Skip to main content

Doctor Vikatan: தள்ளிப்போகும் முதலிரவு... இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை, என்ன தீர்வு?

Doctor Vikatan: எனக்கு சமீபத்தில்தான் திருமணமானது. முதலிரவின்போது என்னால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியவில்லை. உடல் இறுகிவிட்டது போல உணர்ந்தேன். 'முதல்முறை... அப்படித்தான் இருக்கும்... பயப்படாதே... பதற்றப்படாதே....' என கணவரும் ஆறுதல் சொன்னார். ஆனால், திருமணமாகி 4 மாதங்களைக் கடந்துவிட்ட நிலையிலும் இந்தப் பிரச்னை தீர்ந்த பாடாக இல்லை.  இதை எப்படிப் புரிந்துகொள்வது... என்னுடைய வித்தியாசமான பிரச்னைக்குத் தீர்வு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்   

நித்யா ராமச்சந்திரன்

முதல்முறை தாம்பத்திய உறவின்போது, உறவுக்கு உங்கள் உடல் ஒத்துழைக்காத நிலையை  'வெஜைனிஸ்மஸ்' (Vaginismus)  என்று குறிப்பிடுவோம். உங்களுடைய அறிகுறிகளும் அப்படித்தான் தெரிகின்றன. இந்தப் பிரச்னையில் வெஜைனாவின் தசைகள் சுருங்கிக் கொள்ளும்.  'வெஜைனிஸ்மஸ்' பிரச்னையானது தாம்பத்திய உறவின்போது மட்டும்தான் ஏற்பட வேண்டும் என்றில்லை. மருத்துவப் பரிசோதனைக்காக மகப்பேறு மருத்துவரிடம் செல்லும்போது, மருத்துவர் அந்தரங்க உறுப்பை டெஸ்ட் செய்ய முனையும்போது சிலர் அதற்கு ஒத்துழைக்க மாட்டார்கள்.

திருமணமாகாத பெண்ணாக இருந்து, பீரியட்ஸின்போது டாம்பூன் அல்லது மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிக்க நினைத்தாலும் அதற்கு அவர்கள் உடல் ஒத்துழைக்காது. கஷ்டப்பட்டு அதைப் பொருத்திக்கொள்ள முனையும்போது எரிச்சலும் வலியும்தான் மிஞ்சும். இந்த அறிகுறிகளை வைத்து உங்களுக்கு  'வெஜைனிஸ்மஸ்' இருப்பதை உறுதிசெய்யலாம். சிறுவயதில் நீங்கள் சந்தித்த பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், முதல்முறை தாம்பத்திய உறவு ஏற்படுத்திய கசப்பான அனுபவம், செக்ஸ் உறவை நினைத்தாலே வெறுப்பும் பதற்றமும் ஏற்படுவது, வெஜைனா, கர்ப்பவாய்ப் பகுதி போன்றவற்றில் ஏதேனும் தொற்று இருப்பது போன்று இப்பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கலாம்.

வெஜைனிஸ்மஸ் பிரச்னையை 95 சதவிகிதம் குணப்படுத்த முடியும். மருத்துவரை அணுகி முதலில் உங்கள் பிரச்னை பற்றி பேச வேண்டும்.  தாம்பத்திய உறவு குறித்த உங்களது பயம், பதற்றம் போன்றவற்றைப் போக்கவும் சிகிச்சை அவசியம். அடுத்து மருத்துவர் உங்களுக்கு சில பயிற்சிகளைக் கற்றுத் தருவார். அதாவது தாம்பத்தியத்துக்கு ஒத்துழைக்காத வெஜைனா  தசைகளைத் தளர்த்துவதற்கான பயிற்சிகள் அவை.

மருத்துவரை அணுகி, பிரச்னை பற்றி பேச வேண்டும்.

உங்களுடைய கடந்தகால கசப்பான அனுபவங்களைப் பேசவைத்து உங்களை அந்தக் கசப்பிலிருந்து மீட்கவும் தெரபி வழங்கப்படும். அடுத்து, பிரத்யேக கருவிகள் கொண்டு அளிக்கப்படும்  புரொக்ரசிவ் டீசென்சிட்டைசேஷன் தெரபி (Progressive desensitization therapy)  கொடுக்கப்படும். இந்தப் பிரச்னையை வெளியே சொல்லத் தயங்கிக் கொண்டு, அமைதி காப்பது உங்கள் திருமண உறவை மட்டுமல்ல, உங்கள் மனநலனையும் உடல்நலனையும்கூட பாதிக்கும். கணவருக்கும் உங்களுடைய இந்த நிலை குறித்துத் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் சிகிச்சைக்குச் செல்லும்போது அவரையும் உடன் அழைத்துச் செல்லலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...