Skip to main content

Doctor Vikatan: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதும் பிரச்னையா?

Doctor Vikatan: எனக்கு ஹீமோகுளோபின் அளவு 19 ஆக உள்ளது. இது வழக்கத்தைவிட அதிகம் என்பது புரிகிறது.  இப்படி ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதற்கான காரணம் என்ன... இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா... பாதிப்புகளை ஏற்படுத்துமா?

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி  

மருத்துவர் ஸ்ரீதேவி

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  அது சாதாரண பிரச்னை தொடங்கி, சீரியஸான பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். 

ஹீமோகுளோபின் என்பது நம் ரத்தச் சிவப்பணுக்களில் இருக்கக்கூடிய ஒருவித புரதம்.  நம் ரத்தச் சிவப்பணுக்களுக்கு சிவப்பு நிறத்தைக் கொடுப்பது இதுதான். நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச்செல்வதும், கார்பன் டை ஆக்ஸைடை உடலின் மற்ற பகுதிகளில் இருந்து நுரையீரலுக்கு கொண்டு போவதும்தான் இதன் வேலை.  உங்களுக்கு இருப்பது போன்று ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதை 'பாலிசைதீமியா' (Polycythemia) என்று சொல்கிறோம்.

ஆணுக்கு ஒரு டெசி லிட்டருக்கு 16.5 கிராமுக்கு மேல் ஹீமோகுளோபின் இருந்தாலோ, பெண்ணுக்கு அது 16 கிராமுக்கு மேல் இருந்தாலோ, குழந்தைக்கு 16.6 கிராமுக்கு மேல் இருந்தாலோ அந்த நிலையை 'பாலிசைதீமியா' என்று சொல்வோம். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு அது 18 கிராமுக்கு மேல் இருந்தால் அதை பாலிசைதீமியா என்போம்.

பாலிசைதீமியா பாதிப்புக்குப் பொதுவான காரணங்கள் சில உள்ளன. உதாரணத்துக்கு, தண்ணீர் குடிக்காமல் உடலில் நீர்வறட்சி ஏற்படுவது முக்கியமான காரணம்.

பாலிசைதீமியா பாதிப்புக்குப் பொதுவான காரணங்கள் சில உள்ளன. உதாரணத்துக்கு, தண்ணீர் குடிக்காமல் உடலில் நீர்வறட்சி ஏற்படுவது முக்கியமான காரணம். உயரமான பகுதிகளில் இருக்கும்போதும் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கலாம். ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருந்தால், தலைச்சுற்றல், எளிதில் அடிபடுதல், ரத்தப்போக்கு ஏற்படுவது, அதிகம் வியர்ப்பது, களைப்பாக உணர்வது, தலைவலி, மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது, அசாதாரண வெயிட்லாஸ் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். 

ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதால் ரத்தம் சராசரியைவிட சற்று அடர்த்தியாக இருக்கும். அதனால் ரத்தக்கட்டிகள் உருவாகலாம்.  அதன் காரணமாக வரக்கூடிய பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். 'க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ்' (Chronic obstructive pulmonary disease ) எனப்படும் 'நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்' போன்ற நுரையீரல் பாதிப்பு, பிறவியிலேயே ஏற்படக்கூடிய இதயநோய்கள், கிட்னி மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற காரணங்களாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கலாம். அரியவகை பாதிப்பான 'பாலிசைதீமியா வீரா' (Polycythemia vera ) எனப்படும் பாதிப்பிலும் இப்படி ஹீமோகுளோபின் அளவு அதிகமாகலாம். இந்தப் பிரச்னை மரபியல் காரணமாக ஏற்படுவது. இது ஒருவகை ரத்தப் புற்றுநோய்தான். சிறுவயதில் பெரும்பாலும் இதைக் கண்டுபிடிக்க முடியாது. 50 வயதுக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்படும். 

கிட்னி மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற காரணங்களாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கலாம்.

சிலவகை ஸ்டீராய்டு மருந்துகள் எடுப்பவர்களுக்கும், கார்பன் மோனாக்ஸைடு தாக்கத்துக்கு உள்ளானவர்களுக்கும்  ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கலாம். எனவே, உங்கள் விஷயத்தில் எந்தக் காரணத்தால்  ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதை மருத்துவரை சந்தித்து, டெஸ்ட் செய்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ரத்தவியல் சிகிச்சை நிபுணரை சந்திப்பது சரியாக இருக்கும். அவரால் உங்கள் பிரச்னையைத் துல்லியமாகக் கண்டுபிடித்து சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...