Skip to main content

Doctor Vikatan: கோடையில் படுத்தும் கிட்னி ஸ்டோன்ஸ்... வாழைத்தண்டு ஜூஸ்தான் சரியான தீர்வா?

Doctor Vikatan: எனக்கு கோடைக்காலம் ஆரம்பித்தாலே கிட்னி ஸ்டோன்ஸ் எனப்படும் சிறுநீரகக் கற்கள் பிரச்னை வர ஆரம்பித்துவிடும். இந்த வருடமாவது கோடையில் அந்தப் பிரச்னையில் இருந்து விலகி இருக்க நினைக்கிறேன். தினமும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால் கிட்னி ஸ்டோன்ஸ் வராது என்கிறார்களே... அது எந்த அளவுக்கு உண்மை.... எவ்வளவு குடிக்க வேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி  

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அடிப்படை. கோடையில் உடலின் நீர்த்தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.  

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம். அந்த அளவைப் பொறுத்துதான் அந்தக் கற்களைக் கரைக்க வாழைத்தண்டு சாறு மட்டுமே போதுமா என்று தீர்மானிக்க முடியும். அளவில் மிகச் சிறிய கற்கள் என்றால் வாரத்தில் மூன்று நாள்களுக்கு 30 மில்லி அளவுக்கு வாழைத்தண்டு சாறு குடிக்கலாம். பெரிய கற்களுக்கு இந்தச் சிகிச்சையை மட்டுமே நம்புவது சரியல்ல. சித்த மருத்துவ சிகிச்சை எடுக்க விரும்பினால், மருத்துவரை கலந்தாலோசியுங்கள். அவர் வாழைத்தண்டு சாற்றுடன் வேறென்ன மூலிகைகள் சேர்த்து எடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பார்.

சிறுநீரகக் கற்களைப் போக்க வாழைத்தண்டை சிறுபருப்புடன் சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிடுவது, சாலடாக எடுத்துக்கொள்வது போன்றவற்றுடன் முள்ளங்கி, மூக்கிரட்டை, சிறுபீளை, நெருஞ்சில், ஆவாரம்பூ, பூசணிச்சாறு, வெள்ளரி விதை, கற்றாழை, கறிவேப்பிலை போன்றவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு என்பது உண்மைதான். ஆனால், இந்த விஷயத்தில் சிறுநீரகக் கற்களின் அளவு முக்கியம்.

வெளியே செல்லும்போது சோடா போன்ற செயற்கை பானங்களைத் தவிர்த்து, நீராகாரம், இளநீர், நுங்கு ஜூஸ், பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். உப்புச்சத்து அதிகமுள்ள கருவாடு, ஊறுகாய் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கீரை சமைக்கும்போது தக்காளி சேர்த்துச் சமைப்பதைத் தவிர்க்கவும். கீரையோடு பூண்டு மட்டும் சேர்த்துக் கடைந்து சாப்பிடுவது போதுமானது.

உடலைக் குளிரச்செய்யும் விஷயங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். சரியான தூக்கம், வாரம் ஒருமுறை எண்ணெய்க் குளியல் எடுப்பது, வெட்டிவேரும் விளாமிச்சை வேரும் ஊறவைத்த தண்ணீரைப் பருகுவது, தாழம்பூ சேர்த்த பானங்களைக் குடிப்பது போன்றவை உதவும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.     


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...