Skip to main content

பழசெல்லாம் மறக்காம இருக்கணுமா... பல் தேய்ங்க பாஸ்! - ஆய்வறிக்கையும் அல்சைமர் அலெர்ட்டும்

வாய் சுகாதாரமின்மைக்கும் அல்சைமர் உள்ளிட்ட மறதி நோய்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாகச் சொல்கிறது 'கேர்க்வெஸ்ட் இன்ஸ்டிட்யூட்'டின் சமீபத்திய ஆய்வு ஒன்று. 

அதன்படி 2040-ல், அமெரிக்காவில் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயைத் தடுக்கவோ அல்லது அதன் அறிகுறிகளைக் குறைக்கவோ முடியுமா என்பதைத் தீர்மானிப்பது மிகவும் அவசியம் என்பதையும் அந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது. 

மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-39 #DailyHealthDose
மறதி... ஜாக்கிரதை! நலம் நல்லது-39 #DailyHealthDose

வயதான பிறகு வரும் மறதி நோயான அல்சைமருக்கும் வாய் சுகாதாரமின்மைக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா என்ற அந்த ஆய்வில் சில முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, அல்சைமர் நோய் பாதித்த 50 முதல் 80 வயதினருக்கு, அல்சைமர் நோய் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, மோசமான ஈறு பாதிப்பு இருப்பதும், குறிப்பாக... பற்கரை, பற்களைச் சுற்றியுள்ள எலும்பு இழப்பு, ஈறுகளில் ரத்தம் கசிவது போன்ற பிரச்னைகள் இருப்பது தெரிய வந்துள்ளன. 

அல்சைமர் பாதிப்புள்ளவர்களில் பலருக்கும் பற்கள் இழப்பு, ஈறு நோய்களுக்கான ரிஸ்க் இருப்பதும் தெரியவந்துள்ளது. முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்போருக்கு, வாய் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும், முறையான பல் மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதிலும் நடைமுறை சவால்கள் இருப்பதால், அவர்கள் வாய் சுகாதாரம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட இப்படிப்பட்ட முதியோர்களுக்கு பல் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது கடினமாக இருக்கலாம். அவர்களால் நீண்ட நேரம் உட்கார முடியாது அல்லது கருவிகளைக் கண்டு பயப்படலாம். அவர்களுக்கு வலி குறைந்த எளிய சிகிச்சைகள் (Minimally Invasive Treatments) மிகவும் உதவியாக இருக்கும் என்பதையும் அந்த ஆய்வறிக்கை உணர்த்தியுள்ளது.

நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.
நரம்பியல் சிகிச்சை மருத்துவர் மீனாட்சி சுந்தரம்.

இந்த ஆய்வறிக்கை சொல்வது உண்மைதானா... வாய் சுகாதாரத்துக்கும் அல்சைமர் நோய்க்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டா? சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் மீனாட்சி சுந்தரத்திடம் பேசினோம்.

''வாய் சுகாதாரம் மற்றும் அல்சைமர் நோய்க்கு இடையிலான தொடர்பு சற்றே சிக்கலானது. இது ஒரு சுழற்சி போன்றது... ஒன்றினால் மற்றொன்று பாதிக்கும்.  மூளை செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அமிலாய்டு (Amyloid) மற்றும் டாவ் (Tau) எனப்படும் புரதங்கள் நச்சுப் படிமங்களாகப் படிந்து, செல்களைச் சாகடிக்கின்றன.

இந்த நச்சுகளால் மூளை செல்கள் அழிவதால், காலப்போக்கில் மூளையின் அளவு சுருங்குகிறது. குறிப்பாக, நினைவாற்றலுக்குப் பொறுப்பு வகிக்கும் ஹிப்போகேம்பஸ் (Hippocampus) பகுதி முதலில் பாதிக்கப்படுகிறது. இப்படித்தான் அல்சைமர் பாதிப்பு ஏற்படுகிறது.

அல்சைமர் நோய் ஒருவரின் மூளையைப் பாதிப்பதால், அவர் சுய பராமரிப்பை (Self-care) மறந்து விடுகிறார். சிறுவயதில் கற்றுக்கொண்ட  அடிப்படைப் பழக்கங்கள் மறந்து போவதால், அவர்களின் வாய் சுகாதாரம் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறது. சுய பராமரிப்பு என்பது நாம் வளரும்போது சமூக மற்றும் கலாசாரத் தொடர்புகளின் மூலம் கற்றுக்கொள்ளும் ஒரு விஷயம்.

இந்தத் திறன் இழக்கப்படும்போது, அந்த நபரின் ஒட்டுமொத்த சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. இதில் இயல்பாகவே வாய் மற்றும் பற்களின் சுகாதாரமும் அடங்கும். எனவே, அல்சைமர் நோயாளிகளுக்கு வாய் சுகாதாரமின்மையைக் காண்பது அசாதாரணமானது அல்ல.

சோம்பேறித்தனத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ பற்களைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், வாயில் அடிக்கடி கிருமித் தொற்றுகள் (Infections) ஏற்படும்.

இன்னொரு புறம், சோம்பேறித்தனத்தாலோ அல்லது கவனக்குறைவாலோ பற்களைச் சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால், வாயில் அடிக்கடி கிருமித் தொற்றுகள் (Infections) ஏற்படும். 

இந்தத் தொற்றுகள் உடலில் ஒருவித அழற்சி அல்லது வீக்கத்தை உண்டாக்குகின்றன. இந்த வீக்கம் மூளைக்குச் செல்லும்போது, அங்கும் பாதிப்பை (Neuroinflammation) ஏற்படுத்துகிறது. இதுதான் அல்சைமர் நோயில் மூளையில் ஏற்படும் மோசமான மாற்றங்களைத் தூண்டுகிறது என்று நம்பப்படுகிறது. 

மூளையில் நச்சுப் படிமங்கள் (Plaques and Tangles) உருவாகக் காரணமாகிறது. இதுவே அல்சைமர் நோய் தீவிரமடைய வழிவகுப்பதாகக் கருதப்படுகிறது. இந்தக் கருத்து கேட்பதற்குச் சரியாக இருப்பது போல தோன்றினாலும், இது இன்னும் அறிவியல்ரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. இது குறித்த விஞ்ஞானபூர்வ ஆய்வுகளும், தரவுகளும் வந்த பிறகுதான் உறுதியாகச் சொல்ல முடியும்'' என்கிறார் டாக்டர் மீனாட்சி சுந்தரம்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...