Skip to main content

ICEEE : கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது AI - சென்னை மருத்துவ கருத்தரங்கில் தகவல்

வளர்ந்து வரும்  டிஜிட்டல் உலகில், கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ., தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக கருத்தரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நான்காவது சர்வதேச ‘நாளமில்லா சுரப்பியல், கருவியல் மற்றும் எண்டோஸ்கோபி’ (ஐ.சி.இ.இ.இ.,) 2026 மாநாடு நடைபெற்றது. புளூம் லைஃப் மருத்துவமனை ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்வில், இந்தியா முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு நிபுணர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 

கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ
கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ

உலகளவில் புகழ் பெற்ற ஐ.வி.எஃப் நிபுணர் கௌதம் அல்லாபாடியா, மெடிஸ்கேன் நிறுவனர் டாக்டர் சுரேஷ் சேஷாத்ரி மற்றும் மூத்த நிபுணர் டாக்டர் கௌரிசங்கர் பரமசிவம், வாணி புஜாரி, அபூர்வா பல்லம் ரெட்டி, ரமணி தேவி, சுதர்சன் மற்றும் பிஜாய் பாலகிருஷ்ணன் உட்பட பல மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

புளூம்லைஃப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் கவிதா கௌதம்,"மருத்துவத் துறையில் நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது மிக அவசியம். நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சையை வழங்க வேண்டும் என்ற மருத்துவர்களின் ஆர்வமே இதுபோன்ற மாநாடுகளை நடத்தத் தூண்டுகிறது. 2018-ல் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, இன்று ஒரு சர்வதேச தளமாக உருவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," எனத் தெரிவித்தார்.

நிகழ்வில், நவீன செயற்கை கருத்தரிப்பு மற்றும் கருவில் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வரங்கங்கள் நடத்தப்பட்டன. செயற்கை கருத்தரிப்பு, கருவில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிநவீன மாற்றங்களை மருத்துவர்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

நிகழ்வில் பேசிய மருத்துவ நிபுணர்கள், கருத்தரிப்பு சிகிச்சையில் நவீன தொழில்நுட்பங்களின் பங்களிப்பும் மகத்தானதாக இருக்கப் போகிறது. கருவை உருவாக்குவதில் ஆணின் உயிரணுக்களை தேர்வு செய்வதில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மருத்துவத் துறையில் அதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கலாம் என்றனர்.

கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ
கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ

நீண்ட காலக் கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு கருவுறுதலில் ஏற்படுத்தும் தாக்கம், குறைந்த மருந்துகள் மற்றும் நோயாளிக்கு அதிக அசௌகரியம் இல்லாத நவீன 'மினி ஐ.வி.எஃப்.,' முறைகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கிப் பேசினர். நவீன ஸ்கேனிங் முறைகள் மற்றும் கருமாற்றம் குறித்த பயிற்சிகளை மருத்துவர்கள் மாதிரி கருவிகள் மூலம் நேரடியாகச் செய்து பார்த்தனர். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கவிதா கௌதம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...