செவ்வாழை

*செவ்வாழையில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோட்டின் உள்ளன.
*செவ்வாழை சாப்பிட, குதிகால் வலி போகும். விந்துஅணுக்கள் அதிகரிக்கும்.
*நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வைத்திறன் மேம்படும்.
*பல்வலி நீங்கும். ஈறுகள் உறுதியாகும்.
*தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, தோல் வெடிப்பு நீங்கும்.
*நரம்புத்தளர்ச்சி குணமடையும். நோய்த்தொற்றுக்கள் நீங்கும்.
ரஸ்தாலி (ரசகதலி)

*அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னைகளைப் போக்கும்.
*பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், வயிற்று எரிச்சலைக் குறைப்பதுடன் அல்சரையும் சரிசெய்கிறது.
*ரஸ்தாலியில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் குளுக்கோஸ், மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
*வாத உடல் உள்ளவர்கள், ரஸ்தாலியை அளவாகச் சாப்பிடலாம்.
*வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்.
மொந்தன் வாழை

*மொந்தன் வாழை சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும். வாந்தியை நிறுத்தும்.
*இரும்புச்சத்துடன் அதிக அளவு மாவுச்சத்தும் இருப்பதால், நன்கு பசி தாங்கும். உடல் வளர்ச்சியை மேம்படுத்தும்.
*மொந்தன் வாழைக்காயைச் சாப்பிடுவதால், வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் நீங்கும்.
*தினம் ஒன்றோ, இரண்டோ உணவுக்குப் பின் சாப்பிட்டால், உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
*சில வகை காமாலையைக் கட்டுப்படுத்தும்.
*இந்தப் பழத்துக்கு `பொந்தன் வாழை’ என இன்னொரு பெயரும் உண்டு.
நாட்டு வாழை

*நாட்டுவாழையின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். தோலிலும் சத்துக்கள் அதிகம்.
*மலச்சிக்கல், குடல்புண்ணைக் குணப்படுத்தும்.
*மக்னீசியம் அதிகமாக இருப்பதால், உடல்நலம் காக்கும்.
*கால்சியம் அதிகமாக உள்ளதால், எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.
*பெண்கள் நாட்டு வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவர, உடலுக்கு சக்தி பெருகும்.
*மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். வெள்ளைப்போக்கைக் கட்டுப்படுத்தும்.
*அதிகம் இனிப்புச்சுவை கொண்டுள்ளதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
கதலி

*கதலியில், `நெய்க் கதலி’ என்றொரு வகையும் உள்ளது.
*நெய்க் கதலி மலைப்பகுதிகளில் அதிகம் விளையும். அதிக இனிப்புச்சுவை உடையது. மாவுச்சத்து அதிகம் என்பதால், குழந்தைகள் உடல் வளர்ச்சி பெற உதவும்.
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தசோகை பிரச்னை உடையவர்கள் சாப்பிட்டுவந்தால், ரத்தம் பெருகும்.
*மலச்சிக்கலைத் தீர்க்கும். குடல்புண்ணைக் குணப்படுத்தும்.
*சித்தமருத்துவ மருந்துகளுக்கு அதிகம் பயன்படுகிறது.
*பெண்களின் உடல்நலம், மாதவிடாய் பிரச்னைகள், உடல் சூடு ஆகியவற்றைப் போக்கும்.
பேயன்

*கடினமான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம். இதன் தோலிலும் சத்துக்கள் அதிகம்.
*அதிக உடல் வெப்பத்தை பேயன்பழம் சாப்பிடுவதன் மூலம் சமன்படுத்தலாம்.
*குழந்தைகளுக்கு ஏற்படும் கணையச்சூட்டைத் தணிக்கும் இயல்பு கொண்டது.
*உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. உடல் எடையை அதிகரிக்கும்.
*மலச்சிக்கலை நீக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்தும்.
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
*மாவுச்சத்து அதிகம் உள்ளதால், குழந்தைகளின் வளர்ச்சிக்குச் சிறந்தது.
*குளிர்ச்சியான உடல்வாகு உடையவர்கள் இந்தப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது நுரையீரலில் சளியைக் கோத்து நுரையீரல் கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும்.
மலை வாழை

*வாத நோய்க்காரர்களைத் தவிர மற்றவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடலாம்.
*நல்ல ருசியும் வாசனையும் கொண்ட பழம். இது, உடலின் வலிமையை அதிகரிக்கும்.
*சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது, மிகவும் இனிப்பாக இருக்கும். ரத்தசோகையை நீக்கும். ரத்த விருத்தி ஏற்பட்டு, உடல் வலுப் பெறும்.
*மலச்சிக்கல் நீங்கும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.
*இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் அழகு பெறும்.
பூவன் பழம்

*தினசரி உணவு உண்ட பின், பூவன் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் தீரும். செரிமான சக்தியை அதிகரிக்கும்.
*தசைகளை வலுவாக்கும்.
*தினமும் பூவன் வாழைப்பழம் உண்டுவர, உடல் சோர்வு, தளர்வு நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும்.
*ஆஸ்துமா, நெஞ்சுச்சளி பிரச்னை, குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் பூவன் வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
*இரண்டு நாட்களுக்கு, ஒரு வேளை உணவைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதில், பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டால், செரிமானப் பிரச்னைகள் நீங்கும்.
பச்சை வாழை

*குடல் புண்களை ஆற்றும்.
*குடல் புண் மற்றும் குடலில் பாதிக்கப்பட்ட மெல்லிய சவ்வுத் தோல்களை விரைவில் வளரச் செய்து, புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்துக்கு உண்டு.
*உடலின் வெப்பத்தைக் குறைக்கும். குளிர்ச்சியான உடல் உடையவர்கள் அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
நேந்திரம்

*குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கப் பயன்படும்.
*உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவது.
*இதயத்தைப் பலப்படுத்தும்.
*இரும்புச்சத்து நிறைவாக உள்ளதால், ரத்த உற்பத்திக்கு உதவும்.
*உடல் மெலிந்தவர்கள் நன்கு கனிந்த நேந்திரம் பழத்தை தினசரி சாப்பிட்டுவர, எடை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
நேந்திரம் பழம் மூளையின் செல்களுக்கு வலுவூட்டும். நினைவுத்திறனை மேம்படுத்தும்.
கற்பூர வாழை (நவரை)

*உடல் ஆரோக்கியத்துக்கும், ரத்த விருத்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் நல்லது.
*தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்கள் விரைவில் ஆற உதவுகிறது.
*தலைபாரம், தலைவலி நீங்க உதவுகிறது. சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தரும்.
*வாத உடல்வாகு கொண்டவர்கள், இந்தப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
Comments
Post a Comment