Skip to main content

Doctor Vikatan: முடி உதிர்வை நிறுத்தி, வளரச் செய்யுமா பயோட்டின் மாத்திரை?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக அதிகமான முடி உதிர்வு இருக்கிறது. என்னுடைய தோழி என்னை பயோட்டின் என்ற மாத்திரையை எடுத்துக்கொள்ளும்படியும்,

அது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, வளரச் செய்யும் என்றும் சொல்கிறாள். அது உண்மையா... எத்தனை நாள்களுக்கு, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா.
சருமநல மருத்துவர் பூர்ணிமா.

பயோட்டின் என்பது வைட்டமின்களில் மிக முக்கியமானது. இதனை வைட்டமின் B7 (Vitamin B7) என்றும் சொல்வோம். பொதுவாக பயோட்டின் என்றாலே பலரும் அதனை தலைமுடி மற்றும் நகங்களோடுதான் (Hair and Nails) தொடர்புபடுத்திப் பார்ப்பார்கள்.

ஆனால், பயோட்டின் நம் உடலில் நாம் உட்கொள்ளும் புரதம் (Protein) மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை (Carbohydrates) செரிமானம் செய்வதற்குப் பெரிதும் உதவுகிறது.

பயோட்டின் என்பது உடலில் கெரட்டின் (Keratin) உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கெரட்டின் என்பது நம்முடைய தலைமுடி, நகங்கள் போன்றவற்றில் இருக்கக்கூடிய  முக்கியமான புரத  காரணியாகும். இதனால்தான் பயோட்டின் எப்போதும் முடி வளர்ச்சியுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

பயோட்டின் சப்ளிமென்ட்ஸ் எடுத்தால் முடி வளருமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பயோட்டின் குறைபாடு (Biotin Deficiency) உள்ளவர்கள் இதனை சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்ளும்போது, அது அவர்களுக்கு நல்ல பலனைத் தரும். குறிப்பாக, நகங்கள் எளிதில் உடையக்கூடிய பிரச்னை மற்றும் தலைமுடி மெலிதாகும் பிரச்னை (Hair Thinning) உள்ளவர்களுக்கு இது நிச்சயம் உதவும்.

தலைமுடி மெலிதாவதற்கும், உதிர்வதற்கும் ஹார்மோன் குறைபாடுகள் (Hormonal issues) உள்ளிட்ட வேறு சில காரணங்கள் தான் முக்கியமாக இருக்கின்றன.

பொதுவாகவே தலைமுடி மெலிதாவதற்கும், உதிர்வதற்கும் ஹார்மோன் குறைபாடுகள் (Hormonal issues) உள்ளிட்ட வேறு சில காரணங்கள்தான் முக்கியமாக இருக்கின்றன. எனவே, அந்தப் பிரச்னைகளைக் கண்டறிந்து சரிசெய்த பிறகு, பயோட்டின் குறைபாடும் இருந்தால் மட்டுமே இந்த சப்ளிமென்ட்ஸ் நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

உண்மையில், மனிதர்களுக்கு பயோட்டின் குறைபாடு ஏற்படுவது என்பது மிகமிக அரிதான ஒரு விஷயம். அதை நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். எனவே, பயோட்டின் குறைபாடு இல்லாத பட்சத்தில், அதைத் தனியாக சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்வதால் பெரிய அளவில் எந்தப் பலனும் இல்லை. அதற்கு பதிலாக முடி கொட்டுவதற்கான மற்ற காரணங்களைக் கண்டுபிடித்து சரிசெய்யலாம்.  

இது நகங்களின் ஆரோக்கியத்திற்கு (Nails Health) நல்ல பலனைத் தரும்.

சாதாரணமாக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 30 முதல் 50 மைக்ரோகிராம் (32 to 50 mcg) பயோட்டின் தேவைப்படும். ஆனால், உடலில் பயோட்டின் குறைபாடு (Deficiency) தீவிரமாக இருந்து, அது உடலில் சரியாக உறிஞ்சப்பட வேண்டும் (Absorption) என்பதற்காக மருத்துவர்கள் சில நேரங்களில் 500 மைக்ரோகிராம் (500 mcg) வரை கூட பரிந்துரைப்பதுண்டு.

பயோட்டின் குறைபாடு இல்லாத நிலையிலும் கூட, சிலர் இதனைப் பயன்படுத்துவதற்கு இன்னொரு காரணம் இது நகங்களின் ஆரோக்கியத்திற்கு நல்ல பலனைத் தரும் என்பதுதான். எனினும், தேவையற்ற பட்சத்தில் இதனை சும்மா எடுத்துக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...