Skip to main content

Face Pack: முட்டை, காபித்தூள், சர்க்கரை ஃபேஸ் பேக் முகத்துக்கு நல்லதா? – மருத்துவர் விளக்கம்!

முட்டை, காபித்தூள், சர்க்கரை இவை மூன்றையும் கலந்து முகத்திற்குப் பேக்காக பயன்படுத்துவது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவற்றை முகத்திற்குப் பயன்படுத்தலாமா; அவ்வாறு பயன்படுத்தினால் பாதிப்புகள் ஏதேனும் வருமா என்ற சந்தேகங்களுக்கு தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகர் பதிலளிக்கிறார்.

Face pack
Face pack

''முட்டை, காபித்தூள், சர்க்கரையைக் கலந்து முகத்திற்கு பேக்காக போட்டு, அதன் மேலே டிஷ்யூ பேப்பரை முகத்தில் ஒட்டி, காய்ந்ததும் பீல் ஆஃப் பேஸ் பேக் (peel off face pack) போல உரித்து எடுக்கிறார்கள். இது ஒரு சாண்ட் பேப்பரை (Sanding Paper) முகத்தில் ஒட்டி இழுப்பதற்கு சமம். அதனால், இந்தக் கலவை முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். சர்க்கரை மற்றும் காபித்தூளை முகத்திற்கு ஸ்கிரப்பாகப் பயன்படுத்தினால் முகம் பளபளக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்த மாதிரிப் பொருள்கள் தோலை சேதப்படுத்தவே வாய்ப்பு அதிகம்.

உணவுப் பொருள்களான முட்டை, சர்க்கரை மற்றும் காபித்தூள் போன்ற பொருள்களை முகத்தில் தடவினால் அரிப்பு, எரிச்சல் மற்றும் முகம் சிவத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், சிலருக்கு தோலில் அலர்ஜிகூட ஏற்படலாம். இதில் முட்டை இருப்பதால், சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு முகப்பரு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட முரட்டு சிகிச்சை செய்யாமல், உங்கள் சருமத்தை மென்மையாகப் பராமரிப்பதே சரி.

டாக்டர் நித்திலா சந்திரசேகர்.
டாக்டர் நித்திலா சந்திரசேகர்.

இதற்கு பதிலாக, முகத்தில் ப்ளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் நீக்க மருத்துவர்கள் தரும் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். ஏனென்றால், அவர்கள் உங்களுக்கு எந்த அளவுக்குப் பிரச்னை இருக்கிறது என்று சோதித்த பிறகுதான் மருந்தைப் பரிந்துரைப்பார்கள். இல்லையென்றால், அவற்றை நீக்குவதற்கு சரியான முறையில் கருவிகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். முட்டை, காபித்தூள், சர்க்கரையைப் பயன்படுத்தி உரித்து எடுக்கிற அழகு சிகிச்சை வேண்டவே வேண்டாம்'' என்கிறார், டாக்டர் நித்திலா சந்திரசேகர்.


Comments

Popular posts from this blog

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...

Doctor Vikatan: ஒருமுறை heart attack வந்தவர்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா?

Doctor Vikatan: என் நண்பனுக்கு 52 வயதாகிறது. சமீபத்தில் அவனுக்கு ஹார்ட் அட்டாக் (heart attack) வந்து அதிலிருந்து மீண்டான். ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்தால், அது மீண்டும் வருமா.... அப்படி வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம். மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் ஒருமுறை ஹார்ட் அட்டாக் (heart attack) வந்த எல்லோருக்கும் அது மீண்டும் வந்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. உங்கள் நண்பரை, மருத்துவர்களுடன் தொடர்பில் இருக்கச் சொல்லுங்கள். உடல்நலம் குறித்துப் பேசும்படியான சப்போர்ட் க்ரூப் அவருக்கு மிக அவசியம். ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மட்டுமல்ல, இதய நோய் வரும் ரிஸ்க் பிரிவில் உள்ள எல்லோருமே வாழ்வியல் மாற்றங்களைப் பின்பற்றியே ஆக வேண்டும். உங்கள் நண்பருக்கு மருத்துவர் இது குறித்து நிச்சயம் அறிவுறுத்தியிருப்பார். இதுவரை, அவர் அந்த விஷயங்களைப் பின்பற்றவில்லை என்றாலும், இனிமேலாவது அவசியம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த வகையில் உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி Doctor Vik...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...