Skip to main content

Doctor Vikatan: புருவங்களில் தோன்றும் நரைமுடி... காரணமும் தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: என் வயது 35. தலையில் நரைமுடிகள் இருக்கின்றன. ஆனால் எனக்கு அது பிரச்னையில்லை. புருவங்களில் உள்ள ரோமங்களும் ஒன்றிரண்டு நரைக்கத் தொடங்கியிருப்பது கவலையை அளிக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதை குணப்படுத்த என்ன வழி?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமம் மற்றும் கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்...

சருமம், கூந்தல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் தலத் சலீம்

புருவங்களில் உள்ள ரோமங்கள், கண் இமைகள், உடல் ரோமங்கள் ஆகியவை நரைப்பதை 'போலியாசிஸ்' (Poliosis) என்கிறோம். இந்தப் பகுதிகளில் உள்ள முடிகளில் மெலனின் எனப்படும் நிறமியே இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

கூந்தல் நுண்ணறைகள் பலவீனமாக இருப்பபது, நிறமி செல்களில் ஏற்படுகிற ஆட்டோஇம்யூன் குறைபாடு, மெலனின் உற்பத்தியில் ஏற்படுகிற பிறவிக் கோளாறு போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். குடும்பப் பினனணி, வைட்டமின் பி 12 குறைபாடு, வைட்டமின் டி குறைபாடு, இதர ஊட்டச்சத்துகளின் குறைபாடு போன்றவையும் காரணமாகலாம்.

தீவிரமான பூஞ்சைத் தொற்றின் காரணமாக, சருமத்தின் ஒரு பகுதியில் உள்ள ரோமங்கள் நிரந்தரமாக வெள்ளையாக மாறலாம். மிகப்பெரிய காயம் ஏற்பட்ட பிறகும், அக்கி பாதிப்புக்குப் பிறகும், ரேடியோதெரபிக்கு பிறகும்கூட சருமத்தின் முடிகள் இப்படி வெள்ளையாக மாறலாம். சிலருக்கு அதீத மன அழுத்தம், கவலை மற்றும் மனநலம் பாதிக்கப்படுவதன் விளைவாகவும் இப்படி ஆகலாம்.

யூமெலனின் மற்றும் பியோமெலனின் ஆகிய நிறமிகள்தான் முடிக்கு கறுமை நிறத்தைக் கொடுப்பவை. இவற்றில் பியோமெலனின் என்பவை ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைக் கொடுப்பவை. யூமெலனின் என்பது பிரவுன் அல்லது கறுப்பு நிறத்தைக் கொடுப்பவை. இவை எல்லாம் இணைந்துதான் கூந்தலுக்கு அதன் இயல்பான நிறம் வருகிறது. மெலனோசைட்ஸ் என்பவைதான் மெலனின் உற்பத்தி செல்கள். இவைதான் மெலனின் நிறமித் தொகுப்புக்குக் காரணம்.

Eyebrows

இளவயதிலேயே இப்படி புருவங்கள், இமைகளில் நரை ஏற்பட்டால், மருத்துவரை அணுகி, ஒட்டுமொத்த உடல் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, தேவைப்பட்டால் சருமம் மற்றும் நரம்புகளுக்கான பரிசோதனைகள் போன்றவற்றைச் செய்து பார்க்க வேண்டும். மருத்துவர் உங்களுக்கு போலியாசிஸ் இருப்பதை உறுதிசெய்தால் அதற்கான சிகிச்சைகளைப் பரிந்துரைப்பார்.

மன அழுத்தம் தவிர்ப்பது, தினமும் உடற்பயிற்சிகளை முறைப்படுத்துவது, ஆரோக்கியமான, புரதம் நிறைந்த உணவுப்பழக்கம் போன்ற வாழ்வியல் மாற்றங்களும் பின்பற்றப்பட வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...