Skip to main content

சர்க்கரை நோய் சிகிச்சை: 'MVCON 2026' மாநாட்டில் டாக்டர் ஏ.வி.அனூப்பிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

சென்னையில் சர்க்கரை நோய் மற்றும் பாத பராமரிப்பு குறித்த உலகத்தரம் வாய்ந்த விவாதங்களுடன் 'எம்.வி.கான் 2026' (MVCON 2026) அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில், ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைத்து ஆரோக்கிய சேவையில் முத்திரை பதித்து வரும் ஏ.வி.ஏ (AVA) குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.வி. அனூப் அவர்களுக்கு, மதிப்புமிக்க 'எம்.வி.கான் வாழ்நாள் சாதனையாளர் விருது 2026' வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.எஃப்.டி.ஐ (CFTI) சென்னை பிரிவின் இயக்குனர் திரு. முரளி கே. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த விருதினை வழங்கினார்.

டாக்டர் ஏ.வி. அனூப்

டாக்டர் ஏ.வி. அனூப்பின் நெகிழ்ச்சியான ஏற்புரை:

விருதினைப் பெற்றுக்கொண்டு டாக்டர் ஏ.வி. அனூப் பேசியதாவது

"கடந்த மாதம் டாக்டர் விஜய் விஸ்வநாதன் என்னை அழைத்து, இந்த நீரிழிவு மாநாட்டில் எனக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படுவதாகக் கூறியபோது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது, ஏனெனில் இது நீரிழிவு தொடர்பான மாநாடு. ஆனால், ஆயுர்வேதம் உட்பட பல்வேறு துறைகளில் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

டாக்டர் ஏ.வி. அனூப்

எம்வி டயாபெட்டிக்ஸ் (MV Diabetes) உடனான எனது தொடர்பு பல தசாப்தங்களுக்கு முன்னரே தொடங்கியது. எனது சித்தப்பா 1954-ல் இந்த கிளினிக் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே டாக்டர் விஸ்வநாதனிடம் சிகிச்சை பெற்று வந்தவர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இங்கே சிகிச்சை பெற்றார். அதனால் இந்த நிறுவனத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

டாக்டர் ஏ.வி. அனூப்

ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவம் (Allopathy) ஆகியவற்றை எதிரெதிராகப் பார்க்காமல், அவற்றை ஒருங்கிணைத்துப் பார்ப்பதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.

ஆயுர்வேதம் ஒரு முழுமையான, தடுப்பு முறை சார்ந்த சிகிச்சையை வழங்குகிறது; நவீன மருத்துவம் அவசர கால சிகிச்சையில் சிறந்து விளங்குகிறது. இவை இரண்டும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன.

குறிப்பாக, நீரிழிவு புண் மேலாண்மை (Diabetic wound management) மற்றும் நரம்பு வலி ஆகியவற்றுக்கான தயாரிப்புகளை உருவாக்க டாக்டர் விஜய் விஸ்வநாதன் மற்றும் எம்வி டயாபெட்டிக்ஸ் குழுவினருடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்.

டாக்டர் ஏ.வி. அனூப்

இதன் மருத்துவ பரிசோதனை முடிவுகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மெடிமிக்ஸ் சோப்பின் உருவாக்கமும் கூட ஒரு ஒருங்கிணைந்த சிந்தனைதான் எனது தந்தை டாக்டர் வி.பி. சித்ரன், ஒரு அலோபதி மருத்துவராக இருந்தபோதே, நோயாளிகளின் தோல் நோய்களுக்காக ஆயுர்வேத மூலிகைகளைப் பயன்படுத்தி இந்த சோப்பை உருவாக்கினார். எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகப் பல்வேறு மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பதே சிறந்தது என்பதே எனது செய்தி" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

முன்னோடி ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு:

விழாவில் உரையாற்றிய எம்வி டயாபெட்டிக்ஸ் தலைமை மருத்துவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன், சர்க்கரை நோய் சிகிச்சையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை மிக அவசியம் என்று வலியுறுத்தினார்.

அவர் எழுதிய 'டயாபெட்டிக் ஃபுட்' (Diabetic Foot) குறித்த புதிய புத்தகமும் இந்த விழாவில் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் சர்க்கரை நோயாளிகளின் பாதப் பாதுகாப்பு குறித்த உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இந்தியாவில் கொண்டு சேர்க்கும் ஒரு மைல்கல்லாகும்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...