Skip to main content

உங்களை அறியாமலே போதைப் பழக்கத்தில் இருக்கிறீர்களா? கண்டறிந்து, மீள்வது எப்படி?

இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிகப் பெரிய பிரச்னையாகவும் சவாலாகவும் இருப்பது போதைப்பழக்கம்தான்.

'இது போதை' என்று தெரிந்தே சிக்குபவர்கள் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் 'இவையெல்லாமும்கூட போதை தான்' என்று தெரியாமலேயே சிக்கிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இவை இரண்டு குறித்தும் விரிவாகப் பேசுகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த உளவியல் நிபுணர் சுபாராமன்.

Drug addiction
Drug addiction

"போதைப் பழக்கத்திற்கு நம் மூளைதான் முக்கியமான காரணம். நம் மூளையில் இருக்கக்கூடிய வெகுமதி மையத்திற்கு (reward Center) இதில் முக்கியப் பொறுப்பு இருக்கிறது.

நம் அன்றாட வாழ்வில் நாம் தொடர்ந்து இயங்குவதற்கு ஹார்மோன்கள் உதவுகின்றன. அதில் டோபமைன் (dopamine) என்று சொல்லக்கூடிய ஹார்மோன், மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது.

நம்மை மற்றவர்கள் பாராட்டும்போது, அதிக மதிப்பெண் எடுக்கும்போது, உயர் பதவி, ஊதிய உயர்வு என்று தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் பல பாசிட்டிவ் நிகழ்வுகளின்போது டோபமைன் சுரக்கும். அதாவது, ஒரு செயல் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தால் இந்நிகழ்வு நடக்கும்.

இதே மகிழ்ச்சி, போதைப்பொருள்கள் பயன்படுத்தியதும், நினைத்தே பார்க்காத அளவில் கிடைப்பதால் திரும்ப திரும்ப போதைப்பொருட்களை பயன்படுத்த மூளை கட்டளையிடுகிறது.

கூடவே, போதைப்பொருட்களை பயன்படுத்துவதை மட்டுமே முழு நேர செயல்பாடாக மாற்றவும் மூளை ஏங்குகிறது.

உங்களை அறியாமலே போதைப் பழக்கத்தில் இருக்கிறீர்களா?
உங்களை அறியாமலே போதைப் பழக்கத்தில் இருக்கிறீர்களா?

'இதுகூட போதைப்பழக்கத்திற்கு வழிவகுக்கும்' என்கிற விழிப்புணர்வு இல்லாமல், நிறைய பழக்கங்கள் மாணவர்களிடையே காணப்படுகிறது.

பஞ்சர் டியூப் கரைசல், பெயின்ட் தின்னர், வெண்மையாக்கி (whitener), நெயில் பாலீஷ், இருமல் மருந்து, மருத்துவரால் பரிந்துரைக்கப்படாத மாத்திரைகள் என்று நம் அன்றாட வாழ்க்கையிலோ அல்லது அடிக்கடியோ பயன்படுத்தும் பொருட்களைக்கூட இளம் பருவத்தினர் போதைக்காக பயன்படுத்துகின்றனர்.

சமீபத்தில், பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், 'பெட்ரோலை பாலித்தீன் கவரில் ஊற்றி அதனை முகர்ந்து பார்க்கும் பழக்கம் இருப்பதாகவும், அதிலிருந்து மீள' உளவியல் ஆலோசனைக்காக என்னிடம் வந்திருந்தார்.

மது, புகை மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது மட்டும்தான் போதைப்பழக்கம் என பெரும்பாலானவர்கள் நினைக்கின்றனர். நான் மேலே சொன்னவையும் போதைப்பழக்கமே.

தவிர, இணைய தள விளையாட்டு, ஆபாச வலைத்தளம் மற்றும் சமூக வலைத்தளத்தில் அதிக நேரம் செலவிடுதல், கட்டுப்பாடின்றி தொடர்ந்து பொருள்களை வாங்கிக் குவிப்பது போன்ற செயல்வழி சார்ந்த அடிமைத்தனத்தாலும் (process addiction) பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.

உங்களை அறியாமலே போதைப் பழக்கத்தில் இருக்கிறீர்களா?
உங்களை அறியாமலே போதைப் பழக்கத்தில் இருக்கிறீர்களா?

சமீபகாலமாக போதைப்பழக்கம் அதிகரித்திருப்பதற்கு சினிமாவும் ஒரு முக்கிய காரணம் என்பேன். சினிமாவே சிகரெட் பிடிப்பதையும், மதுப்பழக்கத்தையும் நார்மலைஸ் செய்தது.

தற்போது கஞ்சா புகைப்பது, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை நடிகர்கள் பயன்படுத்துவது அதனை ஊக்குவிப்பது போல உள்ளது. ஒவ்வொரு நடிகரும், இயக்குநரும் தங்களுக்கு இருக்கும் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படுவது அவசர அவசியம்.

தினசரி நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களான படிப்பு அல்லது வேலையில் விருப்பமின்மை, பணியிடத்தில் அடிக்கடி சண்டை அல்லது லீவு போடுதல், தன்னுடைய அன்றாட செயல்களில் போதைக்கு முன்னுரிமை அளிப்பது, திருடுவது, பொய் சொல்லுவது போன்ற செயல்பாடுகள் போதைப்பழக்க அடிமைத்தனத்தை காட்டும்.

உளவியல் நிபுணர் சுபாராமன்
உளவியல் நிபுணர் சுபாராமன்

* ஒருவர் போதைப்பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டுமானால் குடும்ப உறுப்பினர்கள் அவர்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

* போதைப்பழக்கத்திலிருந்து மீள நினைத்தால், முதலாவது இதனால் வரக்கூடிய உடல், மனம், குடும்பம், சமூகம் மற்றும் சட்டரீதியான பிரச்னைகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

* இரண்டாவது, சூழலை மாற்ற முயற்சி செய்ய வேண்டும். பெரும்பாலான போதைப்பழக்கம் சூழல் காரணமாகத்தான் ஏற்படுகிறது.

குறிப்பாக நண்பர்களின் அழுத்தத்தினால் இளம் வயதினர் போதைக்கு அடிமையாகின்றனர். இதில் குடும்ப உறுப்பினர்கள் கவனம் செலுத்துவது நல்லது. இவர்களின் சூழலை மாற்றினால் நல்ல மாற்றம் தெரியும்.

* இறுதியாக நேர்மறையான எண்ணங்களை மனதில் விதைத்து, நண்பர்களின் அழுத்தத்தைத் தவிர்த்து, நல்ல செயல்களில் தன்னை ஈடுபடுத்த முயற்சி செய்யலாம்.

உதாரணமாக உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்வது, நூலகம் செல்வது, தனித்திறன்களை வளர்ப்பதில் ஈடுபடுவது, உயர்வான குறிக்கோள்களை தன் மனதில் விதைத்து அதை நோக்கிச் செல்வது, ஏதேனும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பது போதைப் பழக்கத்திலிருந்து மீள வழிவகைக்கும்.

தவிர, மருத்துவரின் உதவியும் தேவைப்படும். உளவியல் ஆலோசகரின் தனிநபர் ஆலோசனை மற்றும் குடும்ப ஆலோசனையும் நிச்சயம் தேவைப்படும். உளவியல் ஆலோசனை, குடும்ப ஒத்துழைப்பு, நல்லவிதமான சமூக தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் போதை பாதையிலிருந்து நிச்சயம் விலகலாம்'' என்று நம்பிக்கைக் கொடுக்கிறார் உளவியல் நிபுணர் சுபாராமன்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...