும் சீனா... போர் அபாயம் எழுகிறதா?!

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அதற்குப் பின்னால், சீனா போர் விமானங்களை அனுப்பியதால், தற்போது அங்கு போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தங்களை அச்சுறுத்திவருவதாக சீனா மீது தைவான் குற்றம்சாட்டியிருக்கிறது.

நான்சி பெலோசி

1927-ம் ஆண்டு முதல் 1949 வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதன்பிறகு, பல தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய தைவான், தனிநாடாக உருவெடுத்தது. அந்த நாட்டை சீனா அங்கீகரிக்க மறுக்கிறது. இப்போதும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதிதான் என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், தைவானுடன் மற்ற நாடுகள் நட்பு பாராட்டுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

உலக அரசியலில் இரு துருவங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்துவரும் நிலையில், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துவருகிறது. சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி, தைவானுடனான நட்புறவை அமெரிக்கா தொடர்ந்துவருகிறது. மேலும், சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது அமெரிக்கா. இந்தச் சூழலில், சீனாவின் எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி நான்சி பெலோசி தைவான் சென்றார். அவரது பயணத்தையொட்டி, ​​ஒரு விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட நான்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவானின் கிழக்கே நிலைநிறுத்தப்பட்டன. யுஎஸ்எஸ் ரொனால்டு ரீகன் என்ற விமானம் தாங்கி கப்பல், தென் சீனக் கடலைக் கடந்து பிலிப்பைன்ஸ் கடலில் நிலைநிறுத்தப்பட்டது. என்று அமெரிக்க கடற்படை அதிகாரி செவ்வாயன்று ராய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தினார். அது, சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

தைவான்

அதைத் தொடர்ந்து, சீன ராணுவம் தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து மிகப்பெரிய அளவில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் பயிற்சி தங்கள் மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகை என்று தைவான் குற்றம் சாட்டியது. இதனால், இரு நாடுகள் இடையே போர்ப் பதற்றம் உருவானது. இந்த நிலையில், தைவானுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்ட மசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் கையெழுத்திட்டார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தைவான் வரவேற்க, சீனா அதை வன்மையாக கண்டித்தது. மேலும், தைவானை மிரட்டும் விதமாக கடந்த வாரம் தைவானை நோக்கி 39 போர் விமானங்களையும், மூன்று போர்க் கப்பல்களையும் சீனா அனுப்பியது. இதனால், இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் உருவானது.

தைவானை சுற்றிய வான் பரப்பிலும், நீர்ப் பரப்பிலும் கடுமையான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டதாக சீன ராணுவம் கூறியது. அமெரிக்காவிடமிருந்தும் தைவானிலிருந்தும் அதிகரித்துவரும் ஆத்திரமூட்டலுக்கு சீன ராணுவத்தின் உறுதியான பதில் இதுதான் என்று சீன ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்க சீன ராணுவம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

சீனா - தைவான்

இந்த நிலையில், டிசம்பர் 25-ம் தேதி காலை 6 மணியிலிருந்து டிசம்பர் 26-ம் தேதி காலை 6 மணி வரை தைவானை நோக்கி 71 போர் விமானங்களையும், ஏழு போர்க் கப்பல்களையும் சீனா அனுப்பியதாக தைவான் ராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த நிலையில், தனது இறையாண்மையையும் நாட்டின் எல்லையையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று சீன ராணுவம் கூறியிருக்கிறது.

சீனாவின் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் தைவானை சுற்றிவளைத்திருந்தாலும், அது போராக மூளுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது. தைவான் கூறுவதைப்போல, அந்த நாட்டை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு நடவடிக்கையில் சீனா இறங்கியிருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...