Skip to main content

Doctor Vikatan: 50 ப்ளஸ் வயதில் பால் அலர்ஜி... தற்காலிகமானதா? நிரந்தரமாகத் தொடருமா?

Doctor Vikatan: என் வயது 50. இத்தனை வருடங்களாக நான் பால் மற்றும் பால் உணவுகள் சாப்பிட்டு வந்திருக்கிறேன். திடீரென ஏற்பட்ட வயிற்றுக் கோளாறுக்காக மருத்துவரை அணுகியபோது, பால் அலர்ஜி என்று சொல்லி, பால், பால் பொருள்கள் அனைத்தையும் தவிர்க்கச் சொல்கிறார். 

பால் அலர்ஜி என்றால் பனீர், தயிர், மோர் என எதுவும் சாப்பிடக்கூடாதா.... சைவ உணவுப் பழக்கமுள்ள எனக்கு வேறு எப்படி கால்சியம் கிடைக்கும்? பால் அலர்ஜி என்பது இப்படி திடீரென வருமா... நிரந்தரமாகத் தங்கிவிடுமா... இனிமேல் நான் வாழ்க்கையில் பால் மற்றும் பால் உணவுகளே சாப்பிடக்கூடாதா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்
ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்

நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்தப் பிரச்னை, சமீப காலங்களில் நிறைய பேருக்கு இருப்பதைப் பார்க்கிறோம். குறிப்பாக, ஒருவருக்கு ஏதேனும் பாக்டீரியா தொற்று வந்து குணமான பிறகு அவரது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் காணாமல் போய்விடுவதால் பால் செரிமானமாவதில் சிக்கலைச் சந்திக்கிறார்கள்.

நீங்கள் ஒரேயடியாக பால் எடுத்துக்கொள்வதையே தவிர்க்க வேண்டும் என அவசியமில்லை. பாலில் பாதிக்குப் பாதி தண்ணீர் கலந்து, டீ அல்லது காபி, ஒருநாளைக்கு ஒன்றிரண்டு முறை குடித்தால் பிரச்னை வருவதில்லை. ஆனால், முதல்கட்டமாக சில நாள்களுக்காவது பால் மற்றும் பால் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

குறிப்பாக, பனீர், சீஸ் போன்ற பொருள்களைத் தவிர்த்து விடலாம். இப்போது லாக்டோஸ் இல்லாத பால், பாதாம் பால், வேர்க்கடலை பால், சோயா பால் என நிறைய மாற்று உணவுகள் கிடைக்கின்றன. வழக்கமான பாலுக்குப் பதில் இவற்றைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

பால் அலர்ஜி இருந்தாலும் தயிர், மோர் போன்றவற்றைச் சாப்பிடலாம். அவற்றில் உள்ள புரோபயாடிக் குடலுக்கு ஆரோக்கியமானதுதான். உங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னை, இனி நிரந்தரமாகத் தங்கிவிடும் என்று சொல்ல முடியாது. தற்காலிகமாக இருந்துவிட்டு சரியாகலாம்.

பனீர், சீஸ் போன்ற பொருள்களைத் தவிர்த்து விடலாம்.
பனீர், சீஸ் போன்ற பொருள்களைத் தவிர்த்து விடலாம்.

புரொக்கோலி, கீரைகள், முருங்கைக்காய், சோயா எனக் கால்சியம் சத்துக்கான உணவுகள் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்துகொண்டு சரியாகத் தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். 

நீங்கள் சாப்பிடும் உணவுகளை ஒரு டைரியில் குறித்து வர வேண்டும். எந்த உணவு சாப்பிட்டால் பிரச்னை வருகிறது எனத் தெரிந்துகொண்டு, அதைத் தவிர்க்கலாம். தற்காலிகமாக சில நாள்களுக்கு அவற்றைத் தவிர்த்துப் பார்த்துவிட்டு, ஓர் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சாப்பிட்டு, மறுபடி ஒவ்வாமை வருகிறதா எனப் பார்க்க வேண்டும். அப்போதும் அந்த உணவு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதை நிரந்தரமாக தவிர்ப்பதே நல்லது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...