Skip to main content

Doctor Vikatan: கோயில் குளங்கள், ஆறுகளில் குளித்தால் அரிப்பு, தவிர்க்க முடியாதபோது என்ன செய்வது?

Doctor Vikatan: வீட்டைத் தவிர வெளியிடங்களில் குளித்தால்... குறிப்பாக குளங்கள், ஆறுகளில் குளித்தால் ரொம்பவும் உடல் அரிக்கிறது. புண்ணியத்தலங்கள் என்பதால் அந்த நீரில் குளிக்காமலும் இருக்க முடியவில்லை. அடிக்கடி கோயில்களுக்குச் செல்ல வேண்டிய நிலையில், இந்தப் பிரச்னை வராமலிருக்க என்ன செய்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் பூர்ணிமா.

பொதுவாக மக்கள் நீச்சல் குளங்களில் குளிக்கும்போது இப்படிப்பட்ட பிரச்னை வருவதாகச் சொல்லி, தீர்வு கேட்பார்கள், ஆனால், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பது பற்றிய இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. பலரும் அலட்சியம் செய்கிற விஷயம் இது.

நீங்கள் கேட்டுள்ளபடி வெளியூர்களுக்குச் செல்லும்போது அங்குள்ள குளங்கள், ஆறுகள், ஏரிகள் போன்வற்றில் உள்ள தண்ணீரின்  pH அளவானது இடத்துக்கேற்ப மாறுபடும். புண்ணிய தலங்களில் உள்ள நீர்நிலைகளில் அதிகப்படியான மக்கள் நடமாட்டம் இருப்பதால், நீர் மிகவும் அசுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது. அதில் குளிப்பதால் அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பல பிரச்னைகள் வருவது சகஜம்தான்.

அதிலும் பிரபலமான கோயில் குளங்கள், புண்ணிய தலங்களில் உள்ள நீர்நிலைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதால் சிறுநீர், மலம் போன்ற கழிவுகள் நீரில் கலந்திருக்கும் சூழல் உள்ளது. புண்ணிய தலங்களுக்குச் சென்று புனித நீராடாமலும்  இருக்க முடியாது, அலர்ஜியும் வரக்கூடாது என்றால், சருமத்தைப் பாதுகாக்க முன் எச்சரிக்கையாக  என்ன செய்யலாம் என்று யோசிப்பதுதான் சரியானது.

சருமத்தைப் பாதுகாக்க, மாய்ஸ்ச்சரைசர் (moisturizer) தடவிக்கொண்டு பிறகு குளிக்கப் போகலாம். மாய்ஸ்ச்சரைசர், ஒரு கவசம்போலச் செயல்படும்.  குளித்து முடித்த உடனேயே உடலை நன்றாகத் துடைத்துவிட்டு, மீண்டும் ஒருமுறை மாய்ஸ்ச்சரைசர் தடவிக் கொள்ள வேண்டியது அவசியம்.

மக்கள் நடமாட்டம் இருப்பதால், நீர் மிகவும் அசுத்தமாக இருக்க வாய்ப்புள்ளது. அதில் குளிப்பதால் அரிப்பு, அலர்ஜி உள்ளிட்ட பல பிரச்னைகள் வருவது சகஜம்தான்.

ஒருவேளை நீர்நிலைகளில் நீங்கள் முழுமையாகவெல்லாம் குளிக்கவில்லை, வெறுமனே முங்கி எழுந்து வந்துவிட்டீர்கள் என்றால், உங்கள் இடத்துக்குத் திரும்பியதும் சுத்தமான நீரில் முழுமையாகக் குளித்து விடுங்கள்.  பிறகு மாய்ஸ்ச்சரைசர் தடவிக் கொள்ளுங்கள்.  சருமத்தைப் போலவே தலைமுடிக்கும் கண்டிஷனர் (conditioner) பயன்படுத்துவது  கூந்தலுக்கான பாதுகாப்பு கவசமாகச் செயல்படும். அதாவது முடியின் கியூட்டிக்கிள் (cuticle) பகுதியைப் பாதுகாக்கும். நீச்சல் குளங்களில் குளிப்பவர்களுக்கும் இதே நடைமுறைகள் பொருந்தும்.

இத்தனை விஷயங்களைச் செய்த பிறகும் சருமத்தில் அரிப்பு, தடிப்பு (rashes) அல்லது எக்ஸிமா (eczema) போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சருமநல மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...