Skip to main content

Doctor Vikatan: அடிபடுவது, வலி, வீக்கம்... ஒரே ointment-ஐ எல்லாவற்றுக்கும் உபயோகிக்கலாமா?

Doctor Vikatan: அடிபட்டாலோ, வலி ஏற்பட்டாலோ ஆயின்மென்ட் தடவச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அப்படி உபயோகிக்கும் ஆயின்ட்மென்ட், ஜெல் போன்றவை  வலியை நீக்குவதில் எப்படிச் செயல்படுகின்றன.... அவை உண்மையிலேயே பலன் தருபவையா... அல்லது தற்காலிக நிவாரணத்துக்காகப் பரிந்துரைக்கப்படுகின்றனவா? ஒவ்வொரு முறை ஒவ்வொரு பிரச்னைக்குப் போகும்போதும் விதம்விதமான ஆயின்மென்ட், ஜெல் பரிந்துரைக்கிறார்கள். அந்த நேரம் தவிர, அவை பலனற்று, எக்ஸ்பைரி ஆகி, தூக்கி எறிய வேண்டியிருக்கிறது. ஒரே ஆயின்மென்ட், ஜெல்லை எல்லா விஷயங்களுக்கும் மேற்பூச்சாகப் பயன்படுத்த முடியாதா?

பதில் சொல்கிறார் சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்

வலிக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் நிறைய வகைகள் உள்ளன. அதைப்போலவே அந்த மருந்துகளை உடலுக்குள் செலுத்துவதிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் குறைந்தபட்ச பக்க விளைவுகளைக் கொண்ட, வெளிப்பூச்சு மருந்துகள்தான் ஆயின்மென்ட்டுகள்.  இவற்றில் க்ரீம், ஜெல், எண்ணெய் உட்பட நிறைய பிரிவுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் அதனதன் சாதக, பாதகங்கள் உள்ளன.

உடல் முழுவதும் வலி இருந்தாலோ, வலியுடன் காய்ச்சலும் இருந்தாலோ, ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி இருந்தாலோ, தேய்மானம் இருந்தாலோ வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் கொடுப்பார்கள். அதுவே சின்னதாக அடிபட்டாலோ, வீங்கினாலோ, தசைப்பிடிப்பு ஏற்பட்டாலோ, மருந்துகள் எடுத்து முடித்த பிறகு, மருந்துகளின் அளவைக் குறைப்பதற்காக, வலி ஏற்படும்போது மட்டும் எடுத்துக்கொள்ள ஆயின்மென்ட்டுகள் பரிந்துரைக்கப்படும். இதில் க்ரீம், ஜெல், ஆயில் போன்றவை மருந்துகளின் உட்சேர்க்கைக்கு ஏற்ப மாறுபடும்.

ஒவ்வொரு முறை ஒவ்வொருவிதமான ஆயின்மென்ட்டை மருத்துவர் பரிந்துரைப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது உங்கள் பிரச்னைக்கேற்பவே பரிந்துரைக்கப்படும். உதாரணத்துக்கு, சருமத்தில்  சிவப்புத்தன்மையைக்  குறைப்பதற்கு, ரத்த ஓட்டத்தைக் குறைப்பதற்கு, வலியைக் குறைப்பதற்கு, தசைகளைத் தளர்த்துவதற்கு, வீக்கத்தைக் குறைப்பதற்கு என மருத்துவர் பரிந்துரைக்கும் ஆயின்மென்ட்டுக்கு பிரத்யேக காரணம் இருக்கும்.

சின்னதாக அடிபட்டாலோ, வீங்கினாலோ, தசைப்பிடிப்பு ஏற்பட்டாலோ, மருந்துகள் எடுத்து முடித்த பிறகு, மருந்துகளின் அளவைக் குறைப்பதற்காக, வலி ஏற்படும்போது மட்டும் எடுத்துக்கொள்ள ஆயின்மென்ட்டுகள் பரிந்துரைக்கப்படும்.

எல்லா ஆயின்மென்ட்டுகளுக்கும் பொதுவான குணம் ஒன்று உண்டு. எல்லாமே லேசான எரிச்சல் தன்மையைக் கொடுக்கும் தன்மை கொண்டிருக்கும். இதை 'கவுன்ட்டர் இரிட்டன்ட் பிராப்பர்டி'  (counter irritant property ) என்று சொல்வோம். நம் முதுகுத்தண்டில் 'பெயின்கேட்' என ஒன்று இருக்கும். நம் உடலின் சிக்னல்கள், இந்த கேட் வழியேதான் மூளைக்குப் போகும். இந்த கேட் மிகவும் சிறியது என்பதால் ஒரு சிக்னல் மட்டும்தான் போக முடியும். வலி மிகக்குறைவாக இருக்கும் சமயத்தில்,  கவுன்ட்டர் இரிட்டன்ட் பிராப்பர்டி  உள்ள ஆயின்மென்ட் போடும்போது அந்த எரிச்சல் என்ற சிக்னல், வலி என்ற சிக்னலை மறைத்துவிடும். எரிச்சல்தான்  கேட் வழியே மூளைக்குப் போகுமே தவிர, வலி போகாது. இப்படித்தான் பெரும்பாலான மருந்துகள் வேலை செய்கின்றன.

எனவே, உங்களுக்கு மருத்துவர் எந்தக் காரணத்துக்காக எந்த ஆயின்மென்ட்டை பரிந்துரைக்கிறாரோ, அதை அந்தக் காரணத்துக்காக மட்டும்தான் பயன்படுத்த வேண்டும். மாற்றி உபயோகிக்கக்கூடாது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...