Skip to main content

கின்னஸ் சாதனை பூனை முதல் மலேசியாவின் பிரதமரான அன்வர் இப்ராஹிம் வரை... உலக செய்திகள் ரவுண்ட்அப்!

தெற்கு ரஷ்ய நகரமான கிரிம்ஸ்கில் உள்ள ஒரு ஷாப்பிங் சிட்டியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் இறந்ததாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.பிரான்ஸ் நாடாளுமன்றம் கருக்கலைப்பு உரிமையை அரசியலமைப்பில் சேர்க்க நாடாளுமன்றத்தில் பிரான்ஸ் வாக்களிக்கவிருக்கிறது. அமெரிக்கா மற்றும் போலாந்தின் சட்ட மாற்றத்திற்குப் பிறகு இந்த முயற்சியை பிரான்ஸ் எடுத்திருக்கிறது. முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மீது பாலியல் குற்றம் சாட்டிய எழுத்தாளர் ஜீன் கேரோல், அவருக்கு எதிராக இரண்டாவது வழக்கையும் தாக்கல் செய்திருக்கிறார். 25 வருட போராட்டத்துக்குப் பிறகு மலேசியாவின் 10- வது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றார். இங்கிலாந்தில் 26 வருடங்கள் 329 நாள்கள், அதாவது கிட்டத்தட்ட 120 மனித ஆண்டுகளுக்கு சமமான "ஃபாளாசி" என்ற பூனையை 'உலகின் வயதான பூனை 'என்று கின்னஸ் உலக நிறுவனம் அறிவித்திருக்கிறது. பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனீர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் தற்போது CSL Behring's Hemgenix-hemophilia B மரபணு சிகிச்சைக்கு அனுமதி அளித்து, இதை உலகின் மிக விலை உயர்ந்த மருந்தாக உருவாக்கியிருக்கின்றனர். இந்த மருந்தின் விலை , இந்திய ரூபாயில் 28.58 கோடி மதிப்புடையது. துருக்கியின் வட மேற்கு பகுதியில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது. இதில் 68 பேர் காயமடைந்தனர் எனக் கூறப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவருடைய மனைவியான அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இங்கிலாந்தின் "ஆசிய பணக்காரர்கள் பட்டியல் 2022" -ல் ('Asian Rich List 2022') இடம்பிடித்திருக்கின்றனர். அமெரிக்காவில், வால்மார்ட் மேலாளர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொல்லப்பட்ட ஆறு பேரில், ஐந்து பேரை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து அரசின் அனுமதியின்றி சுதந்திரம் குறித்த புதிய வாக்கெடுப்புகள் நடத்த ஸ்காட்லாந்துக்கு அதிகாரம் இல்லை என்று இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
http://dlvr.it/SdP11Q

Comments

Popular posts from this blog

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...