Skip to main content

Doctor Vikatan: குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதில் மன அழுத்தம்; பெண்ணின் வைரல் வீடியோ, தீர்வு என்ன?

Doctor Vikatan: சமீபத்தில் ஒரு பெண்ணின் வீடியோ வைரலானது. அதில் அந்தப் பெண் தன் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள முடியாத மன அழுத்தத்துக்கு உள்ளானது பற்றிப் பேசியிருந்தார்.

தொடர்ந்து சில வருடங்களாக அந்த வேலையைச் செய்ததில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, வீட்டில் உள்ளவர்களை அடித்துவிட்டு வெளியேறியதாகவும், இப்போது மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பேசியிருந்தார்.

பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. குழந்தை பிறந்து இத்தனை வருடங்கள் கழித்து மன அழுத்தம் வர வாய்ப்பு உண்டா.... இவரைப் போன்றவர்களுக்கு என்னதான் தீர்வு?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் மிதுன் பிரசாத்

மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்
மனநல மருத்துவர் மிதுன் பிரசாத்

அந்த வீடியோவை நானும் பார்த்தேன். அதில் அந்தப் பெண், குழந்தைகளைப் பராமரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றிப் பேசுகிறார். அவர் பேசியதை வைத்துப் பார்க்கும்போது அவர், பிரசவத்துக்குப் பிறகு பெண்களைப் பாதிக்கும் 'போஸ்பார்ட்டம் டிப்ரெஷன்' (Postpartum Depression) பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

போஸ்பார்ட்டம் டிப்ரெஷன் என்பது குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் வரும் மன அழுத்தம். குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு ஏற்படும் மன அழுத்தத்தை 'மேஜர் டிப்ரெஷன்' (Major Depression) என்று அழைக்கிறோம்.

அந்தப் பெண்மணி பேசுவதிலிருந்து அவருக்கு மன அழுத்தம் இருப்பது தெரிகிறது, ஆனால், அதற்குத் தேவையான சமூக மற்றும் குடும்ப ஆதரவு அவருக்குக் கிடைக்கவில்லை என்பது புரிகிறது.

பொதுவாக நாம் யாரிடமாவது மன அழுத்தம் பற்றிப் பேசினால், அவர்கள் உடனே 'தைரியமா இரு', 'மனசை அமைதியா வெச்சுக்கோ, 'யோகா பண்ணு, தியானம் செய்' என்று எளிதாகக் கூறிவிடுவார்கள்.

குறிப்பாக, டிப்ரெஷன், பதற்றம் உள்ளவர்கள், பெண்களுக்கெல்லாம் இந்தத் தலைவலி அதிகம் வரலாம்.

ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தத்திற்கும் (Stress) டிப்ரெஷன்  (Depression) எனப்படும் மனச்சோர்வுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஸ்ட்ரெஸ் என்பது மனம் சம்பந்தப்பட்டது. டிப்ரெஷன் என்பது  மூளை சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னை. 

டிப்ரெஷன் என்பது மன அழுத்தத்தைவிடத் தீவிரமான மனநல பாதிப்பு. சம்பந்தப்பட்ட நபர் முயற்சி செய்தாலும், அதிலிருந்து வெளியே வர நினைத்தாலும் மூளை ஒத்துழைக்காது.

மூளையில் உள்ள சில நியூரோ கெமிக்கல்கள் (Neuro-chemicals) மற்றும் சர்க்யூட்கள் சரியாகச் சுரக்காவிட்டாலோ, சரியாக வேலை செய்யாவிட்டாலோ, எவ்வளவு ஸ்ட்ராங்கான நபராக இருந்தாலும், மனஉறுதி உள்ள நபர்களுக்கும் டிப்ரெஷன் வரலாம். அதைச் சரியாகப் புரிந்துகொண்டால்தான் டிப்ரெஷன் குறித்த மனத்தடை நீங்கும்.

உடல் ரீதியான தைராய்டு பிரச்னைக்கு எப்படி மருத்துவரை நாடுகிறோமோ, அதேபோல் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் ஆணோ, பெண்ணோ, மனநல மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது.
ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது.

மனநலக் கோளாறுகளைப் பற்றிய விழிப்பு உணர்வு குறைவாக இருப்பதையும், அது குறித்த சமூகத் தயக்கம் (Stigma) அதிகமாக உள்ளதையுமே இந்த  வீடியோ நமக்கு உணர்த்துகிறது. மனது சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை 'ஸ்ட்ரெஸ்' என்ற பெயரில் கடந்து போகிறோம்.

மனநலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் பல வகைகள் உள்ளன. அவை நம் மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் மீறி பாதிப்பவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். 

வீடியோவில் பேசியிருக்கும் பெண்ணின் மேஜர் டிப்ரெஷனை நிச்சயம் குணப்படுத்த முடியும். ஆரம்ப கட்டத்தில் முறையான கவுன்சலிங் மட்டுமே போதுமானது.

பாதிப்பு தீவிரமாகும் போது, கவுன்சலிங்குடன் மருத்துவ சிகிச்சையும் சேர்த்து அளிக்கப்படும்போது இதிலிருந்து முழுமையாக வெளிவர முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    


Comments

Popular posts from this blog

Airtel Recharge Plans: "கொஞ்சம் கூட லாபம் கிடைப்பதில்லை!"- விலையை ஏற்றி ஏர்டெல் சிஇஓ அதிரடி!

இந்த ஆண்டின் நடுவில் ஏர்டெல் நிறுவனம் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தத் திட்டமிருக்கிறது. ஜியோவின் வருகைக்குப் பிறகு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் வெகுவாகக் குறைந்தனர். மிகக் குறைந்த விலையிலான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி ஜியோ குறுகிய காலத்தில் பல கோடி சந்தாதாரர்களைப் பிடித்தது. இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டன. ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால் ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களும் போட்டிப்போட்டு தங்களின் சந்தாதாரர்களுக்குப் பல ரீசார்ஜ் திட்டங்களைக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தின. Airtel Recharge Plans இக்கடும்போட்டியில் பல பெருநிறுவனங்கள் காணாமலே போயின. அதிக சந்தாதாரர்களைப் பெற்று ஜியோ நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் கடுமையாகப் போட்டிப்போட்டு தங்களின் நிலையைத் தக்க வைத்து தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குறைவான கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வந்த ஏர்டெல், சமீபகாலமாக மெல்ல மெல்ல அதன் விலையை அதிகரித்து வருகிறது. இதையடுத்து தற்போது இந்த ஆண...

நெடுஞ்சாலைகளில் 100கிமீ வேகத்துக்கு மேல் போனால் Tollgate-ல் அபராதம் கட்ட வேண்டுமா? | Fact Check

பெரும்பாலான வாகன விபத்துகள் சாலை விதிகளையும் ஒழுக்கங்களையும் சரியாகப் பின்பற்றாமல் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. அதில் முக்கியமானது சாலையில் வரையறுக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாகச் செல்வது. வாகனங்களில் அதிவேகமாகச் செல்வது என்பது வாகனம் ஓட்டுபவருக்கு மட்டுமின்றி, சாலையில் இருப்பவர்களுக்கும் ஆபத்து. ஒவ்வொரு வாகன ஓட்டிகளும் சாலையின் தன்மையையும் சூழலையும் புரிந்து கொண்டு சுய ஒழுக்கத்துடன் வாகனம் ஓட்டுவது என்பது அவசியம். ஆனால் பலர் இந்த சமூகப் பொறுப்பை உணர்வதில்லை. தாறுமாறாகச் சாலைகளில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றனர். இதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் போக்குவரத்துக் காவல்துறை, அதிவேகமாகச் செல்லும் வாகனத்தைக் கண்டறிய 'Police laser speed gun (police lidar)' என்ற கருவியைப் பயன்படுத்தி வருகின்றனர்.Toll Gate இந்தக் கருவியில் ஸ்பீட் லிமிட் செட் செய்து விட்டால் போதும்; அது அதிவேகமாகச் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து விடும். இது தமிழகம் உட்பட இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது. தமிழகத்தில் முக்கியமான இடங்களில் போக்குவரத்துக்குக் காவல்துறை இந்தக் கருவியைப்...

``டியர் பாஸ், தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளுங்கள்'' - லேப்டாப் திருடன் ஓனருக்கு கொடுத்த மெசேஜ்!

திருடர்களில் சிலர் நேர்மையாகவும் நியாயமாகவும், தங்களைப் பிடிக்க தாங்களே ஐடியா கொடுத்ததும் சென்று விடுகிறார்கள். சீனாவின் ஷாங்காயில் உள்ள அலுவலகம் ஒன்றில் கடிகாரங்கள் மற்றும் லேப்டாப்கள் திருடப்பட்டிருக்கின்றன. எப்படியோ அலுவலகத்திற்குள் நுழைந்த திருடன் கையில் கிடைத்தவற்றை சுருட்டிக் கொண்டு கிளம்புவதற்கு முன் குறிப்பு ஒன்றை எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். ``டியர் பாஸ், நான் ஒரு கைக்கடிகாரம் மற்றும் லேப்டாப்பை எடுத்துக்கொண்டேன். நீங்கள் உங்களது செக்யூரிட்டி சிஸ்டத்தை அப்கிரேடு செய்ய வேண்டும். உங்கள் பிஸினஸுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பயந்து, நான் எல்லா போன்களையும், லேப்டாப்பையும் எடுக்கவில்லை. உங்களின் லேப்டாப் மற்றும் போனை திரும்ப பெற வேண்டுமென்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்’’ என்று குறிப்பிட்டு சென்றுவிட்டார்.theif Motivation Story: சின்சியரா இருக்குறது தப்பா பாஸ்?! - பாடம் சொல்லும் கதை! இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த நபரின் பெயர் சாங் என அறிந்தனர். கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் அவர் விட்டுச்சென்ற தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி அ...