Skip to main content

Doctor Vikatan: நடிகைகளின் ஃபிட்னெஸ் வீடியோக்கள்... தீவிர பயிற்சிகள் அவசியமா, ஆபத்தா?

Doctor Vikatan: நடிகைகளின் உடற்பயிற்சி வீடியோக்கள்  எப்போதும் வைரலாகின்றன. அவர் தீவிரமான, கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்வது சிலருக்கு ஊக்கமளிப்பதாக இருந்தாலும், 'இது மிக அதிகம்' என்று சில உடற்பயிற்சி நிபுணர்கள் சொல்வதையும் கேட்கிறோம்.

சாதாரண உடற்பயிற்சிகள் மூலமே நல்ல முடிவுகளைப் பெற முடியும் என்பதால், இவ்வளவு தீவிரமான முயற்சி தேவையில்லை என்றும் அவர்கள்  சொல்கிறார்கள். இதுபோன்ற வீடியோக்களைப் பார்த்துவிட்டு அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் ஆலோசகர் ஷீபா தேவராஜ்.

 ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்
ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ்

நடிகர், நடிகைகள், பிரபலங்கள் வொர்க் அவுட் செய்கிற வீடியோக்கள் எப்போதுமே சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆகும். அவர்களின் ஃபிட்னெஸ் டிரெய்னர்கள், சம்பந்தப்பட்டவர்களால் கடுமையான உடற்பயிற்சிகளை, வித்தியாசமான உடற்பயிற்சிகளைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் அவர்களைச் செய்ய வைக்கிறார்கள். சாமானிய மக்கள் அதையெல்லாம் பார்த்து இன்ஸ்பையர் ஆக வேண்டியதே இல்லை. 

பிரபலங்கள் செய்கிற உடற்பயிற்சிகளைக் கண்மூடித்தனமாக நீங்களும் செய்தால், தேவையின்றி காயங்கள்தான் ஏற்படும். பல பிரபலங்களும் செய்கிற உடற்பயிற்சிகளைப் பார்க்கும்போது, தேவையில்லாமல், இவ்வளவு கடினமான வொர்க் அவுட்டுகளைச் செய்வதாகவே தோன்றுகிறது. அந்தப் பயிற்சிகளை எல்லாம் சாமானியர்கள் செய்தால் முதுகுப் பகுதியில் பிரச்னைகள் வரும். அப்படிப்பட்ட பயிற்சிகள் அவசியமும் இல்லை. 

பார்ப்பதற்குக் கடினமாகத் தெரிகிற உடற்பயிற்சிகள்தான் பலன் தரும், அப்படிச் செய்வதுதான் சரியானது என்ற எண்ணமே தவறு. உடற்பயிற்சி என்பதன் அர்த்தத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். வீட்டில், தரையில் உள்ள பெட்டியையோ, பொருளையோ தூக்கி, பரணில் வைப்போம். அதுதான் ஜிம்மில் 'ஓவர்ஹெட் ப்ரெஸ்' என்ற பெயரில் செய்யப்படும்.

கீழிருந்து கனமான பொருளைத் தூக்குவதை, ஜிம்மில், 'டெட் லிஃப்ட்' என்ற பெயரில் செய்வீர்கள். அப்படி சாதாரணமாக வீட்டில் நாம் செய்கிற அசைவுகளைத்தான் உடற்பயிற்சிகளாக ஜிம்மில் செய்கிறோம்.

மிதமான ஜாகிங், வேகமான நடை போன்றவற்றை வாரத்தில் 3-4 நாள்கள் செய்யலாம்.

அந்தப் பயிற்சிகளைச் செய்யும்போது காயம் ஏற்படாமல், அடி படாமல் இருக்க வேண்டும் என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். உடற்பயிற்சியில் 'ஹெச்ஐஐடி' (High-Intensity Interval Training) என்று ஒரு பிரிவு உண்டு. அதாவது, 40 நொடிகள் ஜம்ப்பிங் ஜாக்ஸ் செய்தால், 20 நொடிகள் பிரேக் எடுப்பீர்கள். அடுத்து மீண்டும் 40 நொடிகளுக்கு மிதமான ஜாகிங் செய்வீர்கள். 20 நொடிகள் பிரேக் எடுப்பீர்கள். அதாவது உடற்பயிற்சியின் தீவிரத்தைக் குறைத்து, கூட்டி, ஓய்வெடுத்துச் செய்வது. இதில் இதயத்துடிப்பின் அளவானது எப்போதுமே சற்று அதிகமாகவே இருக்கும்.

வாரத்தில் 3 நாள்கள் ஸ்ட்ரென்த் டிரெயினிங் பயிற்சிகளையும் (குறிப்பாக, பெண்களுக்கு 3-4 நாள்கள் இது அவசியம்) ஹெச்ஐஐடி பயிற்சிகளை வாரத்தில் ஒன்றிரண்டு நாள்களும் செய்யலாம். மிதமான ஜாகிங், வேகமான நடை போன்றவற்றை வாரத்தில் 3-4 நாள்கள் செய்யலாம். ஒருவேளை ஹெச்ஐஐடி பயிற்சிகளை வாரத்தில் 3 நாள்கள் செய்தால், ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற, உங்களுக்குத் தேவையான பயிற்சிகளைத் தெரிந்துகொண்டு செய்வதுதான் சரி. பிரபலங்களைப் பார்த்து எதையும் பின்பற்ற வேண்டாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...