Skip to main content

Health: நாம் ஏன் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிட வேண்டும்?

ற்போது மக்களிடம் மைக்ரோ கிரீன்ஸ் சாப்பிடும் பழக்கம் பிரபலமாகி வருகிறது. எளிமையாக வீட்டிலேயே விளைவித்துகூட இதை சாப்பிடலாம். அப்படிப்பட்ட ஊட்டச்சத்து நிறைந்த மைக்ரோ கிரீன்ஸ் யார் சாப்பிடலாம், எப்படி வீட்டிலேயே விளைவிப்பது குறித்து விளக்கம் தருகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் உமாசக்தி.

மைக்ரோ கிரீன்ஸ்
மெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்!

வீடுகளுக்கு உள்ளேயே எளிய முறையில் தானியங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகளின் விதைகளில் இருந்து முளைத்த சிறு செடியைத்தான் மைக்ரோ கிரீன் என்கிறோம். விதைகளைப் பயிரிட்டு வளர்ப்பதைத்தான் மைக்ரோகிரீன்ஸ் முறை என்கிறோம். முழு தானியங்களை முளைக்கட்டி எடுத்துக்கொள்வதை போல், தானியங்களை விதைத்து, விதை முளைத்த 7 நாள்களுக்குள் அறுவடை செய்து சாப்பிடலாம். இதே முறையில் பயிர் செய்யப்பட்ட கீரைகள் மற்றும் காய்கறிச்செடிகளின் நாற்றுகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

இந்த மைக்ரோ கிரீனில் வைட்டமின் A,C,K நிறைந்துள்ளன. தவிர பாலிஃபீனால் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸும் மைக்ரோ கிரீனில் இருக்கிறது.

100 கிராம் மைக்ரோ கிரீனில் 15-20 கலோரி தான் உள்ளது. இதில் கார்போஹைட்ரேட் அளவு குறைவாக உள்ளது தான் இதற்கு காரணம்.

வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் அளவு அதிகமாக இருக்கிறது.

உணவியல் நிபுணர் உமாசக்தி
உணவியல் நிபுணர் உமாசக்தி

விதை முளைத்த இரண்டு நாள்களில், அதன் முளை வெளிவரும்போதே பயன்படுத்துவது முளைக்கட்டியப் பயறு. இன்னும் சில நாள்கள் வைத்து அதன் முளை தண்டிலிருந்து இலை வெளியே வந்த சில நாட்களில் பயன்படுத்துவதுதான் மைக்ரோ கிரீன்ஸ்!

எல்லோரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று தான் இது. கொலஸ்டிரால், டயாபடீஸ், இதயம் சார்ந்த நோய் உள்ளவர்கள் எல்லாம் இதை எடுத்துக்கொள்வது நல்லது. உடல் எடை குறைப்பதற்கு இது உதவியாக இருக்கும். விளைவித்த மைக்ரோ கிரீன்ஸை அதன் தண்டுப்பகுதி வரை எடுத்து பயன்படுத்தலாம். வேர்ப்பகுதியை பயன்படுத்தக்கூடாது. அது மண்ணுக்குள் இருப்பதால் அதை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது.

வீட்டில் எப்படி வளர்க்கலாம்? ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு மண் அல்லது டிஸ்யூ பேப்பர் போட்டு, அதில் முளைக்கட்டிய விதைகள் அல்லது விதைகளை அப்படியே போட்டு 5 முதல் 7 நாட்கள் வரை வீட்டிற்குள் வைத்திருந்தாலே மைக்ரோ க்ரீன்ஸ் முளைத்துவிடும். இதை பறித்து சாண்ட்விச், சாலட், பொரியல் என்று விதவிதமாக சாப்பிடலாம்.

கடுகு, பெருஞ்சீரகம், வெந்தயம், கோதுமை போன்ற நம்முடைய காலநிலைக்கு ஏற்ப முளைக்கும் விதைகளை நாம் மைக்ரோ கிரீன்ஸ் ஆக விளைவிக்கலாம். எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுதான் என்பதால், அனைவரும் கட்டாயம் எடுத்துக்கொள்ளலாம்'' என்கிறார் உணவியல் நிபுணர் உமா சக்தி.


Comments

Popular posts from this blog

``முதலிரவு முடிஞ்சதும் சில ஆண்கள் இப்படி யோசிக்கிறாங்க'' - காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 -122

நம்ப முடியாத பல பிரச்னைகள் செக்ஸில் இருக்கின்றன. அவற்றில் ஒரு பிரச்னை பற்றிதான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பேசவிருக்கிறார். ''அந்த இளைஞருக்கு முந்தைய நாள்தான் திருமணம் நடந்திருக்கிறது. மறுநாளே என்னைச் சந்திக்க வந்திருந்தார். ரொம்பவும் பதற்றமாக இருந்தார். ஆசுவாசப்படுத்தி விசாரித்தேன். 'டாக்டர், நேத்து எனக்கு ஃபர்ஸ்ட் நைட் நடந்துச்சு. கம்ப்ளீட் செக்ஸ் வெச்சுக்கிட்டோம். என் மனைவியோட பிறப்புறுப்புல இருந்து ரத்தமே வரலை. இந்தக் காலத்து கேர்ள்ஸ் வண்டி ஓட்டறாங்க... நிறைய விளையாட்டுகள்ல ஈடுபடறாங்க. அதனால கன்னித்திரை கல்யாணத்துக்கு முன்னாடியே கிழிஞ்சிருக்கும்ங்கிறது எனக்கும் தெரியும். ஸோ, ரத்தம் வராதது எனக்கு பிரச்னையே இல்ல. ஆனா, அவளோட பிறப்புறுப்பு ரொம்ப லூசா இருந்துச்சு. அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கா டாக்டர். இல்லைன்னா ஒரு கன்னிப்பொண்ணுக்கு எப்படி பிறப்புறுப்பு லூசாகும்.... அவ ஏற்கெனவே செக்ஸ் பண்ணியிருக்கிறதை கண்டுபிடிக்க ஏதாவது டெஸ்ட் இருக்கா டாக்டர்' என்றார். Sexologist Kamaraj அதையெல்லாம் பெட்ரூமுக்கு வெளியே வைங்க! I காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 - 117 ...

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

"புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கான குறிக்கோள் !" - Dr. அரவிந்தன் செல்வராஜ்

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு காவேரி மருத்துவமனை 'K10K' மாரத்தான் போட்டியை நடத்தியுள்ளது கடந்தாண்டும் இதே போன்றொரு மாரத்தான் போட்டியை காவேரி மருத்துவமனை ஒருங்கிணைத்திருந்தது. இந்த ஆண்டு பெசன்ட் நகர் ஆல்காட் நினைவுப் பள்ளியில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் ஓட்டப்பந்தய வீரர்கள்,தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் என 4700 நபர்கள் பங்கேற்றனர். 10 கி.மீ மற்றும் 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி புற்றுநோயை கண்டறிந்து அதனை தடுக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஒருகிணைக்கப்பட்டது. 10 கி.மீ மாரத்தான் போட்டியை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மேலும், 5 கி.மீ மாரத்தான் போட்டியை காவல் துறை உதவி ஆணையர் திரு முருகேசன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். Marathon இது குறித்து சென்னை காவேரி மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறை இயக்குநர், டாக்டர் ஏ.என். வைத்தீஸ்வரன், "நோயறிதல் மற்றும் சிகிச்சையில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பல நபர்களுக்கு வழக்கமாக நோய் பரிசோதனைகள் செய்வதன் முக...