Skip to main content

Doctor Vikatan: அடிக்கடி கத்திரிக்காய் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன்ஸ் வருமா?

Doctor Vikatan: சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடக்கூடாது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் கத்திரிக்காயும் சாப்பிடக்கூடாது என்று சொல்வது சரியா... அடிக்கடி தக்காளியும் கத்திரிக்காயும் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன் வரும் என்பது உண்மையா? 

பதில் சொல்கிறார், சிறுநீரக மருத்துவர் பிரபு காஞ்சி

சிறுநீரக மருத்துவர் பிரபு காஞ்சி

``சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் (Calcium Oxalate Stones), கால்சியம் பாஸ்பரஸ் கற்கள் (Calcium Phosphorus Stones), யூரிக் அமில கற்கள் (Uric Acid Stones), ஸ்ட்ருவைட் கற்கள் (Struvite Stones) என பொதுவாக நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் இந்திய மக்கள் தொகையில் சுமார் 80% பேருக்கு கால்சியம் ஆக்ஸலேட் வகை கற்களே உருவாகின்றன.

போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் உடல் வறட்சி (Dehydration), உணவில் உப்பு மற்றும் உணவில் அதிகப்படியான  ரெட் மீட் சேர்த்துக் கொள்வது என கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் உருவாவதற்குப் பல  காரணங்கள் உண்டு. நாம் உண்ணும் சில உணவுகளில் ஆக்ஸலேட் அளவு அதிகமாக இருக்கும்போது, அது சிறுநீரில் கால்சியத்துடன் இணைந்து படிகங்களாக (Crystals) மாறி கற்களை உருவாக்குகிறது.

சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் சாக்லேட், டீ, நட்ஸ், கீரை வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தக்காளி மற்றும் கத்திரிக்காயில் ஆக்ஸலேட் இருந்தாலும், அவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் (Anti-inflammatory) அதிகம் உள்ளன. எனவே, ஆரோக்கியமான நபர்கள் இவற்றைத் தாராளமாகச் சாப்பிடலாம். இவை கற்களை உருவாக்காது. 

சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் சாக்லேட் மற்றும் டீ, நட்ஸ், கீரை வகைகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

குறிப்பாக, கத்திரிக்காயின் தோலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளதால், அவற்றைத் தவிர்க்க வேண்டியதில்லை. ஏற்கெனவே கால்சியம் ஆக்ஸலேட் கற்கள் இருப்பவர்கள் மட்டும் மேற்குறிப்பிட்ட ஆக்ஸலேட் உள்ள உணவுகளைத் தவிர்ப்பதுடன், கத்திரிக்காய் மற்றும் தக்காளி எடுத்துக்கொள்வதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். 

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க அல்லது மீண்டும் வராமல் இருக்க  மூன்று விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு நாளைக்குக் குறைந்தது 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அல்லது திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். கோடைக்காலத்தில் இதன் அளவை இன்னும் அதிகரிக்கலாம்.  உணவில் உப்பின் அளவை பாதியாகக் குறைக்க வேண்டும்.  அசைவ உணவுகளைக் குறைத்து, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. மற்றபடி, கத்திரிக்காய், தக்காளி சாப்பிடுவதால் ஆரோக்கியமான நபர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகவெல்லாம் வாய்ப்பே இல்லை."

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...