Skip to main content

உடல் பருமன் மட்டும் அல்ல… நாக்கும் பருமனாகலாம்! - காரணங்களும், தீர்வும்!

உடல் பருமன், உடல் எடை அதிகரிப்பு பற்றிய விஷயங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம், பேசுகிறோம். ஆனால், உடலின் முக்கிய உறுப்பான நாக்கின் பருமன் பற்றி, பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. பேசுவது, சாப்பிடுவது என முக்கிய விஷயங்களுக்கு உறுதுணையாக இருக்கும் நாக்கில் ஏற்படும் பருமனுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த மூத்த பொது மருத்துவர் ஆர்.பி.சுதாகர்.

நாக்கு பருமன்

"நாக்கு தடிமானம் ஆவதை மருத்துவ ரீதியாக 'மேக்ரோக்ளாசியா' (Macroglossia) என்போம். நாக்கு என்பது அளவுக்கு அதிகமாக பருமனாக இருப்பது. இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. மரபணு குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவியிலேயே இந்தப் பிரச்னை இருக்கும். நாக்கு இயல்பான அளவைவிட பெரிதாக இருக்கும்.

அவர்கள் தூங்கும்போது மூச்சு விட சிரமப்படுவார்கள். பற்கள் சரியாக அமைவதில் (Align) பிரச்னை ஏற்படலாம். அதேபோல பற்களின் நடுவே இடைவெளிகள் ஏற்படலாம். இதுபோன்ற காரணங்களால் உணவை மெல்ல முடியாமல் சிமரப்படுவார்கள். சில நேரங்களில் நாக்கை அடிக்கடி கடித்துக்கொள்ளும் நிலைகூட ஏற்படலாம்.

குறட்டை

பெரியவர்களுக்கும்...

பெரியவர்களுக்கு நாக்கு பருமனாவதற்கான பொதுவான காரணம் ஹைப்போதைராய்டிஸம் எனப்படும் தைராய்டு குறைபாடு. தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்வதால், நாக்கின் உள் சில புரதங்கள் படிந்து, நாக்கு தடிமனாக ஆகும். இவர்களுக்கும் தூங்கும்போது மூச்சு விடுவதில் சிரமம், இரவு நேரங்களில் மூச்சுத் திணறல், குறட்டைப் பிரச்னை, பற்களின் அலைன்மென்ட் மாறுவது, பற்கள் முன்னோக்கி துருத்திக்கொண்டு வருவது போன்ற பிரச்னைகள் வரலாம்.

அதேபோல பிறவியிலேயே ஹைப்போ தைராய்டு (congenital hypothyroidism) உள்ள குழந்தைகளில், நோய் கண்டறியும் போது சுமார் 12 முதல் 25 சதவிகிதம் பேருக்கு நாக்கு பெரிதாகக் காணப்படலாம். ஹைப்போ தைராய்டுக்கு பிரச்னைக்கு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, தைராய்டு ஹார்மோன் மருந்துகளை தொடர்ந்து எடுத்தால் இந்த அறிகுறிகள் படிப்படியாக குறையும். எனவே, இந்த அறிகுறி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் தைராய்டு அளவுகளை பரிசோதிப்பதும் முக்கியமானது.

பொது மருத்துவர் ஆர்.பி. சுதாகர்

உடலில் வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் 'அக்ரோமேகலி' (Acromegaly) என்ற அரிதான நோயின் காரணமாகவும் இது ஏற்படலாம். மூளையின் அடிப்பகுதியில் காணப்படும் பிட்யூட்டரி சுரப்பி, வளர்ச்சி ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது உடலின் சில பகுதிகள் இயல்பைவிட அதிகமாக வளரத் தொடங்கும். இதுவும் நாக்கு பருமனாக ஆவதற்கான காரணமாக இருக்கலாம். இவற்றால் பாதிக்கப்பட்ட 54 முதல் 69 சதவிகிதம் பேருக்கு நாக்கு பருமனாக மாறலாம்.

இதைத்தவிர, நாக்கு உள்ளிட்ட பல்வேறு உறுப்புகளில், திசுக்களில் அசாதரண புரதம் படியும் பிரச்னையான, 'அமிலாய்டோசிஸ்' (Amyloidosis) காரணமாகவும் நாக்கு பருமனாகலாம். சில நேரங்களில் நாக்கில் ஏற்படும் சில சாதாரண கட்டிகள், புற்றுநோய் கட்டிகள் போன்ற காரணத்தாலும், நாக்குப் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் பெரிவதாலும் நாக்கு தடினமாக வாய்ப்புண்டு. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட 10 முதல் 25 சதவிகிதம் பேருக்கு நாக்கு பருமனாகக் காணப்படலாம்.

நாக்கை கடித்துக்கொள்து போன்ற அறிகுறிகள் தென்படும்.

என்ன காரணங்களாக இருந்தாலும், மூச்சுத்திணறல், பற்களின் அலைன்மென்ட் மாறுவது, நாக்கை கடித்துக்கொள்து போன்ற அறிகுறிகள் தென்படும். காரணத்தைக் கண்டறிந்து, அதற்கு தீர்வு கண்டாலே நாக்கு பருமன் பிரச்னைக்குத் தீர்வு கிடைத்துவிடும். உடல் பருமன், அதிக எடை போன்ற காரணங்களால் உடலில் கொழுப்பு சேர்வதற்கும் நாக்கு பருமனாவதற்கும் தொடர்பில்லை" என்கிறார் மருத்துவர் ஆர்.பி.சுதாகர்.


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...