Skip to main content

வயது முரணான திருமணம் எனப் பெற்றோர் எதிர்ப்பு - கணவரை மீட்டுத்தரக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவில் உள்ள குராயூரை சேர்ந்தவர் லட்சுமி(31, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருடைய கணவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இவரை பிரிந்து சென்றுவிட்டார். தற்போது லட்சுமி தன்னுடைய இரண்டு பெண் பிள்ளைகளுடன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தங்கியிருந்து சிறியதாக துணிக்கடை நடத்தி பிழைத்து வருகிறார். இந்நிலையில், அவருக்கும், தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் லாரி டிரைவராக வேலை பார்க்கும் பாலாஜி (21) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி

நாளடைவில், பாலாஜியும் லட்சுமியும் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாலாஜியின் பெற்றோர், வயதுக்கு முரணான இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலாஜியை அடித்து இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரின் வீட்டுக்கு நியாயம் கேட்டுச் சென்ற லட்சுமியை, பாலாஜியின் உறவினர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரின் குழந்தைகளின் எதிர்காலத்தை குறிப்பிட்டும் மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்து மாயமான பாலாஜி, மதுரை தணிக்கன்குளத்தில் லட்சுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த, தகவலையறிந்த பாலாஜியின் பெற்றோர், அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளர் பார்த்திபன், சார்பு ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உதவியுடன் மதுரையிலிருந்து பாலாஜியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், விரக்தியடைந்த லட்சுமி, தனது கணவரை மீட்டுத்தரக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது பிள்ளைகளுடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

தீக்குளிக்க முயற்சி

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், துரிதமாக செயல்பட்டு தீக்குளிக்க முயன்ற 3 பேரின் மீதும் தண்ணீர் ஊற்றி ஆற்றுப்படுத்தினர். தொடர்ந்து, அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து சூலக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

Doctor Vikatan: நாள்பட்ட இருமல், கூடவே சிறுநீர்க்கசிவும், காதில் ஒலிக்கும் சத்தமும்... என்ன பிரச்னை?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு நாள்பட்ட இருமல் இருக்கிறது. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இருமினால் சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. காதில் சில நேரங்களில் அலை அடிப்பது போல் சத்தம் கேட்கிறது. இதற்கெல்லாம் என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? - Jayarani, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம். பொது மருத்துவர் அருணாசலம் உங்கள் விஷயத்தில் இருமலைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும். நிறைய பேர் அது தெரியாமல் இருமல் மருந்தைக் குடித்துக் குடித்து அதைக் கட்டுப்பாட்டில் வைக்க முயல்கிறார்கள். இது தவறு. இருமலுக்கான காரணம் தெரிந்து சிகிச்சை எடுப்பதுதான் சரியானது. இருமலில் வறட்டு இருமல், சளியுடன் கூடிய இருமல், ஆஸ்துமா இருமல் என மூன்று வகை உண்டு. வறட்டு இருமல் என்பது ஒருவித பாக்டீரியாவால் வருவது. ஒவ்வொரு முறை இருமும்போதும் சளியும் சேர்ந்து வருவது, சளி இருமல். மூன்றாவது ஆஸ்துமாவினால், வீஸிங்கால் வருவது. அதாவது காற்றுப்பாதை ச...