Doctor Vikatan: ஏதேனும் காரணத்தினால் ஒருவர் மயக்கம் போட்டு விழுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அருகில் உள்ளவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்திலிருந்து எழுந்திருக்கச் செய்வார்கள். ஒருவேளை மயங்கி விழுந்த நபர் தனிமையில் இருக்கும்போது, தண்ணீர் தெளித்து எழுப்ப ஆளில்லாத பட்சத்தில் அந்த நபரின் மயக்கம் தானாகவே தெளியுமா?, மயங்கி விழுந்த நபர் எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருப்பார், மயக்கமடைந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளிப்பது சரியான விஷயம்தானா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி மயக்கம் என்பது சாதாரணமான அறிகுறி கிடையாது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். மயக்கம், தலைச்சுற்றல், சுயநினைவில்லாமல் போவது போன்ற அறிகுறிகள், சீரியஸான பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கலாம். அது நமக்கு வந்தாலும் சரி, மற்றவர்களிடம் பார்த்தாலும் சரி, சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய விஷயமல்ல. ஒரு நபருக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைந்தால் மயங்கி விழலாம். அதாவது ஒருவருக்கு நீரிழிவு இருந்து,...