Skip to main content

`Sugar-Free', `No Added Sugar' -இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? எது சிறந்தது?

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்துக்கு மாறுவதற்கான முதல் அடி சர்க்கரை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துவதுதான். அதிகப்படியாக சர்க்கரை உட்கொள்வது உடல் பருமனை ஏற்படுத்துவதுடன், நாளடைவில் நீரிழிவு நோய் மற்றும் பிற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

சர்க்கரையை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் முதலில் துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைக்க வேண்டும். அடிப்படை உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் பலகாரங்கள், குளிர்பானங்களையும் குறைக்க வேண்டும்.

சர்க்கரை குறைவான, இரத்தத்தில் உடனடியாக கலக்காத உணவுகளைத் தேர்ந்தெடுப்பது சவாலான காரியமாக தோன்றினாலும், அதற்கு பழக்கப்படுத்திக்கொள்வது எளிதுதான்.

சர்க்கரை

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு முன்பே நாம் உட்கொள்ளும் உணவு குறித்த விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். இதில் கட்டுப்பாட்டுடன் இருக்கும் நபர்களுக்கு கூட சரியான உணவை தேர்ந்தெடுப்பதில் எப்போதும் குழப்பம் ஏற்படுகிறது. அதில் முக்கியமான குழப்பம் Sugar Free மற்றும் no added sugar எனக் குறிப்பிட்டிருக்கும் பொருள்களில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான்.

பலரும் இந்த இரண்டுமே சர்க்கரை இல்லாததை குறிப்பதுதான் என நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் உண்மை என்ன?

Sugar Free

ஹாவர்ட் ஹெல்த் பப்ளீஷிங் (Harvard Health Publishing) கூறுவதன்படி, சுகர் ஃப்ரீ பொருள்களில் ஒருமுறை உட்கொள்வதில் (One Serving) 0.5 கிராம் அளவு சர்க்கரை இருக்கும்.

இந்த பொருள்களில் சர்க்கரை சேர்க்கப்படாவிட்டாலும் ஆஸ்பர்டேம் (Aspartame), ஸ்டெவியா (Stevia) போன்ற செயற்கை இனிப்புகள் இருக்கும். இதனால் நம்மால் இனிப்பு சுவையை உணர முடியும் ஆனால் கலோரிகள் அதிகரிக்காது.

சில சுகர் ஃப்ரீ பொருள்களில் இயற்கையான சர்க்கரை இருக்கலாம். அப்படி இருந்தால் அதில் கலோரிகள் இருக்கும்.

No Added Sugar Product

No Added Sugar

தேசிய சுகாதார நிறுவனம் கூறிவதன்படி, நோ ஆடட் சுகர் (No Added Sugar) என குறிப்பிட்டுள்ள உணவுப்பொருள்கள் தயாரிப்பின் போதும், பக்குவப்படுத்துதலின் போதும் சர்க்கரை சேர்க்கப்படாது. செயற்கை இனிப்புகள் சேர்க்கப்படாது. ஆனால் மூலப்பொருளில் உள்ள சர்க்கரை அப்படியே இருக்கும்.

உதாரணமாக Kellogg’s Muesli No added sugar என்ற உணவை எடுத்துக்கொண்டால், அதிலிருக்கும் ஓட்ஸ் மற்றும் இதர பொருள்களின் இனிப்பு சுவை அப்படியே இருக்கும். ஆனால் செயற்கையாக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்காது.

எது ஆரோக்கியமானது?

Sugar Free அல்லது No Added Sugar இரண்டையுமே நாம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் சுகர் ஃப்ரீயை தொடக்கத்தில் கொஞ்ச நாள்களுக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது. அதாவது நம் இனிப்பு உண்ணும் பழக்கத்தை கட்டுப்படுத்தும் வரை செயற்கையான இனிப்புகளை நாடியிருக்கலாம். ஏனெனில் ஆய்வுகள், நீண்ட கால நோக்கில் செயற்கை இனிப்பான்களையும் கட்டுப்ப்படுத்தி `நோ ஆடட் சுகர்' பொருள்களைப் பயன்படுத்துவதே சிறந்த தேர்வாக முன்வைக்கின்றன.

Sugar Free

சர்க்கரையை கட்டுப்படுத்த சந்தையில் பல பொருள்கள் வந்துவிட்டதாலே நாம் சர்க்கரையைக் கண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை. குறைந்த அளவில் நாம் தினமும் சர்க்கரை எடுத்துக்கொள்வதால் எந்த பிரச்னையும் வராது. ஆனால் சர்க்கரையின் அளவு குறித்தும் நாம் உண்ணும் உணவுப்பொருள்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்!


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...