Skip to main content

Doctor Vikatan: வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே மலச்சிக்கல் சரியாகும் என்பது உண்மையா?

Doctor Vikatan: மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள், வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் உடனே நிவாரணம் தெரியும் என்கிறார்களே... இது உண்மையா? மலச்சிக்கலுக்கான மாத்திரைகள் அடிக்ஷனாக மாற வாய்ப்புண்டா? அப்போது உப்பு- வெந்நீர் கரைசல் குடிப்பது சரியானதா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா

குடலியல் அறுவை சிகிச்சை மருத்துவர் பினாக் தாஸ்குப்தா

மலச்சிக்கல் பிரச்னையோடு வரும் பலரும், கூகுளில் இந்தத் தகவலைப் பார்த்துவிட்டு, வெந்நீரில் உப்பு கலந்து சாப்பிட்டால், பிரச்னை சரியாகிவிடுமா என்ற கேள்வியோடு மருத்துவர்களைச் சந்திக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு மட்டுமல்ல, எந்த நோய்க்கும், கூகுள் டாக்டரை நம்பாமல், சரியான மருத்துவரிடம், முறையான சிகிச்சை எடுப்பதுதான் பாதுகாப்பானது.

உப்பு கலந்த வெந்நீர் குடிப்பதால், உங்கள் உடலில் சோடியம் அளவு அதிகரித்து, அதன் விளைவாக தற்காலிகமாக மலச்சிக்கல் பிரச்னை சரியாகலாம். ஆனால், அது நிரந்தர தீர்வோ, பாதுகாப்பான தீர்வோ அல்ல. சோடியம் அதிகமுள்ளதால் இந்தச் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் கிட்னி பாதிப்பு உள்ள நபர்களுக்கு மிகமிக ஆபத்தானது. இன்னும் சிலர், மலச்சிக்கல் பிரச்னைக்கு மருந்துக் கடைகளில் சுயமாக மாத்திரைகள் வாங்கிப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது ஒரு கட்டத்தில் மாத்திரை இல்லாமல் மலம் கழிக்க முடியாது என்ற அடிக்ஷன் நிலையை ஏற்படுத்தலாம். எனவே, இவை எல்லாமே தற்காலிக தீர்வுகள்தான்.

வெந்நீரில் உப்பு கலந்து குடித்தால் மலச்சிக்கல் சரியாகுமா?

மலச்சிக்கலுக்கான மருந்து உங்கள் உணவுப்பழக்கத்தில்தான் இருக்கிறது. உங்கள் உணவில் போதுமான அளவு நார்ச்சத்து இருக்க வேண்டும். ஒவ்வொரு நாள் உணவிலும் குறைந்தபட்சம் இரண்டு வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள் இருக்க வேண்டும். தவிர, தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை உறுதிசெய்ய வேண்டும். தண்ணீர் மட்டுமன்றி, சூப், ஜூஸ், ரசம், கஞ்சி, மோர் என எல்லாம் சேர்ந்து 3 லிட்டர் திரவம் உங்கள் உடலுக்குள் போக வேண்டும். அப்போதுதான் மலச்சிக்கல் இல்லாமலிருக்கும்.

வெந்நீரில் உப்பு கலந்து குடிப்பதும், பார்மசியில் மாத்திரை வாங்கிப் பயன்படுத்துவதும் மலச்சிக்கல் பிரச்னைக்கு தற்காலிக தீர்வைக் கொடுத்துவிட்டு, மறுபடி அதே பிரச்னையைத் தொடரச் செய்யும். பிரச்னைக்கான காரணம் அறிந்து, அதற்கான சரியான சிகிச்சையை எடுப்பதை எப்போதும், எல்லா விஷயங்களிலும் நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...