Skip to main content

Doctor Vikatan: அனீமியா... இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் சருமம் கறுப்பாக மாறுமா?

Doctor Vikatan: என் வயது 62. எனக்கு ஹீமோகுளோபின் அளவு 8.4 என்பதாக இருக்கிறது. மருத்துவர் பரிந்துரைத்ததன் பேரில் அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுத்து வருகிறேன். நான் ஓரளவு நிறமாகவே இருப்பேன். ஆனால், அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுக்க ஆரம்பித்த பிறகு என் சருமம் ரொம்பவும் கருத்துவிட்டது. அயர்ன் சப்ளிமென்ட்ஸ்தான் காரணம் என்கிறார்கள் என் நண்பர்கள். இது உண்மையா... இரும்புச்சத்து மாத்திரைகள் எடுப்பதால் ஒருவரது சருமம் கறுப்பாக மாறுமா?

-Uma, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    

இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

நீங்கள் கேள்விப்பட்டதுபோல, இரும்புச்சத்து சப்ளிமென்ட்ஸ் எடுக்கும்போது சரும நிறம் கறுப்பாக மாறுவது இயல்புதான். ஆனால்,  நீண்டகாலமாக அயர்ன் சப்ளிமென்ட் எடுப்போருக்கும், இரும்புச்சத்து ஓவர்லோடு ஆகும் நிலையிலும்தான் இப்படி நடக்கும்.

அனீமியாவில் 'அயர்ன் டெஃபிஷியன்சி அனீமியா'  (Iron deficiency anemia) என்றொரு நிலை உண்டு. அதில் நீண்ட காலத்துக்கு அயர்ன் சப்ளிமென்ட்ஸ் எடுக்கும்போது,  சருமத்தில் கருந்திட்டுகள் உருவாவதைப் பார்க்கலாம். பெரும்பாலும் இந்த பாதிப்பானது தற்காலிகமானதுதான். தானாகவே சரியாகிவிடக்கூடியதுதான். அரிதாக சிலருக்கு நிரந்தரமாக அப்படியே தங்கிவிடுவதும் உண்டு.

உடலில் ரத்த ஓட்டம் போதுமான அளவு இல்லாவிட்டால், இதயம், மூளை உள்பட உடல் உறுப்புகள் பலவும் கூடுதலாக வேலைசெய்ய வேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாகும்.

உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது, ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது என்ற நிலையில், உடல் ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும். ஏனெனில் உடலில் ரத்த ஓட்டம் போதுமான அளவு இல்லாவிட்டால், இதயம், மூளை உள்பட உடல் உறுப்புகள் பலவும் கூடுதலாக வேலைசெய்ய வேண்டிய அழுத்தத்துக்கு உள்ளாகும்.

அதாவது உடல் உறுப்புகளுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காததால், உறுப்புகள் எப்போதும் ஒருவித அழுத்தத்தில் இருக்கும். இத்தகைய அழுத்தம் உடலுக்கு நல்லதில்லை. இதனால் வேறு பெரிய பிரச்னைகள் வரலாம். இதயம் மிகுந்த அழுத்தத்துக்கு உள்ளாகி, வேகமாகத் துடிக்கும். களைப்பு அதிகரிக்கும். அதிக களைப்பின் காரணமாக கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடத் தோன்றும்.

அதன் விளைவாக உடல் இயக்கம் குறையும். உடல் எடை அதிகரிக்கும். அதன் தொடர்ச்சியாக ரத்தச் சர்க்கரை அளவும் கொலஸ்ட்ரால் அளவும் அதிகமாகும். எனவே, அனீமியா பிரச்னையால் வேறு வேறு பாதிப்புகளும் தொடர்ச்சியாக ஏற்படும். 

அயர்ன் சப்ளிமென்ட் எடுத்தால் சருமத்தில் கருமை வருகிறது என்பதற்காக அவற்றைத் தவிர்த்தால், அனீமியா பிரச்னையை சரிசெய்யவே முடியாது.

அயர்ன் சப்ளிமென்ட் எடுத்தால் சருமத்தில் கருமை வருகிறது என்பதற்காக அவற்றைத் தவிர்த்தால், அனீமியா பிரச்னையை சரிசெய்யவே முடியாது. அனீமியா பிரச்னைக்கு ஆரோக்கியமான உணவுப்பழக்கம் அடிப்படை. நிறைய காய்கறிகள், பழங்கள் அவசியம். அவற்றில் இரும்புச்சத்து மட்டுமன்றி, வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளும் இருக்கும். அதீத ப்ளீடிங் போன்ற வேறு ஏதேனும் காரணங்களால் தீவிர அனீமியா பாதித்திருந்தால், அதிலிருந்து மீள சப்ளிமென்ட் எடுத்தே ஆக வேண்டும். சரும அழகை நினைத்துக் கவலைப்பட்டு சப்ளிமென்ட்டுகளை தவிர்ப்பது சரியான விஷயமல்ல. 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...