Skip to main content

Doctor Vikatan: இருமுறை பல் துலக்கியும் வாய் துர்நாற்றம்... குடல் நோயின் அறிகுறியா?

Doctor Vikatan: நான் தினமும் இருமுறை பல் துலக்கும் வழக்கம் கொண்டவன்.  சாப்பிட்ட உடன் வாய் கொப்பளிக்கும் வழக்கமும் உண்டு. ஆனாலும், எனக்கு கடந்த சில மாதங்களாக வாய் துர்நாற்றப் பிரச்னை இருப்பதை உணர்கிறேன். தொடர்ச்சியான வாய் துர்நாற்றம்  என்பது குடல் நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று நண்பர் சொல்கிறார். அது எந்த அளவுக்கு உண்மை... நான் என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா

குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா

வாய் துர்நாற்றம் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் பெருங்குடல் சார்ந்த நோய்களும் (Colonic diseases) முக்கிய காரணமாக இருக்கலாம். வாய் துர்நாற்றப் பிரச்னையை மருத்துவ மொழியில் 'ஹாலிட்டோசிஸ்' (Halitosis) என்று குறிப்பிடுவோம்.

நாம் சாப்பிட்ட உணவானது, குடலில் போய் செரிமானமாக வேண்டும். அந்த செரிமான வேலையைப் பார்ப்பதற்கென்றே குடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் இருக்கும்.  அவற்றில் நல்ல பாக்டீரியாக்களும்,  கெட்ட பாக்டீரியாக்களும் சேர்ந்தே இருக்கும். ஏதேனும் காரணத்தால், நாம் சாப்பிட்ட உணவானது, செரிமானமாகாமல், குடலிலேயே தங்கிவிடக்கூடும்.  நாள்பட்ட மலச்சிக்கல் (Chronic constipation) போன்ற பிரச்னைகள் இருக்கும்போது, குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி (Bacterial overgrowth) அதிகமாகலாம்.  அதிகப்படியான பாக்டீரியா வளர்ச்சியின் காரணமாக, அந்த உணவானது நொதிக்கப்படும். இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சியால் உருவாகும் வாயு (Gas), உடலில் உறிஞ்சப்பட்டு வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

GERD (Gastroesophageal reflux disease) எனப்படும் நெஞ்செரிச்சல் பிரச்னை அல்லது மேல் இரைப்பை குடல் பகுதிகளில் ஏற்படும் மற்ற தொற்றுகளும்கூட வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும்.

பொதுவாக, GERD (Gastroesophageal reflux disease) எனப்படும் நெஞ்செரிச்சல் பிரச்னை அல்லது மேல் இரைப்பை குடல் பகுதிகளில் ஏற்படும் மற்ற தொற்றுகளும்கூட வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும்.

சிறுகுடலிலோ அல்லது பெருங்குடலிலோ ஏற்படுகிற தொற்று, தடை, வீக்கம், கட்டி போன்ற காரணங்களால், உணவானது செரிமானமாகாமல், தேங்கலாம். அதனாலும் பாக்டீரியா வளர்ச்சி அதிகமாகலாம். அதனால் வாயு உற்பத்தி அதிகரிக்கும். அது வாய் வழியே வெளியேறும்போது, வாய் துர்நாற்றமாக உணரப்படுகிறது. இது எத்தனை நாள்களுக்கு நீடிக்கிறது, எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து நீங்கள் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெற வேண்டியது அவசியம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...