Skip to main content

Summer: டீ முதல் மாம்பழம் வரை... கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்..!

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வெப்பம் அதிகரிக்கும் போது உடல் சூடு, வறட்சி, அம்மை போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கோடைக்காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் நம் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.  மோர், இளநீர், பதநீர், பழச்சாறுகள் போன்றவற்றை பருகச்சொல்லி முன்னோர்கள் தொடங்கி, மருத்துவர்கள் வரை பலரும் அறிவுரை வழங்குவார்கள்.இவையெல்லாம் உடலை குளிர்ச்சி அடையச்செய்யும். சம்மரில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை எடுத்துக்கொள்வது போல், உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியம்...நோய் தாக்கம் ஏற்படாமல் சம்மரிலும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எந்தெந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்த தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் ரேச்சல் தீப்தி...

ரேச்சல் தீப்தி

கோடைக்காலத்தில் அடிக்கடி நாவறட்சி ஏற்படும். தாகத்தைத் தணிக்க பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கிப் பருகுவார்கள்... ஆனால், இது போன்று கார்பனேட்டடு குளிர்பானங்கள் நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறுகள், பசியின்மை போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. நீர்மோர், ஐஸ் சேர்க்காத பழச்சாறுகள், பதநீர், போன்றவை பருகலாம். எந்த பானம் பருகுவதாக இருந்தாலும், ஐஸ்கட்டிகளை தவிர்த்துவிடுங்கள்.

டிரை ஃப்ரூட்ஸ் இப்போது எல்லோரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கிறது. பழங்களை ஒப்பிடும் போது, உலர் பழங்களில் நீர்ச்சத்து குறைவு என்பதால் ஃப்ரெஷ் பழங்களை வாங்கி உண்பது கூடுதல் ஆரோக்கியம் சேர்க்கும்

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் நிச்சயம் செரிமான பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றைத் தவிர்த்து, ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். எளிதில் செரிக்கும்.

மாம்பழம், பலா, போன்றவை இந்த சீசனில் மட்டுமே கிடைக்கும் என்றாலும், இவை உடலின் சூட்டை அதிகரிக்கும் என்பதால் அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். மமுலாம்பழம், தர்பூசணி போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

அசைவ உணவுகளை எண்ணெய்யில் பொரிக்கும் போது அதிலிருக்கும் புரதச் சத்துகள் நீங்கிவிடும். உடலுக்கு முழுமையான சத்து கிடைக்காது. மேலும், எண்ணெய் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, அசைவ உணவுகளை குழம்பு வைத்துச் சாப்பிடுவது நல்லது. 

முழுமையாக வேக வைக்காத உணவுகள் சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு ஏற்படும். இது உடலின் நீர்ச்சத்தைக் குறைக்கும் என்பதால் உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிடவும். அதே போல் பீட்ஸா, பர்கர் போன்ற துரித உணவுகள் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தி, செரிமானக்  கோளறுகளை  ஏற்படுத்தும் என்பதால் அவற்றையும் தவிர்ப்பது நல்லது. 

அதிக காரமான உணவுகள், ஊறுகாய், போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அதிகப்படியான டீ, காபி பசியின்மை, நெஞ்செரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

வெள்ளரி, பூசணி, போன்று நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். வெந்தயம் ஊற வைத்த நீரை பருகலாம். சரியான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது அவசியம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொருவருக்கும் உடலின் தன்மை , உடல் சூட்டின் அளவு வேறுபடும் என்பதால் உங்கள் உடலுக்கு ஏற்ற உணவுகளைத் தேர்வு செய்து சாப்பிடுங்கள். 


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...