Skip to main content

‘அட… அதுக்குள்ள முடிஞ்சிடுச்சே!’ கொண்டாட்டத்துக்குப் பின் வரும் சோகம்! ஏன் ஏற்படுகிறது?

திருமணம் மாதிரியான நிகழ்ச்சிகள், பிறந்தநாள் கொண்டாட்டம், விளையாட்டுப் போட்டி, கல்ச்சுரல்ஸ், நீண்ட நாள் திட்டமிட்டு சென்ற சுற்றுலா போன்றவை முடிந்ததும் பலருக்கும் ஒரு வெறுமை உணர்வு ஏற்படும். 'அட! அதுக்குள்ள முடிஞ்சு போச்சே' என்பது போல உணர்வு ஏற்படும். பரபரப்பாக இருந்த வாழ்க்கை திடீரென்று அமைதி, அமைதி....அமைதியோ அமைதியாகிவிட்டதைப் போல தோன்றும். இதனை Post-Event Blues என்கிறது உளவியல்.

கொண்டாட்டத்துக்குப் பின் வரும் சோகம்

"நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ஒரு விஷயம் முடிந்த பிறகு ஏற்படும் சோகம்தான் இது. பொதுவாக, அந்த நிகழ்வு முடிந்ததும் அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது இது போன்ற உணர்வு ஏற்படும். அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது, அந்நிகழ்வுக்காக தயாராகும்போது இருந்த அதீத உற்சாகம், எனர்ஜி, ஒரு சந்தோஷமான ஸ்ட்ரெஸ், பரபரப்பு ஆகியவை சட்டென்று நீங்கிவிடுவதால் ஒரு வெறுமை உணர்வு ஏற்படும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் தர்ஷினி மதனகோபால்.

"சோகமான மனநிலை, மனஅழுத்தம், எரிச்சலுணர்வு, களைப்பு, சோர்வு போன்றவைதான் இதன் அறிகுறிகள். ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், இது தற்காலிகமான நிலைதான். அதனால் தீவிர பாதிப்புகள் பொதுவாக ஏற்படாது. நம் எல்லாருக்குமே அப்படி ஓர் உணர்வு ஏற்படலாம், ஏற்கெனவே ஏற்பட்டு இருக்கும்.

உளவியல் ஆலோசகர் தர்ஷினி மதனகோபால்

இந்த மனநிலைக்கு உடலியல் மற்றும் சமூகம் சார்ந்த இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. இது போன்ற நிகழ்வுகளுக்குத் தயாராகும்போது அதிக அழுத்தம் ஏற்பட்டு அட்ரிலீன், கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாகும். அந்த நிகழ்ச்சியோ, கொண்டாட்டமோ நிறைவடைந்ததும், அதிகமாக இருந்த ஹார்மோன்களின் அளவு சட்டென்று குறையும்போது சோகம், வெறுமை உணர்வு போன்றவை ஏற்படும்.

அடுத்ததாக, நிகழ்ச்சி, கொண்ட்டாம் போன்ற சமயத்தில் நிறைய பேரை சந்திப்போம், பேசுவோம், நிறைய வேலைகள் செய்வோம், பொறுப்பை எடுத்துக்கொள்வோம். அது முடிந்ததும், சலிப்பான அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பும்போது சமூகம், குடும்பத்தினர், நண்பர்களுடன் இருந்த இந்த கனெக்ஷன் மிகவும் குறைந்துவிடும். இது போன்ற திடீர் உணர்வு ரீதியான மாற்றம் வரும்போதும், இது ஏற்படலாம்.

அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க!

அடுத்த கொண்டாட்டத்துக்கு தயாராகுங்க!

நல்ல ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும், நிறைய தண்ணீர் அருந்த வேண்டும், நாள்தோறும் சரியான நேரத்துக்குத் தூங்க வேண்டும், தொடர்ந்து ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும். இந்தப் பழக்கங்கள் உடலை ஓர் ஒழுங்குக்குள் கொண்டு வர உதவும். உடல் ஒழுங்குக்குள் வரும்போது அது உணர்வை ஒழுங்குபடுத்த உதவும். இதைத் தவிர்த்து, சமூகத்துடனான தொடர்பு துண்டிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தனிமையாக இருக்காமல் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, நண்பர்களை சந்திப்பது, அடுத்த நிகழ்வு, சந்திப்புக்காகத் திட்டமிடுவது போன்றவற்றை செய்யலாம்" என்கிறார் தர்ஷினி மதனகோபால்.

அப்ப தேர்தல் திருவிழா முடிஞ்சதும்...பல பேருக்கு இந்தப் பிரச்னை வரலாம்!


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...