Skip to main content

ஒன் பை டூ

கரு.நாகராஜன், மாநில துணைத் தலைவர், பா.ஜ.க

``மக்கள் பிரதிநிதியான கனிமொழி இப்படிப் பேசுவது இந்திய அரசியலமைப்பைக் கொச்சைப்படுத்துவது போலிருக்கிறது. இதே தி.மு.க-வினர் மத்திய கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும்போது, இங்கிருக்கும் ஆளுநர்களைப் போற்றி, புகழ்வார்கள். கடந்த ஆட்சியில் அ.தி.மு.க-வினர்மீது புகார் சொல்ல அடிக்கடி ஆளுநர் அலுவலகம் சென்றார்களே... அப்போது மட்டும் ஆளுநர் தேவைப்பட்டாரா... இவர்கள் சொல்வதைக் கேட்டு அப்படியே நடந்துகொண்டால் கவர்னர் நல்லவர், இல்லையென்றால் வேண்டாதவரா... தற்போதைய தமிழக கவர்னர் ஆற்றல் மிகுந்த வித்தகராக இருக்கிறார். தமிழ்நாட்டின் பாரம்பர்யத்தையும் கலாசாரத்தையும் போற்றுகிறார். அரசின் கைப்பாவையாக இல்லாத கவர்னர் என்பதால் அவர்மீது ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்புகிறார்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆளுநரை இப்படிச் சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. உண்மையில் தி.மு.க அரசைத் தூக்கிப்போடவே மக்கள் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை மறைக்க ‘திராவிட மாடல்’ என்று தமிழக மக்களை மொட்டையடித்துக்கொண்டிருக்கிறார்கள்.’’

கரு.நாகராஜன், தமிழ் கா.அமுதரசன்

தமிழ் கா.அமுதரசன், மாணவரணி துணைச் செயலாளர், தி.மு.க

``உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார் கனிமொழி அக்கா. ஒன்றிய அரசின் அதிகாரமற்ற ஏஜென்ட்தான் ஆளுநர்; அரசியல் பேசவோ, தனது சித்தாந்தக் கருத்துகளைப் பரப்பவோ அதிகாரம்கொண்டவரல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையின் முடிவுகளின்படியே ஆளுநர் நடக்க வேண்டும் என்றும், அரசியல் கருத்துகளைச் சொல்லவோ, அரசியல் கட்சிகளின் விவகாரங்களில் தலையிடவோ அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் அரசியலமைப்பும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் உறுதிசெய்கின்றன. ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு ஆளுநர்கள் மூலம் மாநிலங்களில் ஓர் இணை அரசு நடத்தத் துடிக்கிறது. அதனாலேயே, ஆளுநர் ரவி, தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில், குறிப்பாக தி.மு.க-வுக்கு எந்த ஓர் ஆளுநரும் பாடம் நடத்திச் சென்றதாக வரலாறு இல்லை. இங்கிருந்து பாடம் படித்துச் சென்ற சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்திருக்கின்றன. காலனியாதிக்கத்தின் எச்சத்தையெல்லாம் அகற்றுவோம் என்றும், ‘ராஜ் பவனை லோக் பவனாக்குவோம்’ என்றெல்லாம் முழங்குகிறவர்கள், மானம், ரோஷம் இருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதைப் பேசட்டும்!’’


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...