Skip to main content

Doctor Vikatan: 2 வாரங்கள் வாக்கிங்கை மிஸ் செய்தாலே சர்க்கரை நோய் வந்துவிடுமா?

Doctor Vikatan: என் வயது 65. எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் உள்ளது. ப்ரீ டயாபட்டிக் நிலையில் உள்ளவர்கள் வெறும் இரு வார ஓய்வு எடுத்தாலே, அதாவது நடைப்பயிற்சி செய்யாமலே அது முழு அளவிலான சர்க்கரை நோயாக மாறிவிடும் என ஓர்  ஆய்வுச் செய்தியைச் சமீபத்தில் வாசித்தேன்.

'உங்களுக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ப்ரீடயாபட்டீஸ் இருந்தால், இரண்டு வாரங்கள் நடைப்பயிற்சி செய்யாமல் பிரேக் எடுத்தாலே கதை முடிந்தது' என்றும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு. இது எந்த அளவுக்கு உண்மை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை
நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை

The Gerontological Society of America ஆண்கள், பெண்களைக் கொண்டு சிறிய ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் வயதானவர்கள். ஆண்களின் சராசரி வயது 69 மற்றும் பெண்களின் சராசரி வயது 70.

பொதுவாகவே வயது கூடும்போது தசை இழப்பு (Muscle loss) ஏற்பட்டு, தசைகள் சற்று பலவீனமடையும். இதனால், வழக்கமாக உடற்பயிற்சி செய்பவர்கள் தங்களது நடைப்பயிற்சியைக் குறைத்துக்கொண்டு ஓய்வெடுக்கும்போது, அவர்களின் தசை நிறை (Muscle mass) மேலும் குறைகிறது என்கிறது இந்த ஆய்வின் முடிவு.

தவிர, சர்க்கரை நோய் (Diabetes) உள்ளவர்கள் உடற்பயிற்சியைக் குறைக்கும்போது, அவர்களின் உடலில் இன்சுலின் எதிர்ப்புத் திறன் (Insulin resistance) சற்று அதிகரிக்கும். அதுதான் நீங்கள் கேள்விப்பட்ட  ஆய்விலும் நடந்திருக்கும்.

இந்த ஆய்வின்படி, சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ப்ரீடயாபட்டீஸ் இருந்தவர்கள் அதே நிலையிலேயேதான் தொடர்கிறார்களே தவிர, பெரிய அளவில் சர்க்கரை நோய் நிலைக்கு மாறவில்லை. 

தசை நிறை குறையும் போதும், ஓய்வெடுக்கும் போதும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பதால் சர்க்கரை அளவு (Sugar level) சற்று உயரக்கூடும்.

இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, நல்ல தசை நிறை கொண்ட, சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் இருக்கும் பொது மக்களிடம் 'நீங்கள் இரண்டு வாரங்கள் நடைப்பயிற்சி செய்யவில்லை என்றால் சர்க்கரை நோய் வந்துவிடும்' என்று கூற முடியாது.

பொதுவாகவே வயதானவர்கள் ஏதேனும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு வாரங்கள் வரை ஓய்வில் இருக்கும் போது அவர்களின் தசை நிறை குறையும்.

அவ்வாறு தசை நிறை குறையும் போதும், ஓய்வெடுக்கும் போதும் இன்சுலின் எதிர்ப்புத் திறன் அதிகரிப்பதால் சர்க்கரை அளவு (Sugar level) சற்று உயரக்கூடும். இது ஒரு பொதுவான மருத்துவ உண்மை.

அத்தகைய நோயாளிகளுக்கு நாம் பிசியோதெரபி (Physiotherapy) சிகிச்சை அளித்துதான் மீண்டும் நடக்க வைப்போம். எனவே, இதை வைத்து நடைப்பயிற்சி போகவில்லை என்றால் சர்க்கரை நோய் வந்துவிடும் என்று கூறி யாரையும் பயமுறுத்தத் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...