Skip to main content

Doctor Vikatan: உயரம் குறைவான குழந்தை... உணவுகளின் மூலம் தீர்வு கிடைக்குமா?

Doctor Vikatan: என் 8 வயதுப் பெண் குழந்தை, அந்த வயதுக்குண்டான உயரத்தில் இல்லை.  இது இப்படியே தொடருமோ என பயமாக இருக்கிறது. குழந்தைகளின் உயரத்தை அதிகரிக்க பிரத்யேக உணவுகள் ஏதேனும் இருந்தால் பரிந்துரைக்க முடியுமா? 

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

ஒரே ஓர் உணவுப்பொருளை மட்டும் சாப்பிடுவதால் குழந்தைகளின் உயரத்தை அதிகரித்துவிட முடியாது. குழந்தைகளின் சரியான வளர்ச்சிக்கு (Optimal Growth) நல்ல ஊட்டச்சத்து மிக அவசியமானது. உயரம் என்பது மரபியல் (Genetics) சார்ந்த விஷயமாக இருந்தாலும், அதனுடன் வேறு சில காரணிகளும் இணையும்போது ஒருவரின் முழுமையான வளர்ச்சி சாத்தியப்படுகிறது. அந்த வகையில் சரியான ஊட்டச்சத்து (Proper Nutrition), போதுமான தூக்கம், உடல் செயல்பாடுகள் / உடற்பயிற்சி போன்றவையும் உயரத்தைத் தீர்மானிப்பவை.

குழந்தைகளின்  வளர்ச்சியில் புரதச்சத்து (Protein) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எலும்பு, தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் முக்கியம். இது  பால், தயிர், பனீர் என பால் பொருள்களிலும், அசைவ உணவுகளில் கோழி, முட்டை, மீன் போன்றவற்றிலும், சைவ உணவுகளில் பருப்பு வகைகள், முளைக்கட்டிய பயறுகள், டோஃபு உள்ளிட்ட சோயா  உணவுகளிலும் அதிகம் இருக்கிறது.  பாதாம், அக்ரூட் (Walnut) போன்ற நட்ஸை  ஒரு கைப்பிடி அளவு தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

எலும்புகளின் வலிமைக்கும் வளர்ச்சிக்கும் கால்சியம் சத்தும் அவசியம். பால், ராகி, எள், பாதாம் மற்றும் பசலைக்கீரை போன்ற கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளில் கால்சியம் சத்து நிறைய இருக்கும்.
உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி தேவை. தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பதன் மூலம் இயற்கையாகவே வைட்டமின் டி சத்தைப் பெறலாம்.  முட்டையின் மஞ்சள் கரு, மீன் மற்றும் செறிவூட்டப்பட்ட பால் (Fortified Milk) போன்றவற்றிலும் வைட்டமின் டி சத்து கிடைக்கும். 

குழந்தைகளின் வளர்ச்சியில் புரதச்சத்து (Protein) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

வளர்ச்சி ஹார்மோன்களின் செயல்பாட்டிற்கு துத்தநாகம் சத்தும் அவசியம். அது  நட்ஸ் வகைகள், பூசணி விதைகள் மற்றும் முழு தானியங்களில் அதிகம் கிடைக்கும். சிறிய குழந்தைகள் நட்ஸாக சாப்பிட மறுத்தால், இவற்றையும் விதைகளையும் பொடி செய்து சப்பாத்தி அல்லது தோசை மாவில் கலந்து கொடுக்கலாம். அதேபோல வளர்ச்சிக்குத் தேவையான  இரும்புச்சத்து அனைத்து வகை பச்சைக் காய்கறிகளிலும் கீரைகளிலும் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து உடலில் நன்றாக சேர, அத்துடன் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழங்களை சேர்த்துக்கொள்ளலாம். உதாரணமாக, சிக்கன் சாப்பிடும்போது அதன் மேல் எலுமிச்சைப்பழச் சாறு பிழிந்து சாப்பிடலாம்.

இவை தவிர, உடலில் வளர்ச்சி ஹார்மோன்கள் சரியாகச் சுரக்க, இரவு நேர தூக்கம் மிகவும் அவசியமானது. முறையான உடல் செயல்பாடுகள் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், தானியங்கள், புரதங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ் என அனைத்து உணவுகளும் அடங்கிய சரிவிகித உணவு முறையே ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குரோத் சார்ட் (Growth Chart) எனப்படும் வளர்ச்சி அட்டவணையை வைத்து, குழந்தைகளின் உயரம் சரியாக உள்ளதா எனப் பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை பெற்றோர் உயரம் குறைவாக இருந்தால், குழந்தையை மருத்துவரிடம் காட்டி, அந்தக் குழந்தையால் எவ்வளவு உயரம் வளர முடியும் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

குரோத் சார்ட் (Growth Chart) எனப்படும் வளர்ச்சி அட்டவணையை வைத்து, குழந்தைகளி

குழந்தைகளின் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்குத் தேவையான டாப் உணவு வகைகளை ஒரு  பிளான் போல போட்டு வைத்துக்கொண்டு பின்பற்றலாம். அதன்படி, புரத உணவுகள், பச்சைக் காய்கறிகள், கீரைகள்,  சிறுதானியங்கள், நட்ஸ் மற்றும்  சீட்ஸ் வகைகள் (Nuts and Seeds),  முளைக்கட்டிய பயறு வகைகள் (Sprouts), பழங்கள்,  அசைவ உணவுகள் என திட்டமிட்டுக் கொள்ளலாம்.
இந்த உணவுகள் அனைத்தையும் உள்ளடக்கிய  சரிவிகித உணவுத் திட்டம் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்கு வழிகாட்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...