Skip to main content

Face Pack: முட்டை, காபித்தூள், சர்க்கரை ஃபேஸ் பேக் முகத்துக்கு நல்லதா? – மருத்துவர் விளக்கம்!

முட்டை, காபித்தூள், சர்க்கரை இவை மூன்றையும் கலந்து முகத்திற்குப் பேக்காக பயன்படுத்துவது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவற்றை முகத்திற்குப் பயன்படுத்தலாமா; அவ்வாறு பயன்படுத்தினால் பாதிப்புகள் ஏதேனும் வருமா என்ற சந்தேகங்களுக்கு தோல் மருத்துவர் நித்திலா சந்திரசேகர் பதிலளிக்கிறார்.

Face pack
Face pack

''முட்டை, காபித்தூள், சர்க்கரையைக் கலந்து முகத்திற்கு பேக்காக போட்டு, அதன் மேலே டிஷ்யூ பேப்பரை முகத்தில் ஒட்டி, காய்ந்ததும் பீல் ஆஃப் பேஸ் பேக் (peel off face pack) போல உரித்து எடுக்கிறார்கள். இது ஒரு சாண்ட் பேப்பரை (Sanding Paper) முகத்தில் ஒட்டி இழுப்பதற்கு சமம். அதனால், இந்தக் கலவை முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தலாம். சர்க்கரை மற்றும் காபித்தூளை முகத்திற்கு ஸ்கிரப்பாகப் பயன்படுத்தினால் முகம் பளபளக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால், இந்த மாதிரிப் பொருள்கள் தோலை சேதப்படுத்தவே வாய்ப்பு அதிகம்.

உணவுப் பொருள்களான முட்டை, சர்க்கரை மற்றும் காபித்தூள் போன்ற பொருள்களை முகத்தில் தடவினால் அரிப்பு, எரிச்சல் மற்றும் முகம் சிவத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், சிலருக்கு தோலில் அலர்ஜிகூட ஏற்படலாம். இதில் முட்டை இருப்பதால், சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு முகப்பரு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட முரட்டு சிகிச்சை செய்யாமல், உங்கள் சருமத்தை மென்மையாகப் பராமரிப்பதே சரி.

டாக்டர் நித்திலா சந்திரசேகர்.
டாக்டர் நித்திலா சந்திரசேகர்.

இதற்கு பதிலாக, முகத்தில் ப்ளாக் ஹெட்ஸ், ஒயிட் ஹெட்ஸ் நீக்க மருத்துவர்கள் தரும் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். ஏனென்றால், அவர்கள் உங்களுக்கு எந்த அளவுக்குப் பிரச்னை இருக்கிறது என்று சோதித்த பிறகுதான் மருந்தைப் பரிந்துரைப்பார்கள். இல்லையென்றால், அவற்றை நீக்குவதற்கு சரியான முறையில் கருவிகளைக் கொண்டு சிகிச்சை அளிப்பார்கள். முட்டை, காபித்தூள், சர்க்கரையைப் பயன்படுத்தி உரித்து எடுக்கிற அழகு சிகிச்சை வேண்டவே வேண்டாம்'' என்கிறார், டாக்டர் நித்திலா சந்திரசேகர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...