Skip to main content

தைவானை சுற்றிவளைக்கத் தயாராகும் சீனா... போர் அபாயம் எழுகிறதா?!

தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அதற்குப் பின்னால், சீனா போர் விமானங்களை அனுப்பியதால், தற்போது அங்கு போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. தங்களை அச்சுறுத்திவருவதாக சீனா மீது தைவான் குற்றம்சாட்டியிருக்கிறது.

நான்சி பெலோசி

1927-ம் ஆண்டு முதல் 1949 வரை சீனாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதன்பிறகு, பல தீவுக் கூட்டங்களை உள்ளடக்கிய தைவான், தனிநாடாக உருவெடுத்தது. அந்த நாட்டை சீனா அங்கீகரிக்க மறுக்கிறது. இப்போதும் தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதிதான் என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. மேலும், தைவானுடன் மற்ற நாடுகள் நட்பு பாராட்டுவதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.

உலக அரசியலில் இரு துருவங்களாக அமெரிக்காவும் சீனாவும் இருந்துவரும் நிலையில், தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துவருகிறது. சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி, தைவானுடனான நட்புறவை அமெரிக்கா தொடர்ந்துவருகிறது. மேலும், சீனாவின் எதிர்ப்பை மீறி தைவானுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது அமெரிக்கா. இந்தச் சூழலில், சீனாவின் எதிர்ப்பை மீறி கடந்த ஆகஸ்டு மாதம் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். அதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி நான்சி பெலோசி தைவான் சென்றார். அவரது பயணத்தையொட்டி, ​​ஒரு விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட நான்கு அமெரிக்க போர்க்கப்பல்கள் தைவானின் கிழக்கே நிலைநிறுத்தப்பட்டன. யுஎஸ்எஸ் ரொனால்டு ரீகன் என்ற விமானம் தாங்கி கப்பல், தென் சீனக் கடலைக் கடந்து பிலிப்பைன்ஸ் கடலில் நிலைநிறுத்தப்பட்டது. என்று அமெரிக்க கடற்படை அதிகாரி செவ்வாயன்று ராய்ட்டர்ஸிடம் உறுதிப்படுத்தினார். அது, சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

தைவான்

அதைத் தொடர்ந்து, சீன ராணுவம் தைவானை நாலாபுறமும் சுற்றிவளைத்து மிகப்பெரிய அளவில் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் பயிற்சி தங்கள் மீது போர் தொடுப்பதற்கான ஒத்திகை என்று தைவான் குற்றம் சாட்டியது. இதனால், இரு நாடுகள் இடையே போர்ப் பதற்றம் உருவானது. இந்த நிலையில், தைவானுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்ட மசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் கையெழுத்திட்டார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தைவான் வரவேற்க, சீனா அதை வன்மையாக கண்டித்தது. மேலும், தைவானை மிரட்டும் விதமாக கடந்த வாரம் தைவானை நோக்கி 39 போர் விமானங்களையும், மூன்று போர்க் கப்பல்களையும் சீனா அனுப்பியது. இதனால், இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் உருவானது.

தைவானை சுற்றிய வான் பரப்பிலும், நீர்ப் பரப்பிலும் கடுமையான போர்ப்பயிற்சியில் ஈடுபட்டதாக சீன ராணுவம் கூறியது. அமெரிக்காவிடமிருந்தும் தைவானிலிருந்தும் அதிகரித்துவரும் ஆத்திரமூட்டலுக்கு சீன ராணுவத்தின் உறுதியான பதில் இதுதான் என்று சீன ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். மேலும், தேசிய இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதியுடன் பாதுகாக்க சீன ராணுவம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

சீனா - தைவான்

இந்த நிலையில், டிசம்பர் 25-ம் தேதி காலை 6 மணியிலிருந்து டிசம்பர் 26-ம் தேதி காலை 6 மணி வரை தைவானை நோக்கி 71 போர் விமானங்களையும், ஏழு போர்க் கப்பல்களையும் சீனா அனுப்பியதாக தைவான் ராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்த நிலையில், தனது இறையாண்மையையும் நாட்டின் எல்லையையும் பாதுகாப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று சீன ராணுவம் கூறியிருக்கிறது.

சீனாவின் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் தைவானை சுற்றிவளைத்திருந்தாலும், அது போராக மூளுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது. தைவான் கூறுவதைப்போல, அந்த நாட்டை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படியொரு நடவடிக்கையில் சீனா இறங்கியிருக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...