Skip to main content

Doctor Vikatan: Soap அல்லது Syndet bar... சருமத்துக்கு எது சிறந்தது, ஏன்?

Doctor Vikatan: காலங்காலமாக நம்மில் பலரும் குளிப்பதற்கு சோப்தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில், சோப் பயன்படுத்தவே கூடாது, அது சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும் என்றும், அதற்கு பதிலாக சிண்டெட் பார் என்பதையே பயன்படுத்த வேண்டும் என்றும் சமீபத்தில் ஒரு வீடியோவில் பார்த்தேன். அதென்ன சிண்டெட் பார்.... சோப்புக்கும் அதற்கும் என்ன வித்தியாசம்.... இந்த இரண்டில் எது பெஸ்ட்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் தில்லைக்கரசி.

சருமநல மருத்துவர் தில்லைக்கரசி

சருமத்துக்கு சோப் பயன்படுத்தலாமா அல்லது சிண்டெட் பார் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. முதலில் இவை இரண்டும் என்ன, இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

சோப் என்பது பெரும்பாலும் அல்கலைன் (Alkaline) தன்மையில் தயாரிக்கப்படும்  டிடர்ஜென்ட் சார்ந்த பொருள். இதன் பி.ஹெச் (pH) அளவு பொதுவாக 8 முதல் 9 வரை இருக்கும். சில சோப்புகளில் 9-க்கு அதிகமாகவும் இருக்கும். சோப்பில் வாசனைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் செயற்கை நறுமணங்கள், அதிக ஸ்ட்ராங்கான சந்தன எண்ணெய் மற்றும் கெமிக்கல்கள்   சேர்க்கப்படுகின்றன.

இவையெல்லாம் சேர்க்கப்பட்ட சோப்பை பயன்படுத்தும்போது சருமத்தில் உள்ள 'ஆசிட் மேன்ட்டில்' (Acid mantle) எனும் மெல்லிய கொழுப்புப் படலம் நீக்கப்படுகிறது. இதில் சீபம், நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்டைடுகள் (ஆன்டி மைக்ரோபியல் பெப்டைடு) மற்றும் ஈரப்பதமூட்டும் காரணிகள் (மாய்ஸ்ச்சரைசிங் ) உள்ளன. சோப் உபயோகிக்கும்போது இவையும் சேர்ந்து நீக்கப்படும்.

சிண்டெட் பார் பயன்படுத்தும்போது சருமத்தின் பாதுகாப்பு படலம் தக்க வைக்கப்படுகிறது.

சோப்பில் உள்ள அதிக பிஹெச் அளவு காரணமாக, இது சருமத்தில் எரிச்சலை (Irritation) உண்டாக்க வாய்ப்புள்ளது. நார்மலான சருமம் கொண்டவர்களுக்கு சோப் உபயோகிப்பதால் சருமம் வறட்சியடையலாம். ஏற்கெனவே வறண்ட சருமம் (Dry skin) உள்ளவர்கள் சோப்பைத் தொடர்ந்து பயன்படுத்தினால், சரும வறட்சி மேலும் தீவிரமாகி, அரிப்பு ஏற்பட்டு சருமத்தின் பாதுகாப்புத் தன்மை பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

சிண்டெட் பார் (Syndet bar) என்பது வேதியியல் ரீதியாகத் தயாரிக்கப்படுகிற சுத்திகரிப்புப் பொருள்.  நமது சருமத்தின் பிஹெச் அளவானது  4.5 முதல் 5.5 வரை இருக்கும். இந்த பிஹெச் அளவுக்கேற்றபடி, சிண்டெட் பார் ஏற்றவாறு தயாரிக்கப்படுகிறது. இதில் அதிகப்படியான நறுமணங்களோ அல்லது தேவையற்ற எண்ணெய்களோ சேர்க்கப்படுவதில்லை. சிண்டெட் பார் பயன்படுத்தும்போது சருமத்தின் பாதுகாப்பு படலம் தக்க வைக்கப்படுகிறது.  குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சோப்பைவிட சிண்டெட் பாரே சிறந்தது. இது சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் எரிச்சலைத் தவிர்க்கவும் பெரிதும் உதவுகிறது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...