Skip to main content

Summer: டீ முதல் மாம்பழம் வரை... கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெப்பம் அதிகரிக்கும் போது உடல் சூடு, வறட்சி, அம்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கோடைக்காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.  மோர், இளநீர், பதநீர், பழச்சாறுகள் போன்றவற்றை பருகச்சொல்லி முன்னோர்கள் தொடங்கி, மருத்துவர்கள் வரை பலரும் அறிவுரை வழங்குவார்கள்.இவையெல்லாம் உடலை குளிர்ச்சி அடையச்செய்யும். சம்மரில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்வது போல், உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம்...நோய் தாக்கம் ஏற்படாமல் சம்மரிலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் ரேச்சல் தீப்தி...

ரேச்சல் தீப்தி

கோடைக்காலத்தில் அடிக்கடி நாவறட்சி ஏற்படும். தாகத்தைத் தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கிப் பருகுவார்கள்... ஆனால், இது போன்று கார்பனேட்டடு குளிர்பானங்கள் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள், பசியின்மை போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. நீர்மோர், ஐஸ் சேர்க்காத பழச்சாறுகள், பதநீர், போன்றவை பருகலாம். எந்த பானம் பருகுவதாக இருந்தாலும், ஐஸ்கட்டிகளை தவிர்த்துவிடுங்கள்.

டிரை ஃப்ரூட்ஸ் இப்போது எல்லோரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது. பழங்களை ஒப்பிடும் போது, உலர் பழங்களில் நீர்ச்சத்து குறைவு என்பதால் ஃப்ரெஷ் பழங்களை வாங்கி உண்பது கூடுதல் ஆரோக்கியம் சேர்க்கும்

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் நிச்சயம் செரிமான பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றைத் தவிர்த்து, ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். எளிதில் செரிக்கும்.

மாம்பழம், பலா, போன்றவை இந்த சீசனில் மட்டுமே கிடைக்கும் என்றாலும், இவை உடலின் சூட்டை அதிகரிக்கும் என்பதால் அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். மமுலாம்பழம், தர்பூசணி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

அசைவ உணவுகளை எண்ணெய்யில் பொரிக்கும் போது அதிலிருக்கும் புரதச் சத்துகள் நீங்கிவிடும். உடலுக்கு முழுமையான சத்து கிடைக்காது. மேலும், எண்ணெய் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, அசைவ உணவுகளை குழம்பு வைத்துச் சாப்பிடுவது நல்லது. 

முழுமையாக வேக வைக்காத உணவுகள் சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும். இது உடலின் நீர்ச்சத்தைக் குறைக்கும் என்பதால் உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிடவும். அதே போல் பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகள் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தி, செரிமானக்  கோளறுகளை  ஏற்படுத்தும் என்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது. 

அதிக காரமான உணவுகள், ஊறுகாய், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான டீ, காபி பசியின்மை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

வெள்ளரி, பூசணி, போன்று நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வெந்தயம் ஊற வைத்த நீரை பருகலாம். சரியான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொருவருக்கும் உடலின் தன்மை , உடல் சூட்டின் அளவு வேறுபடும் என்பதால் உங்கள் உடலுக்கு ஏற்ற உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுங்கள். 


Comments

Popular posts from this blog

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...

Doctor Vikatan: கர்ப்பப்பையை நீக்கிய பெண்களுக்கு நார்மல் வாழ்க்கை சாத்தியமில்லையா?

Doctor Vikatan: என் வயது 49. கடந்த சில மாதங்களாக மாதவிலக்கின்போது உதிரப்போக்கு மிக அதிகமாக இருக்கிறது. மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொண்டபோது எண்டோமெட்ரியம் என்ற பகுதியின் அடர்த்தி அதிகமாக இருப்பதாகச் சொல்லி, அதற்குத் தீர்வாக கர்ப்பப்பையை அகற்றுவது குறித்துச் சொன்னார். என்னுடைய இந்தப் பிரச்னைக்கு கர்ப்பப்பை நீக்கம்தான் தீர்வா...? கர்ப்பப்பையை நீக்கிய பெண்களுக்கு அதற்குப் பிறகு நார்மல் வாழ்க்கை சாத்தியமில்லை என்று சொல்லப்படுவது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ். மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை. Doctor Vikatan: மெனோபாஸை எதிர்கொள்கிற எல்லோருக்கும் Hormone Replacement Therapy அவசியமா? மெனோபாஸ் காலத்தில் எண்டோமெட்ரியத்தின் அடர்த்தியானது 4 மில்லிமீட்டர் அளவுதான் இருக்க வேண்டும். பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலத்தில் அது 6 மில்லிமீட்டர்வரை இருக்கலாம். இதற்கு மேல் அடர்த்தியாக இருந்தால் ஹார்மோன்கள் கொட...

Zhong yang: அதிகாரிகளுடன் முறையற்ற உறவு; முன்னாள் ஆளுநருக்கு 13 ஆண்டுகள் சிறை; பின்னணி என்ன?

சீனாவைச் சேர்ந்த ஜாங் யாங் (Zhong Yang) குக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு மில்லியன் யுவான் (சுமார் ₹1.18 கோடி) அபராதமும் விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இவர் ஆளுநராக இருந்தவர். தோற்றம் மற்றும் உடை அலங்காரத்தால் எப்போதும் இளமையாகக் காட்சியளிக்கும் 52 வயதான ஜாங் யாங், மக்களால் 'மிக அழகான ஆளுநர்' எனப் புகழப்படுகிறார். சாதாரணக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவர், 22 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.ஜாங் யாங் தொடர்ந்து அரசியலிலும், பதவிகளிலும் முன்னேறி வந்த இவர் மீது, தனியார் தொழில்துறை நிறுவனங்களுடன் தொழில்முறை ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. மேலும், அவருக்குக் கீழ் பணிபுரியும் துணை அதிகாரிகள் 58 பேருடன் முறையற்ற உறவிலிருந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதில், சிலர் அவரிடமிருந்து பலனை எதிர்பார்த்தும், பலர் அவரின் அதிகார துஷ்பிரயோகத்துக்குப் பயந்து இதில் ஈடுபட்டுள்ளனர். இவர் குறிவைக்கும் துணை நிலை அதிகாரிகளை, அலுவலகத்தில் அதிக நேரம் வேலை செய்யவைப்பதின் மூலமும், தொழில்முறைப் பயணங்கள் என்ற போர்வையிலும் கட்டாய...