Skip to main content

Doctor Vikatan: தோட்டத்தில் தானாக முளைத்த கல்யாண முருங்கை... மருத்துவ குணம் மிக்கதா?

Doctor Vikatan: எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தானாகவே முளைத்திருந்தது ஒரு செடி.  குப்பைச்செடி என பிடுங்க நினைத்தபோது, அது கல்யாண முருங்கை செடி என்றும், அற்புதமான மருத்துவ பலன்கள் கொண்டது என்றும் சொன்னது கூகுள்.  கல்யாண முருங்கையை யார், எப்படி, எந்தப் பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளலாம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் 'மூலிகைமணி' அபிராமி. 

சித்த மருத்துவர் அபிராமி
சித்த மருத்துவர் அபிராமி

நீங்கள் குறிப்பிடுகிற கல்யாண முருங்கை மரம் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலம். இதன் கிளைகளில் முட்கள் இருப்பதால் இது 'முள் முருங்கை' என்றும், 'முருக்க மரம்' என்றும்கூட அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் விதையைத் தரையில் தேய்த்து உடலில் வைத்தால் சூடாக இருக்கும். கிராமங்களில் இதை 'நெருப்புக்கொட்டை' அல்லது 'சூட்டுக்கொட்டை' என்று விளையாட்டாகப் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

சாதாரண முருங்கைக்கீரை அனைவருக்கும் நல்லது என்பதை எல்லோரும் அறிவோம். அதை உலகமே 'சூப்பர் ஃபுட்'  என்று கொண்டாடுகிறது. கல்யாண முருங்கை அதற்குச் சற்றும் சளைத்ததில்லை. குறிப்பாக,  பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இன்று பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் தொடர்பான வலிகள், எண்டோமெட்ரியோசிஸ்  (Endometriosis), உடல் பருமன் என பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பல  முக்கியப் பிரச்னைகளுக்கு  கல்யாண முருங்கைக் கீரை அற்புதமான தீர்வுகளைத் தருகிறது.

முருங்கைக்கீரை

கல்யாண முருங்கை இலைகளைச் சேகரித்து, நிழலில் உலர்த்திப் பொடிசெய்து கொள்ளவும். தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு பொடியை சாதாரண நீரில் கலந்து 2 முதல் 3 மாதங்கள் குடித்து வந்தால், பிசிஓடி, முறைதவறிய மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், எண்டோமெட்ரியோசிஸ், சினைப்பைக் கட்டிகள் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். 

ஃப்ரெஷ்ஷான கல்யாண முருங்கை இலைகள் கிடைக்கும் என்பவர்கள், 5 முதல் 10 இலைகளை அரைத்து சாறு எடுத்து, அதில் 20 மில்லி (சுமார் கால் டம்ளர்) அளவு காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், கர்ப்பப்பை மற்றும் சினைப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். குறிப்பாக, எடைக்குறைப்புக்கு மிகச் சிறப்பாக உதவும்.

கல்யாண முருங்கைக்கீரை மதுரையில்  மிகவும் பிரபலம். அங்குள்ள சௌராஷ்டிர இன மக்கள் இந்த இலையை அரிசிமாவுடன் கலந்து  'கல்யாண முருங்கை வடை' அல்லது 'முள் முருங்கை வடை'  செய்து மாலையில் சிற்றுண்டியாகச் சாப்பிடுவார்கள்.

ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும்.

கல்யாண முருங்கை இலைகளை குளிர்காலத்தில் சாப்பிடுவது சளித் தொந்தரவுகளுக்கு நல்ல தீர்வளிக்கும். ஆஸ்துமா, வீஸிங், சைனஸ் உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் கல்யாண முருங்கை அற்புதமான மருந்தாக வேலை செய்யும். அடிக்கடி சிறுநீர்த் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கும் கல்யாண முருங்கை இலை மிகவும் நல்லது.

இந்த மரம் வீட்டில் இருந்தால் அதை வெட்ட வேண்டாம் என்பதே என் அறிவுரை. ஏனெனில் எல்லா வீடுகளிலும் பெண்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு நிச்சயம் இந்த இலைகள் தேவைப்படும். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்... உங்கள் வீட்டில்  தானாக வளர்வதாகச் சொல்கிற இந்தச் செடி, உண்மையிலேயே கல்யாண முருங்கைதானா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இதில் பிரகாசமான சிவப்பு நிறப் பூக்கள் பூக்கும். இந்த மரம் குறித்து தெரிந்தவர்களிடமோ, மருத்துவர்களிடமோ, தோட்டக்கலை நிபுணர்களிடமோ அதை உறுதிசெய்து கொண்டு பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...