Skip to main content

Doctor Vikatan: செக்கு எண்ணெய் வாங்க வசதியில்லை; ரேஷன் பாமாயில் பயன்படுத்தினால் இதயநோய் வருமா?

Doctor Vikatan: நான் ஓர் இல்லத்தரசி. ரேஷன் கடையில் தரும் பாமாயில் மற்றும் ரீஃபைண்ட் எண்ணெய்களைப் பயன்படுத்தி சமைத்து வருகிறேன். செக்கு எண்ணெய் வாங்க வசதி இல்லை. இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துவதால் இதய நோய் வருமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இன்று பரவலாகப் பலரும் செக்கு எண்ணெய் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். விலை சற்று அதிகம் என்பதால் அதைப் பயன்படுத்த முடியவில்லையே என்ற உங்களது கவலை புரிகிறது. ஆனால், இது குறித்து நீங்கள் ரொம்பவும் கவலைப்பட வேண்டியதில்லை. 

நியாயவிலைக் கடைகளில் (ரேஷன் கடைகளில்) வழங்கப்படும் பாமாயில் (Palm Oil) மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் (Refined Oil) ஆகியவற்றைத்தான் பெரும்பான்மையான மக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்கள்.

பாமாயிலில் சாச்சுரேட்டடு ஃபேட் (Saturated Fat) சற்றே அதிகமாக உள்ளது. எனவே, இதை அதிக அளவில், நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL Cholesterol) அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் மிக அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்படுவதால், அவற்றில் உள்ள பல நல்ல பண்புகளும், ஊட்டச்சத்துகளும் அழிந்துவிடுகின்றன.

நீங்கள் எந்த எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைவிட, எவ்வளவு எண்ணெயைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியம். எந்த எண்ணெயாக இருந்தாலும் அதன் அளவு கட்டுப்படுத்தப் பட வேண்டும். சமைக்கும் போது எண்ணெயை அப்படியே பாத்திரத்தில் ஊற்றுதையும், பெரிய கரண்டிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

எண்ணெய் பயன்பாட்டின் அளவைக் குறைக்க ஸ்பிரே (Spray)  பாட்டில் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிறிய அளவிலான ஸ்பூன்களையும் பயன்படுத்துங்கள்.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தக் கூடாது. எண்ணெய் மீதமாகிவிட்டதே, வீணாகிறதே... என்று நினைத்து, அதனைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால், அதில்  'டிரான்ஸ் ஃபேட்ஸ்' (Trans Fats) உருவாகும். இது உங்களது உடலுக்கு மேலும் அதிக கெடுதலை விளைவிக்கும். 

சமைக்கும் போது எண்ணெயை அப்படியே பாத்திரத்தில் ஊற்றுதையும், பெரிய கரண்டிகளைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.

முடிந்தால் சமையல் முறையை ஆரோக்கியமாக மாற்றுங்கள்.  உணவுகளை எண்ணெயில் பொரிப்பதையோ (Deep Fry) அல்லது அதிக எண்ணெய் ஊற்றி வதக்குவதையோ (Heavy Saute) தவிர்த்து விடுங்கள்.

அதற்கு பதிலாக, ஆவியில் வேகவைப்பது (Steaming), அவிப்பது (Boiling), பிரஷர் குக்கிங் (Pressure Cooking) போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பின்பற்றுங்கள். 

உணவில் நார்ச்சத்தை அதிகரியுங்கள். அதற்கு உங்களது அன்றாட உணவில் அதிக அளவிலான காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ரேஷன் கடையில் கிடைக்கும் பாமாயிலைப் பயன்படுத்துவதால் கட்டாயமாக இதய நோய் (Heart Disease) வந்துவிடும் என்று அர்த்தமல்ல. நாம் எந்த எண்ணெயை எப்படி, எந்த அளவில் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். எனவே, அளவறிந்து கவனமாகப் பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...