Skip to main content

Doctor Vikatan: குழந்தைகளுக்கு காபி, டீ.... எந்த வயதிலிருந்து அறிமுகப்படுத்தலாம்?

Doctor Vikatan: என்னுடைய நண்பன், தன்னுடைய  ஒன்றரை வயதுக் குழந்தைக்கு காபியும் டீயும் கொடுத்து வளர்க்கிறான். இந்த வயதில் ஏன் பழக்குகிறாய் என்று கேட்டால், குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே எல்லா உணவுகளையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறான். பொதுவாக, குழந்தைகளுக்கு எந்த வயதிலிருந்து காபி, டீ கொடுக்கலாம்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்.

ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்
ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன்

குழந்தைகளுக்கு 12 வயது வரை காபி அல்லது டீ கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. காபியில் கஃபைனும் (Caffeine), டீயில் டானினும் (Tannins) குழந்தைகளுக்கு ஏற்றவை அல்ல என்பதுதான் காரணம்.

காயில் உள்ள கஃபைன் என்பது ஸ்டிமுலன்ட்  (Stimulant) எனப்படும் தூண்டல் தன்மை கொண்டது. பெரியவர்கள்கூட சோர்வாக இருக்கும்போது, அதிலிருந்து மீள, ஒருவித புத்துணர்ச்சிக்காக  காபி குடிக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள். குழந்தைகள் காபி எடுத்துக்கொள்ளும்போது, அதிலுள்ள கஃபன் காரணமாக அவர்கள் அதிக சுறுசுறுப்புடன் (Hyperactive) மாற வாய்ப்புள்ளது. அது குழந்தைகளின் தூக்கத்தை பாதிப்பதோடு, அவர்களின் கவனத்திறனிலும் (Concentration) குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

டீயில் உள்ள டானினும் கஃபைன் போன்றதுதான்.  டீயில் உள்ள 'பாலிபினோல் டானின்' (Polyphenol Tannin) என்பது, சத்துகள் உடலில் சேர்வதற்குத் தடையாக இருக்கிறது. குறிப்பாக, நாம் உணவு உண்ணும்போது அதனுடன் டீ அருந்தினால், உணவில் உள்ள இரும்புச்சத்து (Iron) மற்றும் கால்சியம் (Calcium) ஆகியவற்றை உடல் உறிஞ்சுவதை இது தடுக்கிறது. இந்தச் சத்துகள் சரியாகக் கிடைக்காதபோது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படலாம்.

12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு காபி, டீ கொடுப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது

ஆரம்பத்தில் ஒரு வாய் தானே என்று குழந்தைகளுக்கு காபி, டீ கொடுக்க ஆரம்பிப்போம். நாளடைவில் அது குழந்தைகளுக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் குழந்தைகளும் நிறைய காபி, டீ குடிக்கப் பழகுகிறார்கள்.  இந்திய மற்றும் அமெரிக்க குழந்தை நல மருத்துவ சங்கங்களின் (Indian and American Association of Pediatric Guidelines) அறிவுறுத்தலின்படி, 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு காபி, டீ கொடுப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது. 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் மிதமான அளவில் எடுத்துக் கொள்வதில் தவறில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...