Skip to main content

`பறவைக் காய்ச்சல் பரவுதே, இறைச்சி, முட்டை, பால் சாப்பிடலாமா?' பயமா இருக்கா? | Q&A

தமிழ்நாட்டில் இப்போது பெரிய அலாரமாக இருக்கிறது 'பறவைக் காய்ச்சல்'.

இதனால், 'சிக்கன் சாப்பிடக் கூடாது..', 'பால், முட்டை மூலமும் பறவைக் காய்ச்சல் பரவலாம்' போன்ற செய்திகள் மக்களிடையே இருந்து வருகிறது.

மக்களின் பயத்திற்கு விடையளிக்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

`பறவைக் காய்ச்சல் என்றால் என்ன ?'

``பறவைக் காய்ச்சல் என்பது H5N1 என்று சொல்லக்கூடிய ஃப்ளூ வைரஸால் ஏற்படும் ஒரு வகை காய்ச்சல் ஆகும்.

இந்த வைரஸ் பெரும்பாலும் பறவைகளைத் தான் தாக்குகிறது. இதனால், அவைகளுக்கு மரணம் கூட ஏற்படலாம்.'

Dr.அ. ப. ஃபரூக் அப்துல்லா
Dr.அ. ப. ஃபரூக் அப்துல்லா

`பறவைக் காய்ச்சல் பறவைகளிடம் மட்டும் தான் காணப்படுமா?'

`இல்லை. பறவைக் காய்ச்சல் பறவைகள் மற்றும் அனைத்து பாலூட்டி விலங்குகளிடமும் காணப்படும்.'

`இந்தக் காய்ச்சல் எப்படி மனிதர்களுக்கு பரவுகிறது?'

`இறந்த பறவைகள் அருகில் செல்வது... அவைகளைத் தொடுவது போன்றவைகளால் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவலாம். இதனால், இறந்த பறவைகளின் அருகில் மனிதர்கள் செல்லாமல் இருப்பதும்... அவற்றை தொடாமல் இருப்பதும் நல்லது.'

`பறவைக் காய்ச்சல் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், இறைச்சி, முட்டை போன்றவற்றை சாப்பிடலாமா?'

``இது போன்ற வைரஸ்களுக்கு வெப்பம் என்பது பெரிய எதிரி. எந்தளவுக்கு எதிரி என்றால், இந்த வைரஸ்களால் மனிதர்களின் உடல் வெப்பத்தைக் கூட தாங்க முடியாது. அதனால், இது குறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை.

இறைச்சி, முட்டை, பால் என எதுவாக இருந்தாலும், நல்ல சுட வைத்து... நன்கு வேக வைத்து அல்லது பொரித்து... சமைத்து சாப்பிட்டால் வைரஸ் பரவாது.

ஆனால், கட்டாயம் பச்சையாக முட்டை, பால் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துவிடுங்கள்."

பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்

``பறவைக் காய்ச்சல் வைரஸ் ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவுமா?"

``நிச்சயமாக இல்லை. பாதிக்கப்பட்ட பறவை அல்லது விலங்கைத் தொட்டால் மட்டுமே இந்த வைரஸ் பரவுமே தவிர, ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு இது பரவாது."

``பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?"

``ஏதேனும் பறவை அல்லது விலங்கை நேரடியாக தொட்ட பின் ஏற்படும் காய்ச்சல், கண் எரிச்சல், உடல் வலி இவை எல்லாமே பறவைக் காய்ச்சலுக்கான அறிகுறி.

அதனால், இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரிடம் செல்வது நல்லது."

``பறவைக் காய்ச்சலில் இருந்து எப்படி எச்சரிக்கையாக இருப்பது?"

``ஏதேனும் பறவையோ, விலங்கோ இறந்து கிடந்தால், உடனடியாக கால்நடை அவசர உதவிக்கு போன் செய்யுங்கள். நீங்கள் உங்கள் கைகளில் தொடுவது ஆபத்தானது. "

``பறவைக் காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து வருமா ?"

``பறவைக் காய்ச்சலுக்கான நோய் எதிர்ப்பு சக்தி மனிதர்களுக்கு இல்லை. இதனால், சற்று எச்சரிக்கை தேவை. இதைத் தவிர்த்து பீதி எல்லாம் அடைய தேவையில்லை."


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...