Skip to main content

Doctor Vikatan: ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருமா... தோலுடன் சாப்பிடலாமா?

Doctor Vikatan: தினமும் ஆப்பிள் சாப்பிடலாமா... ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருமா... தோலுடன் சாப்பிடலாமா?டயாப்பட்டிஸ் உள்ளவர்கள் ஆப்பிள் சாப்பிடலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் அம்பிகா சேகர்.

அம்பிகா சேகர்

ஆரோக்கியமான நபர் தினமும் ஆப்பிள் சாப்பிடலாம். ஆப்பிள் சாப்பிடுவதால் மலச்சிக்கல் வர வாய்ப்பில்லை. ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதுதான் சரியானது, அதுதான் ஆரோக்கியமானது. ஆனால்,  இப்போது வரும் ஆப்பிள்கள் மெழுகுப்பூச்சுடன்  இருப்பதால், அவற்றை தோல் நீக்கிச் சாப்பிடுவதுதான் சரியானது.

மற்றபடி உள்ளூரில் விளைவிக்கப்பட்டு வரும் மெழுகுப்பூச்சு இல்லாத ஆப்பிள்கள் என்றால் தோல் நீக்காமலேயே சாப்பிடலாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 100 கிராம் அளவுக்கு பழங்கள் சாப்பிடலாம். அந்த வகையில் அவர்கள் தினமும் அரை ஆப்பிள் சாப்பிடலாம். அதே சமயம், அவர்களது மூன்று மாத சராசரி சர்க்கரை அளவான HbA1c என்பது 8-க்கு மேல் இருந்தால் அவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறந்த குழந்தைகளுக்கு திட உணவுகள்  கொடுக்க ஆரம்பிக்கும்போது ஆப்பிளை வேக வைத்து மசித்துக் கொடுப்பது வழக்கம். அது மாவு ஆப்பிளாக  இருந்தால் நல்லது.  மாவு ஆப்பிளாகட்டும், சாறு அதிகமுள்ள ஆப்பிளாகட்டும், இரண்டிலும்  நார்ச்சத்து உள்ளிட்ட அனைத்து சத்துகளும்  ஒன்றாகவே இருக்கும்.  ஆனாலும், குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது எளிதில் செரிமானமாக வேண்டும் என்பதற்காக மாவு ஆப்பிளாக கொடுப்பது சிறந்தது. 

பிறந்த குழந்தைகளுக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கும்போது ஆப்பிளை வேக வைத்து மசித்துக் கொடுப்பது வழக்கம். அது மாவு ஆப்பிளாக இருந்தால் நல்லது.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய தேவை இருக்காது (An apple a day keeps the doctor away) என்று சொல்லப்பட்டது உண்மைதான். அந்த வகையில் ஆப்பிள் மிகச் சிறந்த உணவு. எல்லா சீசன்களிலும் செரிமானமாவதில் சிக்கல் தராது. அதன் பிஹெச் அளவானது சமமாக இருக்கும். அசிடிட்டியை ஏற்படுத்தாது. மருத்துவ சிகிச்சையில் இருப்போருக்கு மருந்துகளின் பக்கவிளைவால் வயிற்றுப் புண்கள் ஏற்படலாம். ஆப்பிளில் உள்ள பெக்டின் அந்தப் பிரச்னைக்கு சிறந்த மருந்தாக அமையும்.

ஆப்பிளை பொறுத்தவரை சீசனில் நமக்கு கிடைக்கும் ஆப்பிள் தான் சிறந்தது.  வாங்கி வைத்து பல நாள்கள் ஆனாலும் அழுகாமல் அப்படியே இருக்கும் ஆப்பிள்களைத் தவிர்க்கவும். சீசனில் ஃப்ரெஷ்ஷாக கிடைக்கும் ஊட்டி ஆப்பிள் போன்றவை ஆரோக்கியமானவை. இந்த விஷயத்தில் மட்டும் கவனமாக இருந்தால் போதும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...