Skip to main content

Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைத் தவிர்க்கச் சொல்வதற்கு என்ன காரணம்?

Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையைப் பரவலாகக் கேட்க முடிகிறது. இதற்கு ஏதேனும் மருத்துவக் காரணங்கள் உண்டா... கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள் என ஏதும் உள்ளனவா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்
அம்பிகா சேகர்

கோடையில் அதிக வெப்பம் காரணமாக உடல் சீக்கிரம் வறட்சி (Dehydration) அடையும் என்பதால், தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெளியில் வெப்பம் உச்சத்தில் இருப்பதால், நம் உடலின் வெப்பநிலையைச் சரியான அளவில் வைத்திருக்க நீர் வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

உடலை நீரேற்றத்துடன் (Hydrate) வைத்திருக்க மோர், இளநீர் மற்றும் பழச்சாறுகளை (சர்க்கரை நோய் இல்லாதவர்கள்) தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

கோடைக்காலத்திற்கு ஏற்ற வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் மற்றும் மாம்பழம் போன்ற சீசன் பழங்களை அதிகளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மசாலா மற்றும் காரம் அதிகமுள்ள உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், அசைவ உணவுகளைச் செரிக்க உடல் அதிக வேலையைச் செய்ய வேண்டியிருக்கும். அவை செரிமானமாவதற்குச் சிரமமாகவும் இருக்கும். கோடைக்காலத்தில் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ள உணவுகளையும் தவிர்ப்பது  மிகவும் நல்லது. குறிப்பாக, வெளியிடங்களில் விற்கப்படும் உணவுகளை (Outside Food) அறவே தவிர்க்க வேண்டும்.

கோடைகாலத்தில் செரிமானக் கோளாறுகள் (Indigestion) மற்றும் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எண்ணெயில் பொரித்த உணவுகள் (Deep fried food) மற்றும் கடைகளில் விற்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவது, குறிப்பாக இரவு நேரங்களில் தாமதமாக உண்பதைத் தவிர்க்க வேண்டும். 

ஆல்கஹால், காபி போன்றவை, உடலின் வெப்பத்தை அதிகரிக்கக்கூடியவை என்பதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். 

தண்ணீர் குறைவாகக் குடிப்பதால் சிறுநீர் அடர்த்தியாகி, சிறுநீரகத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

கோடைக்காலத்தில் பலரையும் பாதிக்கிற பிரச்னைகளில்  சிறுநீரகத் தொற்று (UTI) முக்கியமானது. தண்ணீர் குறைவாகக் குடிப்பதால் சிறுநீர் அடர்த்தியாகி, சிறுநீரகத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

வெயில் காலத்தில் ஒருவித மந்தமான உணர்வு (Sluggishness) ஏற்படும். அதிகப்படியான வியர்வையினால் உடல் சோர்ந்து, நீர்ச்சத்து குறைபாடு (Dehydration) உண்டாகும். அதைத் தவிர்க்க திரவ உணவுகள் அதிகம் குடிக்க வேண்டும். வெயிலில் இருந்து வந்தவுடன் உடனடியாக  ஐஸ் வாட்டர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். 

வெளியிலிருந்து வந்த பிறகு 5 முதல் 10 நிமிடங்கள் வரை காத்திருந்து, முதலில் சாதாரண வெப்பநிலையில் உள்ள தண்ணீரைப் பருக வேண்டும். அதன் பிறகு தேவைப்பட்டால் குளிர்ந்த நீரைக் குடிக்கலாம். 

வெப்பமான நிலையிலிருந்து வந்ததும் உடனே குளிர்ந்த நீரை அருந்துவது சில நேரங்களில் மூச்சுத்திணறல் (Choking) போன்ற உணர்வை ஏற்படுத்தலாம். திடீர் வெப்ப மாற்றத்தினால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சளி பிடிக்கவும் வாய்ப்புள்ளது என்பதால் இந்தத் தவற்றைச் செய்யாதிருப்பது சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...