Skip to main content

Doctor Vikatan: தொடைப்பகுதி மற்றும் அந்தரங்கப் பகுதியின் கருமையைப் போக்க முடியுமா?

Doctor Vikatan: எனக்கு இன்னும் 6 மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது. என்னுடைய தொடைப்பகுதியும் அந்தரங்கப் பகுதியும் மிகவும் கருத்துப் போயிருக்கின்றன. இந்தப் பகுதி சருமத்தை நிறம் மாற்ற பிரத்யேக சிகிச்சைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது குறித்து விளக்க முடியுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

இந்தியப் பெண்களைப் பொறுத்தவரை பலருக்கும் தொடைப்பகுதி சற்று பெரிதாக இருப்பதைப் பார்க்கலாம். அதன் காரணமாக தொடைகள் ஒன்றோடு ஒன்று உரசும். பருமனான பெண்களுக்கு இந்தப் பிரச்னை இன்னும் சற்று அதிகமாகவே இருக்கும். தொடைகள் உரசி, உரசி அந்த இடம் கருத்துப்போகும்.

இதைத் தவிர்க்க முதல் வேலையாக காற்றோட்டமான, தளர்வான உள்ளாடைகளை அணிய வேண்டும். இறுக்கமான உள்ளாடைகள், லெக்கிங்ஸ், ஜீன்ஸ் போன்றவற்றை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

உள்ளாடைகளை நன்கு துவைத்து, கொஞ்சம்கூட ஈரமின்றி காயவைத்து, முடிந்தால் அயர்ன் செய்து அணிவது சிறப்பு. ஆன்டிஃபங்கல் பவுடர் போட்டுக் கொண்டு அதன் பிறகு உள்ளாடை அணிவதன் மூலம் அந்தப் பகுதியில் வியர்வை தங்குவது தவிர்க்கப்படும். வியர்வை தங்கினால்தான் இன்ஃபெக்ஷன் வரும்.

பிறப்புறுப்புப் பகுதியின் கருமையைப் போக்க முடியுமா என்ற கேள்வியோடு நிறைய இளம்பெண்கள் வருகிறார்கள். தென்னிந்தியர்களின் சருமத்தில் அந்த நிறத்துக்கு காரணமான மெலனின் செல்கள் சற்று அதிகமாகத்தான் இருக்கும். அதனால் நம் சரும நிறம் மாநிறத்திலும் அந்தரங்க உறுப்புகளின் சருமமானது அதைவிட ஒன்றிரண்டு ஷேடு இன்னும் டார்க்காகவோ இருக்கக்கூடும்.

தொடை

இந்தக் கருமையைப் போக்குவதற்காக க்ரீமோ, ப்ளீச்சோ, சிகிச்சையோ செய்வதன் மூலம் அந்தப் பகுதி சருமத்துக்கு மேலும் பாதிப்பையே நாம் ஏற்படுத்துகிறோம். அந்தரங்க உறுப்புகளில் ஃபங்கல் இன்ஃபெக்ஷன் வராமல் பார்த்துக் கொள்வதும், அந்த இடத்து ரோமங்களை ட்ரிம் செய்துவிடுவதும், சுத்தமான உள்ளாடைகளை அணிவதும்தான் ஆரோக்கியத்துக்கு அடிப்படை.

எனவே தேவையற்ற தகவல்களை நம்பி அந்தரங்கப் பகுதியின் சரும நிறத்தை மாற்ற நினைப்பது தேவையற்றது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

மதச் சுதந்திர அறிக்கை: இந்தியா குறித்து அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வதென்ன?!

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட, 2023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த ஆய்வறிக்கையில், ``சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள், கொலைகள், வழிபாட்டு தளங்களை சேதப்படுத்துதல் உள்ளிட்டவை அதிகரித்திருக்கிறது.அமெரிக்கா முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், அடிப்படையில் பாரபட்சமான சட்டம் என ஐ.நா குறிப்பிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தியது, சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவது என்ற பெயரில் இஸ்லாமிய சொத்துக்களை இடிப்பது, ரயிலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக மூன்று முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவது, சில நேரங்களில் அது கொலையில்...