Skip to main content

Doctor Vikatan: விட்டுவிட்டுத் தொடரும் காய்ச்சல்; கேன்சர் அறிகுறியாக இருக்கலாம் என்பது உண்மையா?

Doctor Vikatan: என் நண்பர் ஒருவருக்குக் கடந்த சில மாதங்களாக அடிக்கடி விட்டுவிட்டுக் காய்ச்சல் வந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது மருத்துவரைப் பார்ப்பதும், பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்வதுமாக இருந்தார்.

சமீபத்தில்தான் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அடிக்கடி வந்த காய்ச்சல் அதன் அறிகுறியாக இருக்கலாம் என்று சொன்னார்களாம் மருத்துவர்கள். காய்ச்சல் என்பது கேன்சரின் அறிகுறியாக இருக்கும் என்பதே எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு வாய்ப்பு உண்டா...?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்.

புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்
புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கிருஷ்ணகுமார்

உங்கள் நண்பர் விஷயத்தில் மருத்துவர்கள் சொன்ன தகவல் உண்மைதான். புற்றுநோயின் பொதுவான, அதேசமயம் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் விடப்படும் ஓர் அறிகுறி காய்ச்சல். இது குறிப்பாக புற்றுநோய் முற்றிய நிலையிலோ அல்லது நிணநீர் புற்றுநோய் (lymphoma) மற்றும் ரத்தப் புற்றுநோய் (leukemia) போன்ற ரத்தம் தொடர்பான புற்றுநோய்களிலோ அதிகமாகக் காணப்படுகிறது. 

புற்றுநோய் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும்போதோ, உடலில் வீக்கத்தை (inflammation) ஏற்படுத்தும்போதோ அல்லது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் சில வேதிப்பொருள்களை வெளியிடும்போதோ இதுபோன்ற காய்ச்சல் ஏற்படுகிறது.

நீண்ட நாள்களாகத் தொடரும் அல்லது காரணமே தெரியாமல் வரும் காய்ச்சலுக்கு முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். ரத்தப் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், தசை, நரம்புகள், கொழுப்பு மற்றும் ரத்த நாளங்கள் போன்ற உடலின் துணை திசுக்களில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவை அடிக்கடி காய்ச்சலை உண்டாக்குகின்றன.

புற்றுநோய் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவிய பிறகு பெரும்பாலும் காய்ச்சல் தோன்றும். இருப்பினும், ரத்தப் புற்றுநோய்களில் இது ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம்.

புற்றுநோய் உடலின் மற்ற பாகங்களுக்குப் பரவிய பிறகு பெரும்பாலும் காய்ச்சல் தோன்றும்.

புற்றுநோயின் நேரடி பாதிப்பால் (neoplastic fever) காய்ச்சல் ஏற்படலாம் அல்லது கீமோதெரபி போன்ற சிகிச்சைகளால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும் போதும் காய்ச்சல் வரலாம். இந்தக் காய்ச்சல் அவ்வப்போது வந்து போகும் தன்மையுடையது. தொடர்ந்து பல நாள்கள் அல்லது வாரங்கள் நீடிக்கலாம். சில வகை புற்றுநோய்கள், இரவில் வியர்வை மற்றும் அதிக வெப்பநிலையை ஏற்படுத்துகின்றன. 

சாதாரண காய்ச்சல் மருந்துகள் (பாராசிட்டமால் போன்றவை) தற்காலிகமாக வெப்பத்தைக் குறைத்தாலும், காய்ச்சல் மீண்டும் மீண்டும் வரும். உங்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ இத்தகைய அறிகுறி இருந்தால், மருத்துவர்கள் பொதுவாகக் கீழ்க்காணும் சோதனைகளைப் பரிந்துரைப்பார்கள்.

ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்களின் அளவை அறியும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ரத்தப் புற்றுநோயைக் கண்டறிவதில் இது முதல்படி.

ESR மற்றும் CRP போன்ற சோதனைகள், உடலில் வீக்கம் (Inflammation) உள்ளதா என்பதைக் கண்டறியும். கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகளுக்கான பரிசோதனைகளின் மூலம் உறுப்புகளின் பாதிப்பைக் கண்டறியலாம்.

மார்பு எக்ஸ்-ரே (X-ray), சிடி ஸ்கேன் (CT Scan) அல்லது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் உடலில் கட்டிகள் ஏதேனும் உள்ளனவா என்று பார்க்கப்படும். சந்தேகம் இருக்கும் இடத்தில் இருந்து திசுக்களை எடுத்து ஆய்வு செய்யும் பயாப்ஸி (Biopsy) சோதனையும் தேவைப்படலாம். 

ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்களின் அளவை அறியும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ரத்த புற்றுநோயைக் கண்டறிவதில் இது முதல்படி.

உடல் வெப்பநிலை 101°F (38.3°C) க்கும் மேல் தொடர்ந்தாலோ, திடீரென உடல் எடை குறைந்தாலோ, தீராத சோர்வு மற்றும் பசியின்மை இருந்தாலோ, கழுத்து, அக்குள் அல்லது இடுப்புப் பகுதியில் வீக்கங்கள் (Lumps) தென்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

காய்ச்சல் என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் ஏதோ ஒரு கிருமிக்கு எதிராகப் போராடுகிறது என்பதன் அடையாளம் மட்டுமே. எல்லா காய்ச்சலும் புற்றுநோய் அல்ல, ஆனால், காரணமில்லாத காய்ச்சலை அலட்சியப்படுத்தவும் கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...