Skip to main content

Doctor Vikatan: மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் சுகர் டெஸ்ட்... ரிசல்ட் சரியாக இருக்குமா?!

Doctor Vikatan: குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்க்கரைநோய்க்கான பரிசோதனைகளைச் செய்து பார்க்கிறோம். முந்தைய நாள் இரவும் சர்க்கரைநோய்க்கான மாத்திரைகள் போட்டுக்கொண்டு, மறுநாள் காலையும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டுதான் டெஸ்ட் எடுக்கச் சொல்கிறார் மருத்துவர். மாத்திரை சாப்பிட்ட பிறகு எடுக்கும் டெஸ்ட் எப்படிச் சரியாக  இருக்கும்... இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை

நீங்கள் ஏற்கெனவே சர்க்கரைநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்பவர் என்றால், உங்கள் உடலுக்கு அந்த மாத்திரை எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதைப் பார்ப்பதே இந்தப் பரிசோதனையின் முக்கிய நோக்கம். மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு டெஸ்ட் செய்தால்தான்,  நீங்கள் சாப்பிடும் மருந்து, உங்கள் ரத்தச் சர்க்கரையைச் சரியான அளவில் (Control) வைத்திருக்கிறதா அல்லது மருந்தின் அளவை அதிகரிக்க வேண்டுமா என்பதைக் கணிக்க முடியும்.

சர்க்கரைநோய் என்பது ஒரு நாள் மட்டும் வரும் பிரச்னை அல்ல. மாத்திரையை ஒரு நாள் நிறுத்தினாலும் உடலில் சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும். நீங்கள் தினமும் மாத்திரை போடுபவர் என்பதால், அந்த மாத்திரையின் தாக்கத்தோடு உங்கள் உடல் எப்படி இயங்குகிறது என்பதை அறிவதே சரியான டெஸ்ட் ரிசல்ட்டாக இருக்கும். முந்தைய நாள் இரவு மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம், மறுநாள் காலை வெறும் வயிற்றில் சர்க்கரை (Fasting) அளவு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம். காலை உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கும் டெஸ்ட்டிற்கும், காலை மாத்திரை மிக அவசியம். அப்போதுதான் உணவு உண்ட பின் சர்க்கரை எவ்வளவு உயர்கிறது என்பதையும் மருந்து அதைக் கட்டுப்படுத்துகிறதா என்பதையும் பார்க்க முடியும்.

மாத்திரையை ஒரு நாள் நிறுத்தினாலும் உடலில் சர்க்கரை அளவு திடீரென உயரக்கூடும்.

மாத்திரை போடாமல் டெஸ்ட் எடுத்து, சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டினால், மருத்துவர் உங்களுக்குத் தேவையில்லாமல்  கூடுதல் மாத்திரைகளையோ அல்லது இன்சுலினையோ பரிந்துரைக்க நேரிடும். இது உண்மையில் தவறான சிகிச்சைக்கு வழிவகுக்கும். உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று சந்தேகம் வந்து, முதல்முறை டெஸ்ட் எடுக்கும்போதும், குறிப்பிட்ட காரணங்களுக்காக மாத்திரை போடாமல்  டெஸ்ட் எடுத்துப் பாருங்கள் என உங்கள் மருத்துவர் பிரத்யேகமாகச் சொல்லியிருந்தாலும் மட்டுமே  மாத்திரைகள் போடாமல் டெஸ்ட் செய்ய வேண்டும். மற்றபடி, சர்க்கரைநோய்க்கு வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை எடுத்துக்கொண்டு டெஸ்ட் செய்வதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...