Skip to main content

NEET மறுதேர்வு: தேர்வை விட பெரிய சவால் மாணவர்களின் மனநிலை... கையாள்வது எப்படி?!

வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மறுதேர்வு வரும் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தேர்வுக்குத் தயாராகி, அது நிறைவடைந்ததும் 'அப்பாடா' என நிம்மதிப் பெருமூச்சு விட்ட மாணவர்கள் பலரும் மீண்டும் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். விடுமுறை நாள்களைக் கொண்டாடச் சென்ற பல மாணவர்கள் கோச்சிங் சென்டர்களுக்குத் திரும்பியுள்ளனர்.

நீட் தேர்வு

இது போன்ற சூழலில் மாணவர்களை எப்படிக் கையாள வேண்டும் என ஆலோசனை அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் முகில் சக்தி.

``ஒரு விஷயத்துக்காக கடும் முயற்சி செய்து, நேரத்தை முதலீடு செய்து, கோச்சிங்குக்காக பண் செலவழித்து அதில் வெற்றி கிடைக்கவில்லை என்றால், யாராக இருந்தாலும் வருத்தம் ஏற்படும். அதுவும் மாணவர்கள் எனும்போது மிகவும் சென்சிட்டிவாகவே இதை எடுத்துக்கொள்வார்கள். சோகம், கோபம், எரிச்சல், நம்பிக்கையின்மை, ஏமாற்றம் எனப் பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாவார்கள்.

NEET தேர்வுக்குத் தயாராகும்போது இந்த நேரத்தில் படிக்க வேண்டும், இத்தனை மணிக்குத் தூங்க வேண்டும் என அனைத்துக்கும் அட்டவணை போட்டு செயல்பட்டிருப்பார்கள். தங்களுடைய ஒட்டுமொத்த உழைப்பையும் இதற்கென போட்டிருப்பார்கள். மீண்டும் தற்போது அதே நிலைக்குச் சென்று தயாராக வேண்டும் எனும்போது, 'நான் என்னுடைய பெஸ்ட்டை ஏற்கெனவே கொடுத்துவிட்டேன். மீண்டும் அதை செய்ய முடியுமா?' என்ற பயம், பதற்றம், ஸ்ட்ரெஸ், தன் திறனைப் பற்றிய சந்தேகம் போன்றவை ஏற்படலாம்.

NEET

தன்னால் இதை மீண்டும் சிறப்பாகச் செய்துவிட முடியுமா என்ற மனப்பதற்றம் (Performance Anxiety) ஏற்படலாம்.

உளவியல் ரீதியாக இந்தப் பிரச்னை ஆரம்பித்து மாணவர்களின் தூக்கம், சாப்பாடு, மனநிலை (Mood) என அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் ஸ்ட்ரெஸ்ஸாக காணப்படுவார்கள். மனவலிமை உள்ள, மீண்டு எழும் திறன் கொண்ட (Resilience) மாணவர்கள் இந்த நிலையை சமாளித்துவிடுவார்கள். மிகவும் சென்சிட்டிவான குழந்தைகள், தன்னம்பிக்கை குறைவாக உள்ள மாணவர்கள் சற்று பாதிக்கப்படலாம்.

ஏற்கெனவே NEET தேர்வு, தேர்வு முடிவுகள் சமயத்தில் மாணவர்கள் அவசரப்பட்டு தவறான முடிவுகள் எடுத்திருப்பதைப் பார்த்திருப்போம். இந்த விஷயத்தில் அதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம். குழந்தைகள் மனநிலையை இலகுவாக்கி, அவர்களை இயல்பாகச் செயல்பட வைக்க பெற்றோரின் ஆதரவும் மிகவும் அவசியம். பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் மனநலத்தை மனதில் வைத்து அவர்களைக் கையாள வேண்டும்.

மனநல மருத்துவர் முகில் சக்தி

மாணவர்கள் மட்டுமன்றி பெற்றோருக்கும் இது போன்ற சூழல்கள் பதற்றத்தையும் கவலையையும் கொடுக்கும். இந்தச் சூழலை இரண்டாகப் பிரித்து அணுக வேண்டும். முதலில் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மனதளவில் இயல்பாக இருக்கிறார்களா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேச வேண்டும். தங்களுக்கு இருக்கும் பதற்றத்தைப் பிள்ளைகள் மீது காட்டக் கூடாது. இரண்டாவது, பெற்றோர் தங்கள் மனநிலையையும் இயல்பாக வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

மாணவர்கள் அதிக பதற்றம், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், அன்றாட பழக்க வழக்கங்களில் இருந்து மாறுபடுதல், உணர்வுரீதியாக தூண்டப்பட்டு உணர்ச்சிவசப்படுவது, எரிச்சலுணர்வுடன் இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், மனநல மருத்துவர், நிபுணர்களிடம் ஆலோசைனைக்கு அழைத்துச் செல்லத் தயங்கக் கூடாது.

இது நம்மால் கட்டுப்படுத்த முடியாத வெளிப்புறத்தில் நடைபெற்ற சம்பவம். இது ஒருவரின் தனிப்பட்ட திறமையாலோ அல்லது கட்டுப்பாட்டாலோ ஏற்பட்ட விஷயம் இல்லை. நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு நடந்த ஒன்று. இப்படிப்பட்ட நேரங்களில், நம்மால் கட்டுப்படுத்த முடியும் விஷயங்கள், நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் என இரண்டு வகையாகப் பார்க்க வேண்டும்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நம் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களை கவனித்து, அதை எப்படி சரி செய்வது என்று யோசிக்க வேண்டும். ஆனால் நம்மால் மாற்ற முடியாத விஷயங்களைப் பற்றி தொடர்ந்து கவலைப்பட்டால் எந்த பயனும் கிடைக்காது. எது நம் கையில் இருக்கிறது, எது இல்லை என்று புரிந்து கொண்டு அந்த சூழ்நிலையை அணுகினால் மனஅழுத்தம் குறையும், சரியான முடிவும் எடுக்க முடியும்" என்கிறார் மருத்துவர் முகில் சக்தி.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...