'சுடு நீரினை மட்டும் குடித்து வந்துள்ளார்' - Youtube பார்த்து டயட்; 18 வயது பெண் உயிரிழந்த பரிதாபம்!
கே ரள மாநிலம், கண்ணூர் அடுத்த கூத்துபரம்பாவைச் சேர்ந்தவர் ஸ்ரீநந்தா. 18 வயது இளம்பெண்ணான ஸ்ரீ நந்தா அதிக அளவில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் அவரது எடை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. இதனால் மிகுந்த மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஸ்ரீ நந்தா, உணவு உட்கொள்வதையே முற்றிலும் தவிர்த்துள்ளார். இவை குறித்து ஸ்ரீ நந்தாவின் குடும்பத்தினர், "கடந்த ஆறு மாதங்களாகவே அதிகமாக உணவு உட்கொள்ளும் பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதிலிருந்து மீள்வதற்காக யூ டியூப் பார்த்து உணவு ஏதும் உட்கொள்ளாமல் இருந்திருக்கிறார். இதை தனது குடும்பத்தினரிடம் மறைத்திருக்கிறார். பல மாதங்களாக தனது பெற்றோர் கொடுத்த உணவு ஏதும் உட்கொள்ளாமல் அந்த யூ டியூபில் சொன்னபடி சுடுநீரினை மட்டும் குடித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பலகட்ட உடல் பரிசோதனைகளுக்குப் பிறகு மருத்துவர்கள் ஸ்ரீநந்தாவின் பெற்றோர்களிடம் அவருக்கு போதுமான உணவு வழங்குமாறு அறிவுறுத்தினார்கள். மேலும் அவரை மனநல நிபுணரிடம் ...