Skip to main content

`59% இந்தியர்கள் 6 மணிநேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர்' - அதிர்ச்சி தரும் அறிக்கை!

இந்திய அளவிலான மக்களின் தூக்க முறைகள் பற்றிய கணக்கெடுப்பு, 59 விழுக்காடு மக்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தையே பெறுகின்றனர் என்றும், வார இறுதிகளில் இந்த விழுக்காடு பாதியாகக் குறைவதாகவும் தெரிவித்துள்ளது.

நவீன வாழ்வியல் முறைகளில் தூக்கமின்மை முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அதற்கான காரணங்களை முன்வைக்கிறது இந்தக் கணக்கெடுப்பு. 

Sleep

2% மக்கள் மட்டுமே சரியாக 8-9 மணி நேரம் உறங்குகின்றனர்

லோக்கல் சர்கிள் என்ற அமைப்பு தூக்கம் தொடர்பாக 40,000 நபர்களைக் கணக்கெடுப்பு செய்துள்ளது. இதில் 61% ஆண்கள், 39% பெண்கள். 

இந்த அறிக்கையில், 39% பேர்தான் நிம்மதியாக 6-8 மணிநேரம் உறங்குவதாகவும் 39% பேர் 4-6 மணி நேரம்தான் உறங்க முடிவதாகவும் கூறப்பட்டுள்ளது. 2% மக்கள் மட்டுமே சரியாக 8-9 மணி நேரம் உறங்கும் நிலையில், 20% மக்கள் 4 மணி நேரம் மட்டுமே உறங்குகின்றனர். 

பெண்கள் வீட்டு வேலைகளால் தூங்க முடியவில்லை

கணக்கெடுக்கப்பட்டதில் 59% பேர் 6 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கத்தைப் பெறுகின்றனர். 

வருகின்ற மார்ச் 14ம் தேதி உலக தூக்க தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு இந்தியாவின் 348 மாவட்டங்களில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் 72% பேர் தூக்கத்தின் நடுவில் கழிப்பறை பயன்படுத்த வேண்டியிருப்பது சரியாகத் தூங்க முடியாததற்கு ஒரு காரணம் எனக் கூறியுள்ளனர். 

washing

25% பேர் அதிகாலையில் வேலை  இருப்பதனால் சரியாகத் தூங்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர். குறிப்பாகப் பெண்கள் வீட்டு வேலைகளில் ஈடுபட வேண்டியிருப்பதனால் சரியாகத் தூங்க முடியவில்லை என்ற காரணத்தைக் கூறியுள்ளனர். 

22% பேர் கொசுக்கள் மற்றும் வெளிப்புற சத்தங்களால் தூங்க முடிவதில்லை எனக் கூறியுள்ளனர். 9% பேர் பெற்றோர், குழந்தைகள் அல்லது குடும்பத்தினரால் ஏற்படும் தொந்தரவு காரணமாகத் தூங்க முடியவில்லை என்றும், மற்றொரு 9% பேர் தூக்கத்தில் மூச்சுக்கோளாறு போன்ற மருத்துவ பிரச்னைகளால் தூங்க முடிவதில்லை எனக் கூறியுள்ளனர். 

6% பேர் மொபைல் பயன்பாட்டால் தூங்க முடிவதில்லை எனக் கூறியுள்ளனர். 

தூக்கமின்மையின் பாதிப்புகள்:

இரவில் சரியாகத் தூங்க முடியாததை ஈடுசெய்ய வேலை நேரத்தில் பவர் நாப் செய்வது, மதிய உணவுக்குப் பிறகு தூங்குவது, வார இறுதியில் தாமதமாக எழுவது போன்ற பழக்கங்களைக் கொண்டுள்ளனர். அதிலும் 38% பேர் இப்படி வார இறுதிகளில் கூட ஈடு செய்ய முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

தூக்கமின்மை

தூக்கமின்மை (Insomnia) இந்தியாவில் மிகப் பெரிய பிரச்னையாக உருவாகியுள்ளது. உயர் ரத்த அழுத்தம், இதய கோளாறு, பக்கவாதம் வளர்சிதை மாற்றக் கோளாறு மற்றும் அறிவாற்றல் குறைவு போன்ற பிரச்னைகளை இது ஏற்படுத்தும் என்பதனால் இது நிச்சயம் நாம் கவலைப்பட வேண்டிய ஒன்று. 

லோக்கல் சர்கிள் நிறுவனர் சச்சின் தபாரியா, "பெரும்பாலான இந்தியர்கள் அதிக வேலை நேரம், பயண நேரம் காரணமாக 9 மணிக்கு மேல்தான் இரவு உணவை உட்கொள்கின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களுக்காகக் காலை வேலைகள் சீக்கிரமாகத் தொடங்கிவிடும். இதனால் தூக்கம் பாதிக்கப்படுகிறது. தூங்கும் நேரமும் தூக்கத்தின் தரமும் மேம்பட வேண்டுமென்றால் இந்த நிலை மாற வேண்டும்." எனக் கூறியுள்ளார். 


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...