Skip to main content

Doctor Vikatan: பல வருடங்களாகப் பார்க்கும் தையல் வேலை... அடி வயிற்று வலிக்குக் காரணமாகுமா?

Doctor Vikatan: நான் 10 வருடங்களாக டெய்லரிங் வேலை செய்து வருகிறேன். அதுதான் எங்கள் குடும்பத்துக்கான பிரதான வருமானம். என் வயது 55. சமீப காலமாக தையல் மெஷினில் தைக்கும்போது எனக்கு அடி வயிறு வலிக்கிறது.  தையல் வேலையைத் தொடர்ந்து செய்தால் இதுபோன்ற பிரச்னை வரும் என்றும் அதை நிறுத்துமாறும் சிலர் சொல்கிறார்கள். தையல் வேலைக்கும் அடிவயிற்று வலிக்கும் தொடர்பு உண்டா? அல்லது இதற்கு வேறு காரணங்கள் இருக்குமா?

பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

மருத்துவர் ஸ்ரீதேவி

55 வயதில் அடிவயிற்றில் வலி வருவதற்கு நீங்கள் பார்க்கும் தையல் வேலை மட்டும் காரணமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, கால்களால் தையல் மெஷினை மிதித்துக்கொண்டே இருப்பது, குனிந்து வேலை பார்ப்பது போன்றவற்றால் சில பெண்களுக்கு இடுப்பு வலியும், கீழ்வயிற்றுப் பகுதித் தசைகளில் அழுத்தமும், இடுப்பு மற்றும் முதுகுவலியும் வரலாம். அதிகமாக வேலை செய்யும் நாள்களில் இவற்றை நீங்கள் உணரலாம்.

தையல் வேலை செய்வதால் கர்ப்பப்பையில் பிரச்னைகள் வரும் என நினைத்து பயப்படத் தேவையில்லை. 50 ப்ளஸ் வயதில் உள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கத்தின் காரணமாகவும் அடிவயிற்று வலி வரலாம். சிலருக்கு சிறுநீர்ப்பாதை தொற்றும் அதற்கொரு காரணமாக இருக்கலாம். கர்ப்பப்பையில் உள்ள ஃபைப்ராய்டு கட்டிகள் அல்லது சினைப்பை கட்டிகள் காரணமாகவும் அடி வயிற்றில் வலி வரலாம். மெனோபாஸுக்குப் பிறகு ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களாலும் சிலருக்கு இப்படி வலி வரலாம். இடுப்பெலும்பு, மூட்டு மற்றும் தசை வலிகளின் காரணமாகவும் இருக்கலாம்.

குடல் சார்ந்த பிரச்னைகள், மலச்சிக்கல், சரியாக செரிமானமாகாதது போன்ற பல காரணங்களால் அடி வயிற்றில் வலி வரலாம். 

பெல்விக் எக்ஸாம் எனப்படும் இடுப்பெலும்புப் பகுதிக்கான சோதனை, ஸ்கேன் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் தேவைப்படும்.

வலி அதிகரித்துக்கொண்டே இருந்தாலோ, தொடர்ச்சியாக இருந்தாலோ, வெள்ளைப்படுதல் இருந்தாலோ, ரத்தப் போக்கு இருந்தாலோ, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தாலோ, உடல் எடை குறைந்தாலோ, கூடினாலோ, வயிறு மிகவும் வீக்கமாகத் தெரிந்தாலோ, நடக்கும்போதோ, எடை தூக்கும்போதோ அதிகமாக வலித்தாலோ... நீங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். பெல்விக் எக்ஸாம் எனப்படும் இடுப்பெலும்புப் பகுதிக்கான சோதனை, ஸ்கேன் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் தேவைப்படும்.  இந்தப் பரிசோதனைகளின் மூலம், வலிக்கான காரணம் தெரியும். சாதாரண தசைப் பிடிப்பா அல்லது வேறு காரணங்களா எனத் தெரிந்து சரியான சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைப்பார்.  வேலை முறையில் சில மாற்றங்களைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம்.

உதாரணத்துக்கு, ஒவ்வொரு 45 நிமிடங்களுக்கொரு முறையும் எழுந்து நடக்கலாம். முதுகுப் பகுதிக்கு சரியான சப்போர்ட் உள்ளபடி உட்கார வேண்டும்.  தொடர்ந்து நீண்ட நேரம் தையல் மெஷினை மிதிக்காமல், இடையிடையே சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். இடுப்பெலும்புத் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...