Skip to main content

Doctor Vikatan: கொஞ்சமே சாப்பிட்டாலும் குறையாத உடல் பருமன்... எடையைக் குறைக்க என்னதான் வழி?

Doctor Vikatan: என் வயது 43. எனக்கு உடல் பருமன் பிரச்னை இருக்கிறது. என்ன முயற்சிகள் செய்தாலும் எடையைக் குறைக்கவே முடியவில்லை. நான் அதிகம் சாப்பிடும் வழக்கம் உள்ள நபரும் இல்லை.

மிகக் குறைவாகத்தான் சாப்பிடுவேன். ஆனாலும் உடல் பருமன் குறைவதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்... எடையைக் குறைக்க என்னதான் செய்வது?

பதில் சொல்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்.

பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்
பாரியாட்ரிக் மற்றும் வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன்

உங்களைப் போல குறைவாகச் சாப்பிட்டாலும் சிலருக்கு எடை அதிகமாக இருப்பதைப் பார்க்கலாம்.. குறைவாகச் சாப்பிட்டாலும் அதை எரிக்கும் அளவுக்கு வொர்க் அவுட் செய்ய முடியாவிட்டால், அதையும் 'ஜங்க் ஃபுட்' கணக்கில்தான் கொள்ள வேண்டும்.

பேசல் மெட்டபாலிக் ரேட் ( BMR) என்ற கணக்கு ஒன்று இருக்கிறது. ஒருவருடைய கிட்னி, மூளை, இதயம் என ஒவ்வோர் உறுப்பும் வேலை செய்ய  குறிப்பிட்ட அளவு ஆற்றல் அவசியம். அதற்கான கலோரிகளைக் கணக்கிடுவதுதான் பி.எம்.ஆர்.

ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 1,600 கலோரிகள் தேவைப்படுவதாக வைத்துக்கொள்வோம். அந்த நபர் மதிய உணவிலேயே பலமாகச் சாப்பிட்டு, கிட்டத்தட்ட 1,000 கலோரிகளை  எடுத்துக்கொள்கிறார். தவிர, காலை உணவு, இரவு உணவு என எல்லாம் சேர்ந்து அந்தக் கணக்கு 2,500 - 3,000 கலோரிகள் வந்துவிடும். அப்படிப் பார்த்தால் மதியம் அவர்  சாப்பிட்டது ஜங்க் ஃபுட் என்றுதான் கணக்கிடப்பட வேண்டும்.

ஒரு நபர் சரியாக ஒரு நாளைக்கு 1,600 கலோரிகள்தான் சாப்பிடுகிறார் என வைத்துக்கொள்வோம். அந்த 1,600 கலோரிகளை எரிக்க உடல்ரீதியான இயக்கம் இல்லாவிட்டால் அதுவும் ஜங்க் ஃபுட்டாகவே உடலில் சேரும்.  ஏதோ ஒரு வகையான உடற்பயிற்சி செய்யாமல், உடல் பருமனைக் குறைப்பது யாருக்கும் சாத்தியமே இல்லை.

ஏதோ ஒரு வகையான உடற்பயிற்சி செய்யாமல், உடல் பருமனைக் குறைப்பது யாருக்கும் சாத்தியமே இல்லை.

சராசரி எடையுள்ள ஒருவர் ஒரு மணி நேரம் நடந்தால், சாதாரணமாக 200 கலோரிகளை எரிக்க முடியும் என வைத்துக்கொள்வோம்.  

அதுவே 30-40 கிலோ அதிக எடையுடன் இருக்கும் ஒருவர், தினம்  ஒரு மணி நேரம் வாக்கிங் போகிறார் என்றால்  அவரால் வேகமாக நடக்க முடியாது. மெதுவாகவே நடப்பார். 150 கலோரிகளைத்தான் எரித்திருப்பார்.

அன்றாட வேலைகளையும் அவரால் வேகமாகச் செய்ய முடியாது. உடலின் வளர்சிதை மாற்றம் குறையும்போது, 200 கலோரிகளை எரிக்க, அந்த நபருக்கு 6 மணி நேரம் தேவைப்படும். குறைவாகச் சாப்பிட்டாலும், எடையைக் குறைக்க முடியவில்லை எனச் சிலர் புலம்புவதன் பின்னணி இதுதான்.

உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சிகளும் மட்டும்தான் உடல் பருமனைக் குறைக்கும். எத்தனை கலோரிகள் சாப்பிடுகிறோமோ, அவற்றை எரிக்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமாவதில்லை.

அந்த நிலையில்தான் அவர்களுக்கு வேறு சப்போர்ட் தேவைப்படுகிறது. உடல்பருமனுக்கு சிகிச்சைக்காக வரும் நபரின் உயரம், எடை, பி.எம்.ஐ, வயது போன்றவற்றை முதலில் பார்ப்போம். அந்த வயதுக்கு அவர் சரியான பி.எம்.ஐ-ல் இருக்கிறாரா என்று பார்ப்போம். பிறகு உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டைப் பரிந்துரைப்போம். 

உடல் எடை குறைக்க அறுவை சிகிச்சையா?
உடல்பருமனுக்கு சிகிச்சைக்காக வரும் நபரின் உயரம், எடை, பி.எம்.ஐ, வயது போன்றவற்றை முதலில் பார்ப்போம்.

ஓரளவு உடல்பருமன் கொண்டவர்களுக்கு இந்த இரண்டின் மூலம் எடையைக் குறைக்க முடியலாம். அதீத உடல்பருமனுடன் இருப்பவர்களுக்குக் குறைந்த அளவு உணவு சாப்பிட்டுவிட்டு, உடற்பயிற்சி செய்ய உடல் ஒத்துழைக்காது. 

அவர்களுக்கு மருத்துவர் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைப்பார். அது சம்பந்தப்பட்ட நபரின் வயது, உடல்வாகு, உடல் இயக்கம் எனப் பல விஷயங்களைப் பொறுத்து முடிவு செய்யப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...