Skip to main content

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை கூடும் என்பது உண்மையா?

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடுமா... லேகியம், கஷாயம் போன்றவற்றில் நெய், தேன் போன்றவை சேர்ப்பது தான் காரணம் என்பது உண்மையா?

பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருத்துவர் விக்ரம்குமார்

சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே உடல் எடை கூடும் என்பது தவறான தகவல். மிகவும் மேலோட்டமான பார்வை என்றே சொல்லலாம். 

லேகியம், சிரப் போன்றவை தயாரிக்க, தேன், நெய் போன்றவை மூலப்பொருள்களாகச் சேர்க்கப்படும் என்பது உண்மைதான். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை, அவர் குறிப்பிடும்படி, குறிப்பிடும் நாள்களுக்குத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். முறையாக எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்காது. லேகியம் என்றாலும் 5 கிராம் அளவுதான் எடுத்துக்கொள்ளச் சொல்வார்கள். அப்படி எடுக்கும்போது உடல் எடை அதிகரிக்காது. ஆனால், மருத்துவரை ஒருமுறை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் லேகியம் உள்ளிட்ட மருந்துகளை மாதக் கணக்கில் எடுத்துக்கொண்டால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

லேகியம், சிரப் போன்றவை தயாரிக்க, தேன், நெய் போன்றவை மூலப்பொருள்களாகச் சேர்க்கப்படும் என்பது உண்மைதான்.

இதுவும் எல்லோருக்கும் பொருந்தாது. உணவு விஷயத்தில் சொல்லப்படுகிற அதே அறிவுரை இதற்கும் பொருந்தும். உணவை சாப்பிட்டுவிட்டு, உடலுழைப்பே இல்லாமல் இருந்தால் எப்படி உடல் எடை கூடுமோ, அதே போல, இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போதும் உடல்ரீதியான உழைப்பு அவசியம். மருத்துவர் பரிந்துரையோடு மருந்தாக எடுத்துக்கொள்ளும்போது அவரவர் உடல் தன்மைக்கேற்பவே அது வேலை செய்யும்.  அதைத் தவிர்த்து வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளை பார்த்தும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டும் நாள்கணக்கில் எடுக்கும்போதுதான் பிரச்னையே. 

சித்த மருந்துகளில் பிரதானமான கஷாயம் எடுத்தால் உடல் எடை அதிகரிக்கும் என்பதும் தவறான தகவலே. கஷாயத்தில் நூற்றுக்கணக்கான வகைகள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் உடல் எடையைக் குறைக்கும் கஷாயம்கூட இருக்கிறது. ஏற்கெனவே ஒரு நபருக்கு தைராய்டு உள்ளிட்ட வேறு பிரச்னைகள் இருந்து, மருந்துகளும் எடுக்கும்போது நோயின் காரணமாக எடை கூடலாமே தவிர, சித்த மருந்துகளால் எடை வட வாய்ப்பே இல்லை.

ஒரு நபருக்கு தைராய்டு உள்ளிட்ட வேறு பிரச்னைகள் இருந்து, மருந்துகளும் எடுக்கும்போது நோயின் காரணமாக எடை கூடலாமே தவிர, சித்த மருந்துகளால் எடை வட வாய்ப்பே இல்லை.

சித்த மருந்துகளில் தேன்  சேர்க்கப்படும்போது அதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா, கூடாதா என்பதையும் சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். தேனும், நெய்யும் உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் உணவுகள். எனவே, யாருக்கு எது தேவை என்பதைப் பொறுத்தே மருத்துவர் அவற்றைப் பரிந்துரைப்பார்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...