Skip to main content

Doctor Vikatan: சூயிங்கம் மெல்வதால் ஸ்ட்ரெஸ் குறையும் என்பது உண்மையா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சூயிங்கம் மெல்லும் பழக்கம் ஆரம்பித்திருக்கிறது. தினமும் ஒன்றிரண்டு மெல்கிறேன். இப்படி தினமும் சூயிங்கம் மெல்வது ஒரு கட்டத்தில் அடிக்ஷனாக மாறும் என்றும், அதை விழுங்கிவிட்டால் ஆபத்து என்றும் சிலர் சொல்கிறார்கள். அதே சமயம், சூயிங்கம் மெல்வதால் பதற்றம் குறையும், ஸ்ட்ரெஸ் குறையும் என்றும் சிலர் சொல்கிறார்கள். இதில் எது உண்மை?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

டாக்டர் ஸ்பூர்த்தி அருண்
டாக்டர் ஸ்பூர்த்தி அருண்

சூயிங்கம் மெல்வதில் சில நன்மைகள் உள்ளன என்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், நாம் எந்த வகையான சூயிங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது மிக முக்கியம். சூயிங்கம் தயாரிப்பில் முக்கியமானது 'கம் பேஸ்' (Gum base) எனப்படும் ரப்பர் போன்ற பொருள்.

இது இயற்கையான அல்லது செயற்கையான பொருள்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சூயிங்கமில் பசை, ரெசின், கால்சியம் கார்பனேட் போன்ற நிரப்பிகள், ப்ரிசர்வேட்டிவ், பாரஃபின் அல்லது தாவர எண்ணெய், இனிப்புச்சுவைக்காக சர்க்கரை அல்லது கார்ன் சிரப், ஸைலிட்டால் (Xylitol) அல்லது செயற்கை இனிப்பூட்டிகள், நிறமிகள், மணமூட்டிகள், ஃபில்லர்ஸ் (fillers) போன்றவைச் சேர்க்கப்படும்.

எதையும் அளவுக்கு அதிகமாகச் செய்வது பாதிப்பை ஏற்படுத்தும். சர்க்கரை, அதிகப்படியான நிறமிகள் மற்றும் வேதிப்பொருள்கள் கலந்த சூயிங்கம்களை மெல்வதைத் தவிர்க்க வேண்டும்.  

சூயிங்கமில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருள்களால் வயிற்றுப்போக்கு (laxative effect) போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. தொடர்ந்து அல்லது அதிக நேரம் மெல்வதால் சிலருக்குத் தாடை வலியும் அதன் விளைவாக ஒற்றைத் தலைவலியும் ஏற்படலாம்.

மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போது தூக்கம் வருவது போல் உணர்ந்தால், சூயிங்கம் மெல்வதன் மூலம் சிறிது நேரத்திற்குத் தங்களைப் புத்துணர்ச்சியாகவும் விழிப்பாகவும் வைத்துக்கொள்ளவும் முடியும்.

சூயிங்கம் மெல்வதால் உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கிறது. இது ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், பற்சிதைவைத் தடுக்கவும் உதவுவதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சூயிங்கம் மெல்லுவது சிலருக்குப் பதற்றம் மற்றும் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவலாம்.

சூயிங்கத்தில் சேர்க்கப்படுகிற பசையை நம் உடலால் செரிக்க முடியாது.

சூயிங்கமை மென்று துப்பிவிட வேண்டும் என்றாலும், தற்செயலாக சிலர் அதை விழுங்கிவிடவும் வாய்ப்பு உண்டு. அப்படி விழுங்கிவிட்டாலும் அது குறித்து பயப்படத் தேவையில்லை. சூயிங்கத்தில் சேர்க்கப்படுகிற பசையை நம் உடலால் செரிக்க முடியாது. ஆனாலும், உடலுக்குள் செல்கிற அந்நியப் பொருள்கள், மலம் வழியே வெளியேறுவது போல 40 மணி நேரத்துக்குள் சூயிங்கத்தின் மிச்சமும் வெளியேறிவிடும். எனவே, அது குறித்துக் கவலை வேண்டாம்.

சரியான சூயிங்கத்தைத் தேர்ந்தெடுங்கள். முக்கியமாக சர்க்கரை இல்லாத (Sugar-free) அல்லது சைலிட்டால் (Xylitol) கலந்த சூயிங்கம்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது. எப்போதும் அளவோடு பயன்படுத்துங்கள். சூயிங்கம் மெல்வது என்பது சிலருக்கு ஒரு வழக்கமாக மாறக்கூடும். ஆனால், அது அடிக்ஷனாக மாற வாய்ப்பில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...