Skip to main content

Doctor Vikatan: கோடைக்காலம்: கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா அதீத வெயில்?

Doctor Vikatan: என் தோழி கர்ப்பமாக இருக்கிறாள்.  கர்ப்பம் உறுதியான நாள் முதல் வீட்டைவிட்டே வெளியே வர மறுக்கிறாள். வெயிலின் தாக்கம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கும் என உறுதியாக நம்புகிறாள்.  அவளது பயம் அனாவசியமானதுதானே.... வெயில் காலத்தில் கர்ப்பிணிகளுக்கான பிரத்யேக வழிகாட்டல் ஏதும் உண்டா?

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மருத்துவர் ஸ்ரீதேவி

கோடைக்காலத்தில் எல்லோருக்குமான பொதுவான அறிவுரையாகச் சொல்லப்படுவதுதான் கர்ப்பிணிகளுக்கும் வலியுறுத்தப்படுகிறது. அது டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்வது.

மிக அதிக வெப்பமான சூழலுக்கு வெளிப்படும்போது, உடலிலுள்ள நீர்ச்சத்து குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அதன் விளைவாக தலைச்சுற்றல், வாந்தி, களைப்பாக உணர்வது போன்ற அறிகுறிகள் வரலாம். இதைத் தவிர்க்க அவர்கள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சமாக 3 லிட்டராவது குடிக்க வேண்டும். வெறும் தண்ணீராகக் குடிக்கப் பிடிக்காதவர்கள், இளநீர், மோர் போன்று குடித்து உடலை நீர் வறட்சியின்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

வெப்ப அலை வீசும்போதும், உச்சி வெயிலின் போதும், குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. தவிர்க்க முடியாமல் வெளியே போக வேண்டும் என்றால், அவ்வப்போது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். இடைவெளியே இல்லாமல் பயணம் செய்யக்கூடாது. இடையிடையே தண்ணீர் குடித்துக்கொள்ள வேண்டும். இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, தளர்வான, காட்டன் ஆடைகளை அணிய வேண்டியது முக்கியம்.

தவிர்க்க முடியாமல் வெளியே போக வேண்டும் என்றால், அவ்வப்போது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள குடை, தொப்பி போன்றவை அவசியம். எங்கே சென்றாலும் தண்ணீர் பாட்டிலை கையோடு எடுத்துச் செல்ல வேண்டும். சாதாரணமான வெயிலால் கர்ப்பிணிகளுக்குப் பெரிய பிரச்னைகள் வராது. வெப்பநிலை அதீதமாக இருக்கும்போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.  கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் (முதல் டிரைமெஸ்டர்) அதீத வெப்பநிலைக்கு ஆளாகும்போதும், கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படும்போதும், வயிற்றில் வளரும் குழந்தைக்கு  நியூரல் டியூப் குறைபாடுகள் (Neural Tube Defects) எனப்படும் நரம்பு மண்டல பாதிப்புகள் வரும் ரிஸ்க் அதிகரிக்கும். எனவே, அதில் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும்.

டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு பிரச்னையைச் சரியாக கவனிக்கத் தவறும்பட்சத்தில், கர்ப்பிணிகளுக்கு குறிப்பிட்ட நாள்களுக்கு முன்பே பிரசவ வலி வர வாய்ப்பு உண்டு. போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டால் நஞ்சுக்கொடிக்குப் போகும் ரத்த ஓட்டமும் குறையலாம். அதனால் குழந்தைக்கும் பிரச்னை வரலாம். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், சோர்வு, குழந்தையின் அசைவை சரியாக உணர முடியாதது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், கர்ப்பிணிகள் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...